Monday, March 18, 2024

பேரனின் முதல் பிறந்தநாளை நல்ல முறையில் நடத்திக்கொடுத்த எம்பெருமாளுக்கு 🙏🙏🙏🙏

நம்முடைய சம்ப்ரதாயப்படி ஆயுஷ்ஹோமம், பேரனுடைய ஜென்ம நக்ஷத்திரத்தின்படி  இந்த மார்ச் மாதம் எட்டாம் தேதி, நம்முடைய புள்ளையார் கோவிலில் நம்ம நேபாள் பண்டிட்  அவர்களால் நடந்தது !

அன்று மஹாசிவராத்ரி பண்டிகை என்பதால்  24 மணிநேரமும்  முதல்முறையாகக் கோவிலைத் திறந்துவைத்திருந்தோம் !


 ஃபேஸ்புக்கில் இட்ட பதிவின் சுட்டி மேலே ! 









நேற்று நம் உள்ளூர் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு பிறந்தநாள் விழாக் கொண்டாடினோம்.






 ஃபேஸ்புக்கில் இட்ட பதிவின் சுட்டி மேலே ! 


இன்றுதான்   கேலண்டர்படி பிறந்தநாள் !  குழந்தை வீட்டுக்கு வந்துபோனான்.





வீட்டுக்கு வாங்க, டீ குடிக்கலாமுன்னு கூப்பிடலாமா ?

மகள் ரெண்டு செல்லங்களை வளர்க்கிறாள்.  அவுங்க ஊரில் இல்லாதப்ப நாங்க காலையில்  போய்  பசங்களுக்குச் 'சோறு ' போட்டுட்டு வருவோம். சாயந்திரம், ஒரு  பெண் போய், சாப்பாடு கொடுத்துட்டு,  லிட்டர் ட்ரே எல்லாம் சுத்தப்படுத்திட்டுப் போவாங்க. அதுக்குத் தனியா கட்டணம் அடைக்கணும். 
 
சரிய்யா........... தீபாவளி முடிஞ்ச மறுநாள் நம்ம  சரா ஃபேஷன்ஸ் அனுப்பி வச்ச பார்ஸல் வந்துச்சு. அதுலேதான்  நமக்கான தீபாவளிப் புதுத்துணிமணிகள் இருக்கு.  உடனே பிரிச்சுப் பார்த்துட்டேன்.  ஜன்னுவுக்கு  வழக்கமா அனுப்புவதோடு நம்ம குட்டனுக்கும்  புதுசு அனுப்பி இருந்தாங்க. அதான் புள்ளி ஊரில் இல்லையே..... வந்தாட்டு தீபாவளி கொண்டாடிக்கணும்.

இந்தியப் பஞ்சாங்கம் பார்த்துத்தான்  நியூஸியில் நம்ம வீட்டிலும் கோவிலிலும்   எல்லாப் பண்டிகையும் கொண்டாடறோம். ஆனால் ஃபிஜி மக்களுக்குத் தனிப்பஞ்சாங்கம் இருக்கு. ஃபிஜியும் நியூஸியைப்போலவே  டேட் லைனில் இருப்பதால் ,  ஒரே நேரம்தான்.  ஆனால் இந்தியாவுக்கும் ஃபிஜி & நியூஸிக்கும் நேர வித்தியாசம் அதிகம். காலை 6 மணி நல்ல நேரமுன்னு இந்தியப் பஞ்சாங்கம் சொன்னால்..... அப்போ எங்களுக்கு  டேலைட் ஸேவிங் இல்லாத காலத்தில் பகல் பனிரெண்டரை மணியும், டே லைட் ஸேவிங் இருக்கும்போது  மத்யானம் ஒன்னரைமணியுமாக இருக்கும். அதனால் ஃபிஜி பஞ்சாங்கப்படி நம்ம இந்திய தீபாவளி  முடிஞ்ச மறுநாள்தான் திவாலி.  திவாலி மட்டுமில்லை....  எல்லாப்பண்டிகைகளும் இப்படித்தான் !


நம்ம பக்கத்துத் தெருவில் இருக்கும் ஃபிஜித்தோழி, இந்த வருஷமாவது கட்டாயம் தீபாவளிக்கு வீட்டு விஸிட் செய்யணுமுன்னு  வற்புறுத்திச் சொல்லிட்டாங்க.  'டின்னருக்கெல்லாம் வர நேரமில்லை. சாயங்காலம் டீ குடிக்க வர்றோமு'ன்னு சொல்லியிருந்தேன்.  இதில்கூடப் பாருங்க நியூஸியில் டீ டைம் னு சொன்னால் அது டின்னர் டைம்.  நம்ம இந்தியத்தோழி ஒருத்தர்  அவுங்க நண்பர்களை  மாலை 4 மணிக்கு   டீ குடிக்கக் கூப்பிட்டு இருந்தாங்க. இண்டியன் டீ ன்னு தோழி நினைக்க, வந்துருந்த வெள்ளைக்கார நட்புகள், நாலு  மணிக்கு வந்து ஸ்நாக்ஸ், டீ எல்லாம் முடிச்சுட்டு உக்கார்ந்து பேசிக்கிட்டே இருந்துருக்காங்க.  பொதுவா இங்கே மாலை 6 மணிக்கே டின்னர் (கிவிக்களின் டீ )எடுத்துப்பாங்க என்றதால்....  அவுங்க டீக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருந்துருக்காங்க. நம்ம தோழியும் கணவரும்...... 'என்னடா.... டீ எல்லாம் குடிச்சு முடிச்சு இவ்ளோ நேரமாச்சு. இன்னும்  எழுந்து போகாம உக்கார்ந்துருக்காங்களே' ன்னு  முழிச்சுக்கிட்டு இருந்துருக்காங்க. 
அப்புறம் விருந்தினரில் ஒருவர், டைனிங் டேபிள் செட் பண்ண ஹெல்ப் செய்யவான்னு கேட்டதும்தாம் விஷயம் புரிஞ்சுருக்கு !  இதோ கொஞ்ச நேரத்தில் ரெடியாகிருமுன்னு சொல்லி சமாளிச்சுட்டு, ஓடிப்போய்   இண்டியன் சாப்பாட்டுக் கடையில் டேக் அவேன்னு பார்ஸல் வாங்கி வந்து ஒப்பேத்திட்டாங்க.  நம்ம இண்டியன் ஸ்டைலில் டீ பார்ட்டிக்கு வாங்கன்னு  கூப்பிட என்ன சொல்லணும், தெரியுமா ?  Please come at 4 PM for a cuppaa !


 ஃபிஜித்தோழி வீட்டில் திவாலி மிட்டாய் என்ற பெயரில் ஏகப்பட்ட நொறுக்ஸ் பண்ணி வச்சுருந்தாங்க.

நாம் ஃபிஜியில் இருந்தபோதும், இப்படித்தான்  ஊர்வழக்கப்படி ஒரு வாரத்துக்கு முன்னாலேயே  மிட்டாய் செய்ய ஆரம்பிப்போம். அக்கம்பக்கத்து வீட்டு மக்கள் உதவிக்கு வருவாங்க. ஒரு நாள் ஒரு வீடுன்னு எல்லோருமாப்போய் செஞ்சு கொடுப்பாங்க. அப்புறம் திவாலியன்னிக்கு தட்டுகளில் விளம்பி அக்கம்பக்கம் போய்க் கொடுக்கணும். எல்லா வீடுகளிலும் ஒரே மாதிரி வகைகள்தான். ஏறக்கொறைய ஒரே ருசிதான். ஆனாலும் தட்டுகள் உலா வருவதையும் போவதையும் தடுக்க  முடியாது :-) 

இது இந்த இடும்பிக்குப் போரடிச்சுப்போய், ஒரு வருஷம் மெனுவை மாத்திட்டேன். இந்தியாவிலிருந்து ஒரு  சமையல் ஸ்பெஷலிஸ்ட் ஃபிஜிக்கு  விஸிட் வந்துருந்தார். அவரிடம் நம்மூர் ஜாங்கிரி, மிக்ஸர், பக்கோடான்னு செஞ்சு வாங்கிக்கிட்டோம்.  அவருக்கும் ஊர் சுத்திப்பார்க்கும் செலவுக்கு ஆச்சு !  நம்ம விஜயா அக்காவும், டாக்டர் தங்கவேலுவும், நாங்களுமா (மூவரும் இந்தியா இந்தியர்கள் ) கூட்டு சேர்ந்துக்கிட்டோம்.
கொஞ்சநேரம் தோழி வீட்டில் உக்கார்ந்து பேசிட்டு, நொறுக்ஸும் டீயுமா  உள்ளே தள்ளிட்டு வந்தாச். அப்போ எங்களுக்கு வசந்தகாலம் முடிஞ்சு கோடை வர்றதுக்கு ரெண்டரை வாரம்தான் இருக்கு. பகல் பொழுதுகள் அதிகம். சூரியன் மறையவே ராத்ரி  எட்டுக்கு மேல் ஆகும். அப்புறமும்  ஒரு ,ஒரு மணி நேரத்துக்கும் கூடுதலா ட்வைலைட்!  வானம் தினமும் ஒரு கோலம் காண்பிக்கும். கோடை வந்தால்  அஸ்தமனம் ஒன்பதரைக்கும், அடுத்த ஒன்னரை மணி நேரம்  ட்வைலைட்ன்னு  ராத்ரி பதினோன்னுவரை  வெளிச்சம்தான்.      
வீட்டுத்தோட்டத்திலும் பூச்செடிகள் கடமை தவறாமல் இருந்தன.  பதிமூணு வருஷமா  வளர்த்துவரும்   கள்ளிச்செடி ஒன்னு, முதல் முறையா மொட்டு விட்டுருக்கு. என்ன நிறமுன்னு தெரியலை. மொட்டைப் பார்த்தால் வெள்ளைப்பூன்னு தோணுது.




எப்பவும் போல வீக்கெண்ட்தான் ரொம்ப பிஸியா இருக்கு.  இன்னும் கொலுப்படிப் பெட்டிகளைத் திறந்து  பார்க்கலை. எப்படிப் படிவரிசைகள் வருமோன்னு தெரியலைன்னு பேசிக்கிட்டு இருந்தோம். நம்மவன் வேற அந்தப்பொட்டிகளைப் போய்ப்போய் பார்த்துக்கிட்டு இருந்தான். சரி எப்படித்தான் இருக்குன்னு பார்க்கலாமுன்னு பொட்டிகளைத் திறந்தார்.  சின்னச் சின்ன அளவில்  ஏகப்பட்ட  ப்ளாஸ்டிக் தண்டுகள். அவைகளை இணைக்கும் விதம், செய்முறை எல்லாம்  வச்சுருக்காங்க. ஆனால் நல்ல ப்ரிண்ட் இல்லாமல்,  ஃபோட்டோகாப்பி எடுத்தவைதான். எழுத்தெல்லாம் ஒரே மங்கல்.




ஒரே ஒரு படி வச்சுப் பார்க்கலாமுன்னு எடுத்தது நம்ம தப்பு ..... அப்படி செய்ய முடியாதுன்னு அப்புறம் தெரிஞ்சது.  மொத்தமாத்தான்  உருவாக்கணும்.  மொதல்லே அவுங்க கொடுத்த  குறிப்புகளைப் புரிஞ்சுக்கவே ரொம்ப நேரமாச்சு.   இங்கே சீனாவிலிருந்து வரும் DIY (Assembly required )  பொருட்களுக்கெல்லாம்  குறிப்புகள் பக்காவா இருக்கும். நான் குறிப்பைப் படிச்சுச் சொல்லச்சொல்ல நம்மவர் பொருத்திருவார்.   காலையில் பத்தரைக்கு ஆரம்பிச்சது....  பாதிவேலை முடியவே ராத்ரி பதினொன்னரை ஆச்சு. நம்மவனுக்கு  போரடிச்சாலும் கூடவே இருந்தான்.   
இனி முடியாதுன்னு அப்படியே விட்டுட்டோம்.  இன்னொருநாள்  தொடரணும்.....  


Thursday, March 14, 2024

தீபாவளி ஓட்டம்!

சிவாலய ஓட்டம்னு நாரோயில் கன்யாகுமரி பக்கங்களில் கேட்டுருப்பீங்கல்லெ ? தீபாவளி ஓட்டம் கேட்டதுண்டா ?  இப்ப இடும்பியின் தீபாவளி ஓட்டம் கேட்கப்போறீங்க :-)
முந்தியெல்லாம் சத்சங்கம், இல்லே உள்ளூர் ஆன்மிகக்குழுக்கள், க்ளப்கள் இப்படி தீவாலிதானே இருந்துச்சு. இப்ப நம்மூரில் கோவில்கள் வந்துருச்சு. எல்லாக் கோவில்களிலும் பண்டிகைகள் நாட்களிலேயே   சம்பந்தப்பட்டப் பண்டிகைகள் கொண்டாடத்தான் வேணும் இல்லையா ?  வீக்கெண்டுக்கு ஒத்திப்போட முடியுமா ?  அந்தக் கணக்கில்  நம்ம கோவில்களில் எல்லாம் இன்றைக்குத் தீபாவளிக்கான சிறப்புப்பூஜைகள்! எல்லாக் கோவில்களில் இருந்தும் அழைப்பும் அனுப்பிட்டாங்க. நம்ம கோவில்களுக்கு நாமே ஆதரவு தரலைன்னா எப்படி ? அதுவும் இந்த வருஷம் (2023 ) எல்லா முக்கிய பண்டிகைகளும் சொல்லி வச்சாப்லெ ஞாயித்துக்கிழமைகளில் வந்துருக்கு !

காலையில் 'கங்கா ஸ்நானம்' முடிச்சு, ஒரே ஒரு இனிப்பு (பால்பாயஸம் ) மட்டும் செஞ்சு நம்ம பெருமாளுக்கு அம்சி பண்ணிட்டுக் கிளம்பினோம்.  மணி பதினொன்னுக்குப் பக்கம். வீட்டாண்டை இருக்கும் அன்பு விநாயகர் தரிசனம் முதலில் ! 

அங்கே கூட்டமான கூட்டம்.  வீட்டு வளாகம் என்றபடியால்   சின்னக்கூட்டமே, பெருசாத் தெரியும்.  ஆனால்  இன்றைக்கு உண்மையிலேயே  கூட்டம் அதிகம். ஞாயிறு என்பதும் ஒரு காரணமே !  புள்ளையாரைக் கிட்டக்கப்போய்க்கூடப் பார்க்க முடியலை.  ஆரத்தி முடிஞ்சதும்..... மஹாப்ரஸாத விநியோகம்,  வளாகத்தின் மறுபக்கம் இருக்கும் டான்ஸ் ஸ்டூடியோவில். கூட்டம் எல்லாம் அங்கே போனதும் நான் போய்  ஸ்வாமி நமஸ்காரம் பண்ணிக்கிட்டேன். 



அலங்காரம் அட்டகாசமா இருக்கு ! புது ப்ரபையில் ஜொலிக்கிறார் !
நம்ம நண்பரின் கேட்டரிங்தான் ஸ்பான்ஸார் செஞ்சுருந்தாங்க. எல்லோரும் உக்கார்ந்து சாப்பிட இடம் போதாது என்பதால் ஸ்டைரோஃபோம் பேக்கில்  பார்ஸல் பண்ணித்தரும் ஏற்பாடு. நம்மால் ஆன சிறு உதவின்னு நாங்களும்  கொஞ்சநேரம் விளம்பினோம்.  நம்மவருக்குப் பிடிச்ச உதவி.  உச்சிகால பூஜை முடிஞ்சு ஆரத்தி தரிசனம் ஆனதும் கோவிலை மதிய நேரத்துக்கு மூடிட்டுச் சாயந்திரம் 6 மணிக்குத் திறப்பாங்க.
 




நாங்களும் வீட்டுக்கு வந்துட்டு, ரெண்டே முக்காலுக்குக் கிளம்பி ஸ்ரீ ஸ்வாமிநாராயண் கோவிலுக்குப் போனோம்.  பொதுவா தீபாவளிக்கு மறுநாள் நடக்கும் அன்னக்கூட் விழாவை, ஞாயிறு ஆனதால் அன்றைக்கே வச்சுருக்காங்க.



அன்னக்கூட் தரிசனம் ஆச்சு.  புதுசா ஸ்ரீ நாராயண் &  நீல்கண்ட்  மஹராஜ் விக்ரஹங்கள்  அங்கங்கே வச்சுருக்காங்க. சூப்பர் !  எங்கே கிடைக்குதுன்னு விசாரிக்கணும். மூளையில் முடிச்சு ! 
ஒரு பக்கம் சின்ன மேடையில் பஜனைப்பாடல்கள் பாடிக்கிட்டு இருக்காங்க.  பாடகர் நமக்கு நெருங்கிய நண்பர்.  ! கொஞ்ச நேரம் இருந்து கேட்டுட்டுக் கிளம்பினோம்.   ரெண்டாம் நாள்  கோவில் நண்பர் மூலம் ப்ரஸாதம் & கேலண்டர்  கொடுத்தனுப்பினாங்க.
வீட்டுக்கு வந்து, நம்மவனுக்கு சாப்பாடு விளம்பிட்டு, நாங்களும் ஒரு டீ போட்டுக் குடிச்சுட்டு, நம்ம ஹரே க்ருஷ்ணா கோவிலுக்கு ஓடினோம். கோவர்தன பூஜா !


அர்ச்சகர் ட்யூட்டியில் நம்ம நண்பர்!  சேலத்துக்காரர்.  பொதுவா விசேஷ தின அபிஷேகம், ஆரத்தியெல்லாம் இவர் பொறுப்பில்தான் நடக்குது.  (இவருடைய கல்யாணம் இங்கே கோவிலில் நடந்தபோது, அம்மா அப்பா ஸ்தானத்துலே இருந்தது நாங்கதான் ! )

கோவர்தன கிரிக்கு முந்தியெல்லாம்  எல்லா பக்தர்களுமே  இனிப்ப வகைகளை சமர்ப்பிப்பதுபோல் இல்லாமல் இந்த வருஷம்,  கோவில் மக்களில் சிலர் மட்டும் படைச்சாங்க. ஆரத்தி பூஜை ஆச்சு ! 
அதுக்குப்பிறகு ஒரு நாடகம். இந்திரனுக்குப் பூஜை செய்யாமல், கோவர்தன மலைக்குப் பூஜை செய்யும்படி, கண்ணன் சொல்ல, அப்படியே ஆச்சு. கோபம் கொண்ட இந்திரன், கடும் மழையைப் பொழியச் செய்தது, ஊரே வெள்ளத்தில் மூழ்க, கோவர்தன மலையை அப்படியே கண்ணன் தன் சுண்டுவிரலால் தூக்கிப்பிடிச்சதும், அதனடியில் மக்களும், மாக்களும்,   ஆ நிரைகளும் கூடி நின்னு மழைக்கொடுமையில் இருந்து தப்பிச்சதும், கடைசியில்  இந்திரன் தோற்றுப்போய் கண்ணனிடன் மன்னிப்பு கேட்டு மழையை நிறுத்தியதும் நாடகமாய் நம் கண்முன். சும்மாச் சொல்லக்கூடாது....   பிள்ளைகள் நல்லாவே நடிச்சாங்க. கண்ணன், நம்ம தோழியின் இளைய மகன்தான் !

நாடகம் ஒரு  13 மினிட்தான். ஃபேஸ்புக்கில் ஒரே பதிவில் மூணு வீடியோ க்ளிப்ஸ் போட்டுருக்கேன். , நேரம் இருந்தால் நீங்களும் பார்த்து ரசிக்கலாம்


https://www.facebook.com/1309695969/videos/366982562338600/

https://www.facebook.com/1309695969/videos/366982562338600/

https://www.facebook.com/1309695969/videos/991020755302400/

நாடகம் முடிஞ்சதும்  மூலவர் சந்நிதியில் தாமோதர மாசத்துக்கான நெய்விளக்கு ஏற்றிட்டுப் ப்ரஸாதம் மட்டும் வாங்கிட்டுக் கிளம்பினோம்.  விருந்துக்குக் காத்திருக்க நேரமில்லை.!

ஓடு..... நம்ம புள்ளையார் கோவிலுக்கு.....



சின்ன அகல்கள் ஏற்றி வரிசையாக வச்சு (தீப வளி)பூஜை ஆரம்பிக்கும்போது  நேரம் நாம் ஆஜர்!  ஆரத்தி தரிசனம் ஆனதும்  கொஞ்சம் ப்ரஸாதவகைகளை ஸ்வீகரிச்சதும் கிளம்பி நேரா வீடுதான். 

தீபாவளிக்குக் கொஞ்சம் பட்டாசு கொளுத்தினால்தானே பண்டிகை பூர்த்தியாகும் இல்லையா ? 

மூணு வருஷத்துக்கு முன்னே வாங்கி வச்ச பட்டாஸ் பொட்டியில் இருந்து கொஞ்சமா ஒரு நாலண்ணம் மட்டும் எடுத்துக் கொளுத்தியாச்சு. இந்த வருஷம் பட்டாஸ் விற்பனை  யாரோ தனியார் மூலமாக.  நாம் வாங்கிக்கலை. 

முந்தியெல்லாம் ஐ ஃபாக்ஸ் டேன்னு நவம்பர் 5 ஆம் தேதி விழா சமயம், முதல் ஐந்து நாட்களுக்குப் பட்டாஸ் விற்பனை உண்டு.  அதுவும் பயங்கர சப்தத்தோடு வெடிக்கும் வெடிகளுக்கெல்லாம் இங்கே அனுமதி இல்லை. நோ ஓசை. ஒளி மட்டுமே ! இப்போ ரெண்டு வருஷமா, இந்த  Guy Fawkes Day கொண்டாட்டமா  சிட்டிக்கவுன்ஸில் நடத்தும்  Fireworks display நிறுத்திட்டாங்க.  அதனால் பட்டாஸ் விற்பனை முன்புபோல் இல்லை !

யாராக்கும் இந்த கைஃபாக்ஸ் ? வெள்ளையர்களின் நரகாசுரன் !  விவரம் தெரிஞ்சுக்கணுமுன்னா..... உங்கள் துளசிதளத்தில் பாருங்க. இதோ சுட்டி !

https://thulasidhalam.blogspot.com/2012/11/blog-post_5.html

ஆ.....  தீபாவளி ஓட்டத்தோடு, இடும்பியின் தீபாவளி முடிஞ்சதுன்னு யாரும் நினைச்சுறாதீங்க..... நம்ம வீட்டுலே  தீபாவளி அடுத்த வாரம்தான் ! 
முக்கிய புள்ளி, ஊருக்குப்போயிருக்கு, கேட்டோ !