Thursday, October 28, 2004

யூனிடி இன் டைவர்சிடி !!!!

ஃபிஜி அனுபவம் பகுதி 12 ரமாயண் மண்டலி!!!!!!
**********************

' மங்கள் கோ ஹமாரி கர் பர் ரமாயண் படே. ஜரூர் ஆனா!'



'மங்கள் கோ ஹமாரி கர் பர் ரமாயண் படே. ஜரூர் ஆனா!'

இது என்னவா? அழைப்பு! செவ்வாய்க்கிழமை அவுங்க வீட்டுலே ராமாயணம் படிக்கறாங்களாம்.
நாம் அவசியம் வரணுமாம்!

கல்யாணத்துலெ ஆரம்பிச்சு, சாவு வரைக்கும் ஆன்னா ஊன்னா ராமாயணம் படிச்சுருவாங்க! செவ்வாய்க் கிழமை
என்று இல்லை! எந்த நாளாக வேண்டுமானாலும் இருக்கும்.

நிறைய ரமாயண் மண்டலிகள் இருக்கின்றன! நல்லதாக, பெரிய எழுத்தில் இருக்கும் பெரிய 'சைஸ்' புத்தகம்.
அதற்கு என்று சிவந்த நிறத்தில் ஜரிகை வேலைப்பாடுடன் கூடிய பட்டுத் துணி. அந்தப் புத்தகத்தை வைப்பதற்கு
அளவான ஒர் பை! இதுவும் பூவேலை செய்யப்பட்டு படுஅலங்காரமாக இருக்கும்! பிரித்த புத்தகத்தை வைக்க ஒரு
மடக்கு ஸ்டேண்ட்டு.

இந்த அலங்காரம், அளவு எல்லாம் எல்லாருக்கும் பொது! அநேகமாக 'துளசிதாஸர் எழுதின ராமாயணம்'தான்!

குறைந்தபட்சம் ஒன்பது பேர் அந்த மண்டலியைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். ஹார்மோனியம், மிருதங்கம் போல
உள்ள ஒரு டோலக், சலங்கைகள் வைத்த ஒரு ஜால்ரா, அப்புறம் நீளமான ஒரு கம்பியில் சில மணிகள் கோர்த்திருக்கும்
மற்றொரு ( பெயர் தெரியாத) வாத்தியம், மற்றவர்கள் பாட்டு. அதிலும் ஒருவர் 'லீட் சிங்கர்'


ஒரு மண்டலியில் இருப்பவர்களே அநேகமாக எல்லா மண்டலிகளிலும் இருப்பார்கள். வேறு மண்டலி என்று போனால்
முந்தாநாள் இன்னொரு மண்டலியில் கதை சொன்னவர்தான் இங்கேயும் சொல்வார். கதை கேட்பவர்களும் அநேகமாக
ஒரே கூட்டம்தான். அப்புறம் எதற்கு ஒவ்வொரு பெயரில் இந்த ரமாயண் மண்டலி இருக்கிறதென்று இதுவரை தெரியவில்லை!

இவர்கள் பிரார்த்தனையும், மிகவும் எளிய பேச்சு மொழியிலேயே இருக்கும். சம்பிரதாயமான விஷயங்கள் முடிந்ததும்
வீட்டு உரிமையாளர்கள் வந்திருந்த எல்லோருக்கும் நன்றி தெரிவித்து அனைவரும் உணவு அருந்திச் செல்ல வேண்டுமென்று
கேட்டுக் கொள்ளுவார்கள்.

ராமாயணம், சில அத்தியாயங்கள் படித்துக் கதை சொல்வதோடு இது முடியாது. அதன் பின் பிரசாதம் வழங்கப்படும். அப்புறமும்
முடியாது. இரவு உணவும் தயார் செய்திருப்பார்கள். அதையும் சாப்பிட்டுவிட்டு, கதை கேட்க வராமல், வீட்டிலிருக்கும் ஆட்களுக்கும்
'பார்ஸல்' கொடுத்து அனுப்புவார்கள்!

கதை கேட்கவரும் ஆட்கள் ஹிந்துக்கள் மட்டுமல்ல. இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் எல்லோரும் வருவார்கள். அவர்கள் வீடுகளிலும்
இது போன்ற பூஜைகள் வேறு பெயரில் நடக்கும்! பைபிள் வாசிப்பார்கள். அதற்கும் எல்லோரும் போவோம்! எல்லாத்துக்கும்
எல்லோரும்!!

பூஜையில் ஒரு 'ஹவனும்' உண்டு. நம் நாட்டில் தீ வளர்த்து 'ஹோமம்' செய்கிறார்களே அதுதான் இது! 'காங்க்ரீட்'கொண்டு செய்த
ஒரு சதுர வடிவ ஹோம குண்டம், (தூக்குவதற்கு வசதியாகக் கைப்பிடியெல்லாம் இருக்கும்) எல்லா மண்டலிகளிலும் இருக்கும்!

பூஜை முடிந்ததும் அதை, 'அலேக்'க்காகத் தூக்கி வெளியில் வைத்து அணைத்து விடுவார்கள். குழுவினருக்காக 'யக்கோனா' கலக்கப்படும்!

வாராவாரம் இந்த மாதிரி ஏதாவது இருந்துகொண்டே இருக்கும்.

பிரசாத வகைகள் கட்டாயம் ஏழு விதங்கள் இருக்கும்.

பழங்கள், பால் சாதம், மாவிளக்கு மாவு போல இனிப்பு சேர்த்த ஒரு மாவு, ரவா லட்டு, பரா ( வடை தான்) ஹலுவா.
இந்த ஹலுவா, ரவையும், பாலும் , சக்கரை, நெய் சேர்த்து உண்டாக்கிய கேசரி. ( நல்லா, அல்வா கொடுங்கறாங்க!)

இரவு உணவு இப்படி. பூடி ( எல்லாம் நம்ம பூரிதான். பூரின்னு சொல்லக்கூடாதாம். அது என்னவோ கெட்ட வார்த்தையாம்!)
சாதம், ஆலு பைங்கன், டமாட்டர் சட்னி, தால், ஒரு ஸாலட், ஊறுகாய், பப்படம், இம்லி சட்னி, இது ஸ்டாண்டர்ட் மெனு.
அப்புறம் அந்தந்த வீடுங்களைப் பொறுத்து இன்னும் பல தினுசுகள்.

ஆமாம். இதையெல்லாம் சமைப்பது யார்? எல்லாம் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள்தான். காலையிலிருந்து எல்லோருமாகச் சேர்ந்து
சமைப்பார்கள். வேலை முடிந்ததும் அவரவர் வீட்டுக்குப் போய்விட்டு, மாலையில் அப்போதுதான் அங்கெ வருவதைப் போன்று
அலங்காரவதிகளாக அட்டகாசமாக வந்து சேர்வார்கள்.

பூஜைக்கு என்றில்லை எந்த விதமான விழா என்றாலும் நாம் அழைத்தவுடன் வந்து எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுச்
செய்து தருவார்கள். இப்படி இல்லையெனில், எங்கள் மகளின் 'மொட்டை அடித்துக் காது குத்தும் விழா'வுக்கு 300 பேருக்கு
சமைத்திருக்க முடிந்திருக்குமா?

அந்த ஊரின் 'மேயர் ( இவர் பிறகு அமைச்சராக ஆனார்) அவர்களின் மனைவி உட்பட எல்லோரும் வந்து இரண்டு நாட்கள்
சமையலுக்கு உதவினர்.'பந்தா' வெல்லாம் கிடையாது. பிறந்த நாள் விழாவுக்குப் பிரதமரைக் கூட அழைக்கலாம்! ரொம்ப எளிமையான
மக்கள்.

ஒரு தடவை, தெரிந்தவர் ஒருவர் வற்புறுத்திக் கூப்பிட்டார் என்று அவர்கள் வீட்டுப் பூஜைக்குப் போனோம். வழக்கம்போல எல்லாம் படித்து
முடித்தபின் அவர்கள் எல்லோருக்கும் நன்றி தெரிவித்தார்கள். அப்போதுதான் தெரிந்தது அந்த விசேஷம் எதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
என்று.

விவாகரத்து செய்திருந்த பெண்மணி தெரிவித்தது, முன்னாள் கணவரின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கவாம்!


Monday, October 25, 2004

மேலிடத்து ஊறுகாய் !!!!!

ஃபிஜி அனுபவம் பகுதி 11
***********************

நான் ஏற்கெனவே எழுதுனமாதிரி, இங்கே இந்தியக் காய்கறிகளுக்கும், மாமரம் புளியமரம் போன்றவைகளுக்கும் பஞ்சமே இல்லை!


நான் ஏற்கெனவே எழுதுனமாதிரி, இங்கே இந்தியக் காய்கறிகளுக்கும், மாமரம் புளியமரம் போன்றவைகளுக்கும் பஞ்சமே இல்லை!



ஏற்கெனவே எழுதுனமாதிரி, இங்கே இந்தியக் காய்கறிகளுக்கும், மாமரம் புளியமரம் போன்றவைகளுக்கும் பஞ்சமே இல்லை!

நாங்க இங்கே வருவதற்கு முன், இங்கிருந்து ஒருவர் ( நமக்கு வரப்போகிற முதலாளியின் மருமகன்!) இந்தியாவில் நம் வீட்டிற்கே
வந்து, இங்கே அமையப்போகும் ஃபேக்டரியைப் பற்றியும் எந்த விதமான மெஷீன்கள் வரப்போகின்றன என்றும் என் கணவரிடம்
விவாதித்துக்கொண்டு இருந்தார்.

என் கணவருக்கு உணவு வகைகளில் மிகவும் விருப்பமானது ரசம்! எனக்கு ரசம் பிடிக்குமென்றாலும் அதை செய்வதற்குப் பிடிக்காது
இவரோ எப்போதாவது மரணத்தைப் பற்றிப் பேச்சு வரும்போது இப்படிச் சொல்வார். "நீ சாகறதுக்கு முன்னாலே ஒரு பெரிய
பாத்திரத்துலெ நிறைய ரசம் வச்சிட்டுப் போயிடு" அநியாயம் பாருங்க! நான் செத்தாலும் இவர் ரசம் ஊற்றிக்கொண்டு சாப்பிடணுமாம்!
'பேய்க்கு வாழ்க்கைப்பட்டா கதை தெரியுமா?'அதை நினைத்துக் கொண்டு ரசம் செய்வேன்.

இப்போது ஃபிஜிக்கு போகணுமே. அங்கே எப்படி இருக்கும் என்றெல்லாம் தெரியாதே என்று கவலையாக இருந்தது. அப்போது
இது போன்ற இணையம் வசதிகள், அவ்வளவு ஏன்? கணினி கூடக் கிடையாதே ( 22 வருடங்களுக்கு முன்) பூனாவில் ஏதாவது
தகவல் கிடைக்குமா என்று தேடினோம். பம்பாயில் உள்ள 'பிரிட்டிஷ் நூலகத்தில்' கிடைக்கலாம் என்றார்கள்.

நல்லவேளையாக இப்போது அங்கிருந்து ஒருவர் வந்திருக்கிறார். அவரிடமே கேட்டுவிடலாம் என்று நினைத்தேன்.

"ஃபிஜியில் புளி கிடக்குமா?"

"தாராளமாகக் கிடைக்கும். அதுவும் இனாமாக! நிறைய புளிய மரங்கள் இருக்கிறது"

" இன்னும் ஏதாவது விவரங்கள் வேண்டுமா?"

" புளி இருக்கு என்று சொன்னதே போதும். மாமரங்கள் உண்டா? மாங்காய் கிடைக்குமா?"
( இவருக்கு ஊறுகாயும் இஷ்டமாச்சே!)

இது எப்படி இருக்கு? வேறு எதுவும் கேட்கத் தோன்றவில்லை.

" கவலைப் படாதீர்கள். இந்தியாவில் கிடைப்பது எல்லாம் கிடைக்கும்!நாங்கள் எல்லாம் அங்கே இருக்கிறோம்.
தைரியமாக வாருங்கள். அங்கே சந்திக்கலாம்"

ஃபிஜி வந்தபிறகு தெரிந்துகொண்டது நாம் தனியாக இல்லை என்பது! எல்லோரும் தான் அன்பாகப் பழகுகின்றனரே!

இந்த நாட்டின் தலைநகர் சுவா என்னும் ஊர். இங்கேதான் நமது இந்தியத் தூதரகம் உள்ளது. நாங்கள் அங்கிருந்தபோது,
இந்தியத் தூதராக இருந்தவர் ஒரு 'சேட்டன்' அவரும் அவர் துணைவியாரும் மிகுந்த நட்புடன் பழகுவார்கள்.

நாங்களிருந்த ஊரில் மொத்தமே மூன்று குடும்பங்கள்தான் N.R.I. நிலமையில் இருந்தோம்.

குஜராத்திகள் இங்கே வந்தவுடனே அவர்கள் வங்கியான 'பேங்க் ஆஃப் பரோடா' வந்துவிட்டிருந்தது! அதில் வேலை செய்பவர்கள்
உள்நாட்டு ஆட்கள் என்றாலும், மேலதிகாரிகள் மட்டும் இந்தியாவிலிருந்து வருவார்கள். மூன்று வருடம் 'போஸ்ட்டிங்'
அப்படி வந்திருந்தவர்களின் குடும்பம் ஒன்று, எங்கள் குடும்பம் ஒன்று. மூன்றாவது நபர், இங்குள்ள கத்தோலிக்க தேவாலயத்தின்
பாதிரியார். கத்தோலிக்கரான படியால் அவருக்கு குடும்பம் இல்லை( அவர்கள்தான் மணம் செய்து கொள்ளக் கூடாது அல்லவா?)
தனி மனிதராக இருந்தார். அவரும் 'கேரளா'வைச் சேர்ந்தவர்.

ஹை கமிஷனர் குடும்பத்திற்கு உதவ இந்தியாவிலிருந்தே வேலையாட்களை அழைத்துவரும் உரிமை இருந்ததால், அவர்கள் ஒரு
நல்ல சமையலில் நிபுணராக உள்ள ஒரு உதவியாளரைக் கொண்டுவந்திருந்தனர்.

தூதரகத்தின் வளாகத்தில் எக்கச் சக்க மாமரங்கள் வேறு! வகைவகையான ஊறுகாய்கள் தயாரிப்பார்கள். தூதரும் அவர் மனைவியும்
அடிக்கடி இந்தத்தீவைச் சுற்றி வந்து நம்மையெல்லாம் நலம் விசாரிப்பார்கள். அப்போது நமக்குத் தேவையான ஊறுகாய்களும்
கொண்டுவந்து தருவார்கள். பெரிய பதவி என்ற 'பந்தா'வெல்லாம் கிடையாது! சேட்டனும் சேச்சியும் நல்லபோல சம்சாரிப்பார்கள்!
அவர்களுக்கு வரும் மலையாளத் திரைப்படங்களின் காஸட்டுகளையும் நமக்குக் கொண்டுவந்து தருவார்கள்.

நம் ஊருக்கு வரும்போது, நம் வீட்டில் பகலுணவுக்கு ஏற்பாடு செய்வோம். மற்ற என். ஆர்.ஐ. களும் வந்து கலந்து கொள்வார்கள்.

இங்கிருந்து ஒரு 44 மைல் தூரத்தில் நாண்டி என்ற ஊர் உள்ளது. இதுதான் பன்னாட்டு விமான தளம் இருக்குமிடம். இங்கேயும்
ஒரு கேரளக்குடும்பம் இருக்கிறது. வார இறுதிகளில் நாங்கள் அங்கே போவதும், அவர்கள் இங்கே வருவதுமாக நாட்கள் போனது!

அப்போது அங்கே தொலைக்காட்சி வந்திருக்கவில்லை! எங்களது ஒரே பொழுது போக்குத் திரைப்படம் காணுதல்! குஜராத்திகள்
நடத்தும் கடைகளில் வீடியோ காஸட்டும் வாடகைக்குக் கிடைக்கும். ஹிந்திப் படங்கள். இந்தியாவில் 'ரிலீஸ்' செய்யும் தினமே
இங்கேயும் கிடைக்கும். வாடகை ஒரு நாளைக்கு ஒரு டாலர்தான்!

அநேகமாக எல்லாப் படங்களையும் முதல்நாள் முதல் ஷோ என்று பார்த்துக் கொண்டிருந்தோம்! இந்தியாவுக்கு ஃபோன் செய்யும்போது
இன்ன படம் பார்த்தோம் என்று சொன்னால், அவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்! இங்கே ஹவுஸ் ஃபுல். டிக்கெட்டே கிடைக்கவில்லை'
என்பார்கள். நாங்கள் ஹாயாக வீட்டில் உட்கார்ந்துகொண்டே பார்த்துவிடுவோம்!

அப்போது தமிழ்ப் படங்கள் சில சமயம் நாண்டியில் கிடைக்கும். அந்த வீடியோக் கடைக்காரர், ஏதாவது தமிழ்ப் படம் வந்தால் எங்களுக்குத்
தொலைபேசியில் தொடர்பு கொள்வார். அவர்கள் 'குஜ்ஜு' அனதால், அந்தப் படத்தின் பெயரையும் 'கொலை' செய்து சொல்வார்கள்.
ஸ்பெல்லிங் என்ன என்று கேட்டு, அதை வாங்குவதற்காக 44 மைல் தூரம் போவோம்! ஒரு படத்துக்கு 88 மைல் பிரயாணம் செய்தது
அக்கிரமம் என்று இப்போது தோன்றுகிறது!


இன்னும் வரும்
***************


Sunday, October 24, 2004

சோதனை - Test.

Test- Please ignore.


சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

Saturday, October 23, 2004

ரக்பி த பிக் கேம்!!!!!

ஃபிஜி அனுபவம் பகுதி 10
***********************

நாளை என்பதைப் பற்றிய கவலையே இல்லாத மக்கள்! அவர்கள் தேவைகள் மிகவும் குறைவு என்பதால் எப்போதும்
முகத்தில் சிரிப்பு இருந்துகொண்டே இருக்கும்!

இங்கு அடிக்கிற வெயிலுக்கு ஆடைகள் கூடுதலாக அணிவதே கஷ்டம்தான். ஆகவே நெஞ்சுவரை ஏற்றிக்கட்டிய சுலுவுடன்
சர்வ சகஜமாக நடமாடுவார்கள். மரநிழல்களில் பாயை விரித்து, அப்படியே தூங்கியும் விடுவார்கள். கடலுக்கு அருகாமையில்
உள்ளவர்கள் எப்போதும் தண்ணீரிலேயே இருப்பார்கள். மீன் பிடிப்பது தூண்டில் போட்டு அல்ல. ஒரு குத்தீட்டி மாதிரி
ஒன்று மரத்தில் இருக்கும். அசையாமல் நின்றுகொண்டிருந்துவிட்டு, மீன் அருகிலே வரும்போது ஒரே வீச்சு. ஈட்டி பாய்ந்து
அடுத்த நிமிடம் மீன் தண்ணீரில் மிதக்கும்!

சில நாட்களில் அந்த மீன்களை ஒரு தென்னை ஓலையால் கட்டி, சின்னப்பிள்ளைகள் மெயின் ரோடருகில் நிற்பார்கள். ஏதாவது
வாகனம் வருவதைக் கண்டால், கை உயர்த்திக் காட்டுவார்கள். ஜனங்களும், வண்டியை நிறுத்தி, என்ன விலை என்று கேட்டு
அவர்கள் சொல்லும் விலையில் பாதியை கொடுத்து வாங்கிப் போவார்கள். புதிய மீன்களாக இருக்கும் அவற்றை வாங்குவது
அனைவருக்கும் பிடிக்கும்.
இவர்களுக்குத் தெரிந்த ஒரே விளையாட்டு என்ன தெரியுமா? இது தான் இவர்களின் தேசீய விளையாடான 'ரக்பி'
நேரம் கிடைக்கும்போதெல்லாம் விளையாடுவது இந்த ரக்பி விளையாட்டுதான்! இந்த விளையாட்டு வந்ததே ஒரு கதை(!)தான்.

'அந்தக் காலத்தில்' எதிரிகளைக் கொன்றுவிட்டு, அவர்கள் தலையை உருட்டி விளையாடினார்களாம்.நல்ல வேளை! தலையின்
இடத்தை இப்போது பந்து பிடித்துக் கொண்டது!

சரித்திரக்கதைகளில் 'எதிரிப்படையைக் கொன்று குவித்துத் தலைகளைப் பந்தாடினான்'என்று படித்தது நினைவுக்கு வருகிறதா?

இந்தப் பந்து மட்டையோடு கூடிய தேங்காய் வடிவத்தில் இருக்கும். இரண்டுபுறமும் தட்டையாக இருக்காமல் கொஞ்சம் கூம்பினது!

என்னத்துக்கு இந்த விளக்கம். ச்சும்மா முட்டை வடைவம் அதாவது டைனோசாரின் முட்டைன்னு வைத்துக்கொள்ளலாம்!
அநேகமாக இப்போது உலகில் அனைவருக்கும் இந்த விளையாட்டுப் பழக்கப்பட்டிருக்கலாம். அதுதான் எப்போதும்
தொலைக்காட்சியில் விளையாட்டுப் பகுதியில் வந்து கொண்டிருக்கிறதே.

இந்த விளையாட்டு விளையாட நல்ல உரமான உடல் வேண்டும். இந்தியர்களுக்கு அவ்வளவாக உடல் வலு இல்லாததால் பெரிய
அளவில் அவர்கள் இந்த விளையாட்டில் கலந்துகொள்வதில்லை. பள்ளிகளில் படிக்கும்போது விளையாடுவதுடன் சரி. ஆனால் எல்லார்
வீட்டிலும் ஒரு ரக்பி பந்து மட்டும் கட்டாயம் இருக்கும்!

ஃபிஜியன்களும் 'ப்ளாக் மேஜிக்' செய்வதில் வல்லவர்களாம். இந்த ரக்பி போட்டிகள் நடக்கும்போது, எதிரி அணி தோல்வி அடைய
வேண்டி மந்திரங்கள் செய்து, 'கோல் போஸ்ட்' டின் அடியில் புதைப்பார்களாம்! இதுவரை அந்த மந்திரங்கள் எல்லாம் கண்டிப்பாக
பலித்ததாகத் தெரியவில்லை. ஜெயித்துவிட்டால் மந்திரம் நன்றாக வேலை செய்தது என்றும் தோற்றுவிட்டால் எதிரி அணி நம்மைவிட
'ஸ்ட்ராங்க ஸ்பெல்' போட்டுவிட்டார்கள் என்றும் சொல்லிக் கொள்வார்கள்.

இந்த மந்திரம் செய்பவர்களுக்கு தட்சிணையாக விஸ்கி, பிராந்தி போன்ற குடிவகைகளும், யகோனாப் பொடியும் தரவேண்டுமாம்!

இந்த 'யகோனாப் பொடி 'என்பது, ஒரு வகையான செடியின் வேரைக் காயவைத்து இடித்துப் பொடிக்கும் தூள். இதைத் தண்ணீரில்
கலக்கிக் குடிப்பார்கள். இது இங்கே தேசீய அளவில் ஒரு சம்பிரதாய பானம்.

இதைக் கலப்பது என்பதே ஒரு நிகழ்வு. 'யகோனா செரிமனி' இதைக் கலக்கவென்றே மரத்தாலான ஒரு பெரிய பாத்திரம் உண்டு.
இந்தப் பாத்திரம் இவர்களது நாணயமான ஒரு சதத்தில் இடம் பெற்றுள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் இதன் முக்கியத்துவத்தை!

தேசீயத்தலைவர்கள் எந்த நாட்டிலிருந்து வந்தாலும், அரசாங்கத்தின் தரப்பில் இந்த செரிமனி நடக்கும். உடலெங்கும் எண்ணெய் பூசிக்கொண்டு
கரு கரு என்று இரண்டு ஆஜானுபாகுவானவர்கள், நாரினால் செய்யப்பட்ட சுலு கட்டிக் கொண்டு வி.ஐ.பி. முன்பு மண்டியிட்டு
அமர்ந்து இதைக் கலக்குவார்கள். அப்புறம், வழுவழுப்பாகத் தேய்க்கப்பட்ட ஒரு தேங்காய் சிரட்டையில் அதைக் கோரி இரண்டு கைகளால்
அந்த வி.ஐ.பி.க்குக் கொடுப்பர்கள். விருந்தினர் அதை வாங்கிக் குடிக்கவேண்டும். வேண்டாம் என்று மறுத்தால் அது அரசாங்கத்தையும்
அவர்களின் கலாசார(!)த்தையும் பழித்தது போலவாம்!

பார்ப்பதற்கு ஏதோ மண்ணைக் கலக்கினது போல வெளிர் நிறமாக இருக்கும் இது, குடித்தால் சுவை ஏதும் இல்லாமல் இருக்குமாம்.
ஆனால் நாக்கு மரத்துப் போவது போல இருக்குமாம். கொஞ்சம் போதையாகவும் இருக்குமாம்.

ஃபிஜியன் கிராமங்களிலும் ஆண்கள் எல்லோரும் வட்டமாக உட்கார்ந்துகொண்டு இதைக் குடித்துக்கொண்டே
பேசிக்கொண்டிருப்பார்கள.

இந்த பானம் பருகாத இந்திய ஆண்களே ( குஜராத்திகள் நீங்கலாக) இல்லை எனலாம்! வீடுகளில் நடக்கும் விழாவானாலும் சரி,
பொது விழாக்களானாலும் சரி, நம் ஆட்கள் இதை ஒரு பெரிய ப்ளாஸ்டிக் பேஸினில் கலக்கி, ஒரு துணியில் வடிகட்டி
(டீ வடிகட்டுவது போல) விடுவார்கள். இந்தப் பழக்கம் எல்லாம் யாரும் சொல்லித்தராமலேயே வந்துவிடும்!

என்னவோ சொல்ல ஆரம்பித்து எங்கேயோ போய்விட்டேன்! ஃபிஜியன் பெண்கள்் நிறையபேர் நர்ஸ் வேலை செய்கிறார்கள் என்று
குறிப்பிட்டு இருந்தேன் அல்லவா? இவர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி புரியவே விரும்புகின்றனர்.

அங்கெல்லாம் குழந்தை பிறந்த பிறகு, சுமார் மூணரை வயது வரை, இரண்டு மாதத்திற்கு ஒருமுறை வீடுகளுக்குப் போய்
குழந்தையின் வளர்ச்சியைக் கவனிப்பது வழக்கமா இருக்கிறது! இரண்டு பேர் கொண்ட அணியாகவெ இவர்கள் வீடுகளுக்குப
போவார்கள். தெரிந்தவர்களின் வீடு என்றால் கேட்கவே வேண்டாம். ஆற அமர இருந்து சாப்பிட்டு விட்டும் போவார்கள்.

இப்படி வழக்கமாக வரும் இவர்களிடம், ஒரு நாள் நம்ம 'கிரேக்'கின் கால்களைப் பற்றிப் பேச்சு வந்த போது, அவர்கள் சிரித்துக்
கொண்டே சொன்னது, ரக்பி விளையாடப்போகும் கால்கள் இல்லையா, வளர வளர சரியாகிவிடும்! இந்தியர்களுக்குத்்தான்
எப்போதும் சின்னப் பிள்ளைகளுக்கு எண்ணெய் போட்டு மசாஜ் செய்யும் பழக்கம் உண்டே அதுபோலவும் செய்யலாமெ
என்றும் குறிப்பிட்டனர். அது என்னமோ உண்மைதான். அங்கெ பழைய தமிழ் ஆட்களிடம் இந்தப் பழக்கம் இருக்கிறது.
'மாலீஷ் செஞ்சாத்தான் குழந்தைக்கு உடம்பு வலி இல்லாமல் இருக்கும். அப்பத்தான் நீட்டமா வளரும்' என்று சொல்வார்கள்.
நானும் நினைத்துக் கொள்வேன் இது என்ன புடலங்காயா? நீட்டமாக வளர என்று. ஆனால் இதெல்லாம் குழந்தைக்கு
ரெண்டு வயது வரைதான்.

அதன்பின் நம் வீட்டு வேலைகளுக்கு வரும் உதவியாளர்( அவர்களை இங்கே 'ஹெளஸ் கேர்ள்' என்பார்கள்)மூலம் இவனுக்கு
தினமும் மாலீஷ்தான்!

அவர்கள் வீடு மாடி என்பதினால் இவனும் என் மகளும், தினமும் ஒரு ஆயிரம்தடவையாவது ஏறி இறங்கிக் கொண்டிருப்பார்கள்.
எந்த மாடிப்படிக்குப் பயந்து நான் வீடு மாறினேனோ அதே மாடிப்படி இவர்களின் விளையாட்டு இடமாகிவிட்டது! கொஞ்சம்
கொஞ்சமாக இருவரும் ரக்பி பந்தை உதைத்து விளையாட ஆரம்பித்தனர்! ஒரு அஞ்சாறு மாதத்தில் அவன் கால் நேராகிவிட்டது.
பந்தை உதைத்து விளையாடினதால் சரியானதா அல்லது நம் எண்ணெய் மாலீஷின் பலனா என்று தெரியவில்லை!


ஏதாயாலும், இதுவேஇங்கு தேசீய விளையாட்டு! நிறைய ஃபிஜியன் ஆளுங்க ரக்பி ஆட்டத்துலே கெட்டிக்காரங்களாச்சே.
அவுங்க இந்தப் பகுதிகளில் ஆஸ்தரேலியா, நியூஸிலாந்து(இங்கெல்லாமும்கூட இந்த ரக்பிக்கு மதிப்பு மிக அதிகம்!) டீம்களில்
சேர்ந்து விளையாடி கோடிக்கணக்காக சம்பாதிக்கிறார்கள்! போதாக்குறைக்கு ஜப்பானுக்குவேற போய் அங்கே இந்த ஆட்டத்துக்கு
'கோச்சிங்'வேற செய்கிறார்கள்!


இது ரொம்ப முரட்டு ஆட்டம் என்பதே என் தனிப்பட்ட கருத்து!


இன்னும் வரும்.
**************




ரக்பி த பிக் கேம்!!!

ஃபிஜி அனுபவம் பகுதி 10
***********************

நாளை என்பதைப் பற்றிய கவலையே இல்லாத மக்கள்! அவர்கள் தேவைகள் மிகவும் குறைவு என்பதால் எப்போதும்
முகத்தில் சிரிப்பு இருந்துகொண்டே இருக்கும்!

இங்கு அடிக்கிற வெயிலுக்கு ஆடைகள் கூடுதலாக அணிவதே கஷ்டம்தான். ஆகவே நெஞ்சுவரை ஏற்றிக்கட்டிய சுலுவுடன்
சர்வ சகஜமாக நடமாடுவார்கள். மரநிழல்களில் பாயை விரித்து, அப்படியே தூங்கியும் விடுவார்கள். கடலுக்கு அருகாமையில்
உள்ளவர்கள் எப்போதும் தண்ணீரிலேயே இருப்பார்கள். மீன் பிடிப்பது தூண்டில் போட்டு அல்ல. ஒரு குத்தீட்டி மாதிரி
ஒன்று மரத்தில் இருக்கும். அசையாமல் நின்றுகொண்டிருந்துவிட்டு, மீன் அருகிலே வரும்போது ஒரே வீச்சு. ஈட்டி பாய்ந்து
அடுத்த நிமிடம் மீன் தண்ணீரில் மிதக்கும்!


ஃபிஜி அனுபவம் பகுதி 10
***********************

நாளை என்பதைப் பற்றிய கவலையே இல்லாத மக்கள்! அவர்கள் தேவைகள் மிகவும் குறைவு என்பதால் எப்போதும்
முகத்தில் சிரிப்பு இருந்துகொண்டே இருக்கும்!

இங்கு அடிக்கிற வெயிலுக்கு ஆடைகள் கூடுதலாக அணிவதே கஷ்டம்தான். ஆகவே நெஞ்சுவரை ஏற்றிக்கட்டிய சுலுவுடன்
சர்வ சகஜமாக நடமாடுவார்கள். மரநிழல்களில் பாயை விரித்து, அப்படியே தூங்கியும் விடுவார்கள். கடலுக்கு அருகாமையில்
உள்ளவர்கள் எப்போதும் தண்ணீரிலேயே இருப்பார்கள். மீன் பிடிப்பது தூண்டில் போட்டு அல்ல. ஒரு குத்தீட்டி மாதிரி
ஒன்று மரத்தில் இருக்கும். அசையாமல் நின்றுகொண்டிருந்துவிட்டு, மீன் அருகிலே வரும்போது ஒரே வீச்சு. ஈட்டி பாய்ந்து
அடுத்த நிமிடம் மீன் தண்ணீரில் மிதக்கும்!

சில நாட்களில் அந்த மீன்களை ஒரு தென்னை ஓலையால் கட்டி, சின்னப்பிள்ளைகள் மெயின் ரோடருகில் நிற்பார்கள். ஏதாவது
வாகனம் வருவதைக் கண்டால், கை உயர்த்திக் காட்டுவார்கள். ஜனங்களும், வண்டியை நிறுத்தி, என்ன விலை என்று கேட்டு
அவர்கள் சொல்லும் விலையில் பாதியை கொடுத்து வாங்கிப் போவார்கள். புதிய மீன்களாக இருக்கும் அவற்றை வாங்குவது
அனைவருக்கும் பிடிக்கும்.
இவர்களுக்குத் தெரிந்த ஒரே விளையாட்டு என்ன தெரியுமா? இது தான் இவர்களின் தேசீய விளையாடான 'ரக்பி'
நேரம் கிடைக்கும்போதெல்லாம் விளையாடுவது இந்த ரக்பி விளையாட்டுதான்! இந்த விளையாட்டு வந்ததே ஒரு கதை(!)தான்.

'அந்தக் காலத்தில்' எதிரிகளைக் கொன்றுவிட்டு, அவர்கள் தலையை உருட்டி விளையாடினார்களாம்.நல்ல வேளை! தலையின்
இடத்தை இப்போது பந்து பிடித்துக் கொண்டது!

சரித்திரக்கதைகளில் 'எதிரிப்படையைக் கொன்று குவித்துத் தலைகளைப் பந்தாடினான்'என்று படித்தது நினைவுக்கு வருகிறதா?

இந்தப் பந்து மட்டையோடு கூடிய தேங்காய் வடிவத்தில் இருக்கும். இரண்டுபுறமும் தட்டையாக இருக்காமல் கொஞ்சம் கூம்பினது!

என்னத்துக்கு இந்த விளக்கம். ச்சும்மா முட்டை வடைவம் அதாவது டைனோசாரின் முட்டைன்னு வைத்துக்கொள்ளலாம்!
அநேகமாக இப்போது உலகில் அனைவருக்கும் இந்த விளையாட்டுப் பழக்கப்பட்டிருக்கலாம். அதுதான் எப்போதும்
தொலைக்காட்சியில் விளையாட்டுப் பகுதியில் வந்து கொண்டிருக்கிறதே.

இந்த விளையாட்டு விளையாட நல்ல உரமான உடல் வேண்டும். இந்தியர்களுக்கு அவ்வளவாக உடல் வலு இல்லாததால் பெரிய
அளவில் அவர்கள் இந்த விளையாட்டில் கலந்துகொள்வதில்லை. பள்ளிகளில் படிக்கும்போது விளையாடுவதுடன் சரி. ஆனால் எல்லார்
வீட்டிலும் ஒரு ரக்பி பந்து மட்டும் கட்டாயம் இருக்கும்!

ஃபிஜியன்களும் 'ப்ளாக் மேஜிக்' செய்வதில் வல்லவர்களாம். இந்த ரக்பி போட்டிகள் நடக்கும்போது, எதிரி அணி தோல்வி அடைய
வேண்டி மந்திரங்கள் செய்து, 'கோல் போஸ்ட்' டின் அடியில் புதைப்பார்களாம்! இதுவரை அந்த மந்திரங்கள் எல்லாம் கண்டிப்பாக
பலித்ததாகத் தெரியவில்லை. ஜெயித்துவிட்டால் மந்திரம் நன்றாக வேலை செய்தது என்றும் தோற்றுவிட்டால் எதிரி அணி நம்மைவிட
'ஸ்ட்ராங்க ஸ்பெல்' போட்டுவிட்டார்கள் என்றும் சொல்லிக் கொள்வார்கள்.

இந்த மந்திரம் செய்பவர்களுக்கு தட்சிணையாக விஸ்கி, பிராந்தி போன்ற குடிவகைகளும், யகோனாப் பொடியும் தரவேண்டுமாம்!

இந்த 'யகோனாப் பொடி 'என்பது, ஒரு வகையான செடியின் வேரைக் காயவைத்து இடித்துப் பொடிக்கும் தூள். இதைத் தண்ணீரில்
கலக்கிக் குடிப்பார்கள். இது இங்கே தேசீய அளவில் ஒரு சம்பிரதாய பானம்.

இதைக் கலப்பது என்பதே ஒரு நிகழ்வு. 'யகோனா செரிமனி' இதைக் கலக்கவென்றே மரத்தாலான ஒரு பெரிய பாத்திரம் உண்டு.
இந்தப் பாத்திரம் இவர்களது நாணயமான ஒரு சதத்தில் இடம் பெற்றுள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் இதன் முக்கியத்துவத்தை!

தேசீயத்தலைவர்கள் எந்த நாட்டிலிருந்து வந்தாலும், அரசாங்கத்தின் தரப்பில் இந்த செரிமனி நடக்கும். உடலெங்கும் எண்ணெய் பூசிக்கொண்டு
கரு கரு என்று இரண்டு ஆஜானுபாகுவானவர்கள், நாரினால் செய்யப்பட்ட சுலு கட்டிக் கொண்டு வி.ஐ.பி. முன்பு மண்டியிட்டு
அமர்ந்து இதைக் கலக்குவார்கள். அப்புறம், வழுவழுப்பாகத் தேய்க்கப்பட்ட ஒரு தேங்காய் சிரட்டையில் அதைக் கோரி இரண்டு கைகளால்
அந்த வி.ஐ.பி.க்குக் கொடுப்பர்கள். விருந்தினர் அதை வாங்கிக் குடிக்கவேண்டும். வேண்டாம் என்று மறுத்தால் அது அரசாங்கத்தையும்
அவர்களின் கலாசார(!)த்தையும் பழித்தது போலவாம்!

பார்ப்பதற்கு ஏதோ மண்ணைக் கலக்கினது போல வெளிர் நிறமாக இருக்கும் இது, குடித்தால் சுவை ஏதும் இல்லாமல் இருக்குமாம்.
ஆனால் நாக்கு மரத்துப் போவது போல இருக்குமாம். கொஞ்சம் போதையாகவும் இருக்குமாம்.

ஃபிஜியன் கிராமங்களிலும் ஆண்கள் எல்லோரும் வட்டமாக உட்கார்ந்துகொண்டு இதைக் குடித்துக்கொண்டே
பேசிக்கொண்டிருப்பார்கள.

இந்த பானம் பருகாத இந்திய ஆண்களே ( குஜராத்திகள் நீங்கலாக) இல்லை எனலாம்! வீடுகளில் நடக்கும் விழாவானாலும் சரி,
பொது விழாக்களானாலும் சரி, நம் ஆட்கள் இதை ஒரு பெரிய ப்ளாஸ்டிக் பேஸினில் கலக்கி, ஒரு துணியில் வடிகட்டி
(டீ வடிகட்டுவது போல) விடுவார்கள். இந்தப் பழக்கம் எல்லாம் யாரும் சொல்லித்தராமலேயே வந்துவிடும்!

என்னவோ சொல்ல ஆரம்பித்து எங்கேயோ போய்விட்டேன்! ஃபிஜியன் பெண்கள்் நிறையபேர் நர்ஸ் வேலை செய்கிறார்கள் என்று
குறிப்பிட்டு இருந்தேன் அல்லவா? இவர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி புரியவே விரும்புகின்றனர்.

அங்கெல்லாம் குழந்தை பிறந்த பிறகு, சுமார் மூணரை வயது வரை, இரண்டு மாதத்திற்கு ஒருமுறை வீடுகளுக்குப் போய்
குழந்தையின் வளர்ச்சியைக் கவனிப்பது வழக்கமா இருக்கிறது! இரண்டு பேர் கொண்ட அணியாகவெ இவர்கள் வீடுகளுக்குப
போவார்கள். தெரிந்தவர்களின் வீடு என்றால் கேட்கவே வேண்டாம். ஆற அமர இருந்து சாப்பிட்டு விட்டும் போவார்கள்.

இப்படி வழக்கமாக வரும் இவர்களிடம், ஒரு நாள் நம்ம 'கிரேக்'கின் கால்களைப் பற்றிப் பேச்சு வந்த போது, அவர்கள் சிரித்துக்
கொண்டே சொன்னது, ரக்பி விளையாடப்போகும் கால்கள் இல்லையா, வளர வளர சரியாகிவிடும்! இந்தியர்களுக்குத்்தான்
எப்போதும் சின்னப் பிள்ளைகளுக்கு எண்ணெய் போட்டு மசாஜ் செய்யும் பழக்கம் உண்டே அதுபோலவும் செய்யலாமெ
என்றும் குறிப்பிட்டனர். அது என்னமோ உண்மைதான். அங்கெ பழைய தமிழ் ஆட்களிடம் இந்தப் பழக்கம் இருக்கிறது.
'மாலீஷ் செஞ்சாத்தான் குழந்தைக்கு உடம்பு வலி இல்லாமல் இருக்கும். அப்பத்தான் நீட்டமா வளரும்' என்று சொல்வார்கள்.
நானும் நினைத்துக் கொள்வேன் இது என்ன புடலங்காயா? நீட்டமாக வளர என்று. ஆனால் இதெல்லாம் குழந்தைக்கு
ரெண்டு வயது வரைதான்.

அதன்பின் நம் வீட்டு வேலைகளுக்கு வரும் உதவியாளர்( அவர்களை இங்கே 'ஹெளஸ் கேர்ள்' என்பார்கள்)மூலம் இவனுக்கு
தினமும் மாலீஷ்தான்!

அவர்கள் வீடு மாடி என்பதினால் இவனும் என் மகளும், தினமும் ஒரு ஆயிரம்தடவையாவது ஏறி இறங்கிக் கொண்டிருப்பார்கள்.
எந்த மாடிப்படிக்குப் பயந்து நான் வீடு மாறினேனோ அதே மாடிப்படி இவர்களின் விளையாட்டு இடமாகிவிட்டது! கொஞ்சம்
கொஞ்சமாக இருவரும் ரக்பி பந்தை உதைத்து விளையாட ஆரம்பித்தனர்! ஒரு அஞ்சாறு மாதத்தில் அவன் கால் நேராகிவிட்டது.
பந்தை உதைத்து விளையாடினதால் சரியானதா அல்லது நம் எண்ணெய் மாலீஷின் பலனா என்று தெரியவில்லை!


ஏதாயாலும், இதுவேஇங்கு தேசீய விளையாட்டு! நிறைய ஃபிஜியன் ஆளுங்க ரக்பி ஆட்டத்துலே கெட்டிக்காரங்களாச்சே.
அவுங்க இந்தப் பகுதிகளில் ஆஸ்தரேலியா, நியூஸிலாந்து(இங்கெல்லாமும்கூட இந்த ரக்பிக்கு மதிப்பு மிக அதிகம்!) டீம்களில்
சேர்ந்து விளையாடி கோடிக்கணக்காக சம்பாதிக்கிறார்கள்! போதாக்குறைக்கு ஜப்பானுக்குவேற போய் அங்கே இந்த ஆட்டத்துக்கு
'கோச்சிங்'வேற செய்கிறார்கள்!


இது ரொம்ப முரட்டு ஆட்டம் என்பதே என் தனிப்பட்ட கருத்து!


இன்னும் வரும்.
**************

Monday, October 18, 2004

பூலா!!!!! லாக்கமாய்!!!!!!

ஃபிஜி அனுபவம் பகுதி 9



'பூலா!!! பூலா !!! லாக்கமாய் - இது என்ன?

வணக்கம்!!! வணக்கம்!!! வாங்க!!! இதுதான் அர்த்தம்!


நேடிவ் ஃபிஜியர்களின் மொழி இது! ஃபிஜியன் மொழி. இதற்கென்று தனி எழுத்துரு இல்லை. ஆகவே ஆங்கில எழுத்துக்களையே பயன்படுத்துகின்றனர்.
பிரிட்டிஷ்காரர்கள் இங்கு முதலில் வந்து குடியேறியபோது, வெறும் காட்டு ஜனங்களாக இருந்த இவர்களுக்குத் தனியாக 'மதம்' என்று ஒன்றும் இல்லையாம்! பின்னர், கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த மெஷினரிகள் வந்து, இவர்கள் வாழ்க்கையை 'ஒழுங்கு'படுத்தினார்களாம். அப்போது இவர்களுக்கு இருந்த 'நரமாமிசம்' சாப்பிடும் பழக்கத்தினால், சில மெஷினரிகள் 'காணாமல்' போனதும் உண்டாம்!



கொஞ்சம், கொஞ்சமாக இவர்களைத் தங்கள் மதத்துக்கு மாற்றுவதில் பெரும் வெற்றி அடைந்தனர் இந்த மெஷினரிகள். அப்போது கிறிஸ்துவ மதத்திலும் இரண்டே பிரிவுகள்தான் இருந்ததாம். ப்ராட்டஸ்டண்ட் மற்றும் கத்தோலிக்கப் பிரிவு.

இப்போது அவர்கள் மதத்திலும் கூட பலபிரிவுகள் வந்துவிட்டன. எப்போதும் எனக்குத் தீராத சந்தேகம் ஒன்று உண்டு. ஹிந்துக்களுக்கு பல கடவுள்கள். இதனால் பலவிதமான வழிபாட்டு முறைகளும், கோயில்களும் உருவாகிவிட்டன.

ஆனால், கிறிஸ்த்துவ மதத்தில் அவர்களுக்கு ஒரே கடவுள்தானே! அப்படி இருக்கும்போது, எத்தனை விதமான 'சர்ச்சுகள்' இருக்கின்றன! இதை, அங்கே நம் வீடுகளுக்கு வரும் 'செவந்த்டே அட்வென்டிஸ்ட்' என்னும் பிரிவைச் சேர்ந்தவர்களையும் கேட்டிருக்கிறேன். அவர்கள் கூறுவது, இவர்களின் வழிபாட்டு முறைகள் சரியில்லை. அதனால் இவர்கள் தனிப்பிரிவாக செயல்படுகின்றார்கள். எனக்கு இன்னமும் புரியவில்லைதான்!

அது போகட்டும். மதம் என்பதும் ஒரு 'சென்சிடிவ் விஷயம் அல்லவா? அதைப் பற்றிக் கூடுதலாக ஒன்றும் வேண்டாமே!

நேடிவ் ஃபிஜியர்கள் எல்லாம் ஏதாவது ஒரு 'சர்ச்சோடு இணைந்துள்ளனர். ஞாயிறன்று, சர்ச்சுக்குப் போகும்போது 'சுலு' என்னும் பாரம்பரிய உடையை அணிகின்றார்கள். ஆண்கள் அணிவது மேல் சட்டை (ஷர்ட்)யும், 'ராப் அரெளண்ட் ' போன்ற முழங்காலுக்குக் கீழே வரும் பாவாடை போன்ற சூட். பள்ளி மாணவர்களும், ராணுவத்தினர், காவல்துறையினர் அனைவருமே இதை அணிகிறார்கள். பெண்கள் இடுப்பைத் தாண்டி வரும் மேல்சட்டையும் கேரளப் பெண்கள் அணிவது போன்ற முண்டும். ஆனால் இந்தத் துணி பெரும்பாலும் 'ப்ரிண்ட்டட் டிஸைன்' உள்ளது. இதன் பெயர் 'சுலு ச்சாம்பா' 'கேசுவலாக' அணிவதற்கு, 'ஐலண்ட் ப்ரிண்ட்' எனப்படும் செம்பருத்திப் பூக்கள் டிஸைன் போட்ட துணிகள். இவை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது!

கிராமங்களில் இவர்கள் வசிக்கும் இடங்களுக்கு 'கோரோ' என்று பெயர். இவர்களின் வீடுகளை 'புரே' என்று அழைக்கிறார்கள். வீடுகள் பெரும்பாலும் மரவீடுகளே! தரையிலிருந்து சுமார் மூன்று அடி உயரத்தில் கழிகள் நட்டு அதன் மேல் கட்டிய மரவீடுகள். பெரும்பாலான வீடுகளில் 'ஃபர்னிச்சர்கள்'( ஆசனங்கள்) கிடையாது. கற்களைக் கொண்டு கட்டப்பட்ட அடுப்பில், விறகெரித்துச் சமையல்.

இவர்களின் உணவில், கப்பக் கிழங்கும் தேங்காயும் , மீனும் கட்டாயம் இடம் பெறுகின்றது. கடல் ஆமைகள் இவர்களுக்கு மிகவும் பிடித்த உணவாம்!

இந்தக் 'கோரோ'க்களுக்கு, ஒவ்வொன்றிற்கும் ஒரு தலைவர் இருப்பார். அரசாங்கம் அளிக்கும் உதவிகளை, அவருடைய 'குடிமக்களு'க்குப் பிரித்துக் கொடுத்து, எல்லோரையும் 'காப்பாற்றும்' பொறுப்பு இவருக்கு உண்டு! இந்தக் கோரோக்களின் தலைவர்கள் ஏறக்குறைய சிற்றரசர் போல. இவர்களை 'ராத்தூ' என்ற அடைமொழி சேர்த்துச் சொல்கிறார்கள். இதுபோன்ற பல குடியிருப்புகளுக்கு ஒரு 'சீஃப்' இருப்பார்! இவர்களை 'பாரமவுண்ட் சீஃப்' என்று குறிப்பிடுகின்றனர். அரசாங்கத்தில் இவர்களுக்குப் பெரும் மதிப்பு உண்டு! எந்தப் புதியசட்டங்கள் கொண்டுவந்தாலும், ஏதாவது மாற்றங்கள் செய்வதென்றாலும் இவர்களின் அனுமதி பெற்றே செய்ய வேண்டும்!

மந்திரிசபை இவர்களுக்குக் கட்டுப்பட்டதே! நம் இந்தியாவில் 'ராஜ்ய சபா' போன்று இவர்களுக்கும் ' கவுன்சில் ஆஃப் த சீஃப்' என்று ஒரு தனி அமைப்பு உண்டு! நேடிவ் ஃபிஜியன்களைப் பாதிக்கும் அல்லது ஃபிஜியன்கள் சம்பந்தம் உள்ள எந்த விஷயமானாலும் இவர்கள் அனுமதி இன்றி ஏதும் செய்ய முடியாது!

வீடுகளைச் சுற்றியே கப்பக்கிழங்கு, டாலோ எனப்படும் மற்றொரு கிழங்கு வகை, பப்பாளி மரங்கள் இவைகளைப் பயிர் செய்து கொள்கின்றனர். இதற்கென்று தனியான பராமரிப்பு இல்லையென்றே சொல்ல வேண்டும். மண்வளம் மிகுந்துள்ளதால், ச்சும்மா நட்டுவைத்தாலே போதும். தண்ணீர்கூட ஊற்றவேண்டாம்! அதுதான், மழை பொழிந்துகொண்டே இருக்குமே!

இப்போதெல்லாம், அவர்களும் தங்களது விளைபொருள்களைச் சந்தைக்குக் கொண்டுவந்து விற்று, மற்ற பொருட்களை வாங்குகிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் உணவுப் பழக்கமும் மாறிவருகின்றது! பருப்பு சமைக்க ஆரம்பித்துள்ளனர்!

சராசரி இந்தியர்கலைவிட வலுவான உடலமைப்பைக் கொண்டவர்கள் இவர்கள். உயரமாகவும், அகன்ற தோள்களுடனும், சுருட்டைத் தலைமுடியுடனும் இருப்பார்கள். நான் இங்கே வந்த புதிதில், ஊருக்குக் கடிதம் எழுதும்போது, இவர்கள் பார்ப்பதற்கு எப்படி இருப்பார்கள்? இவர்களுடைய தலைமுடி எப்படி இருக்கும் என்று வர்ணித்து எழுதியது இன்னும் ஞாபகம் இருக்கிறது! 'சாய் பாபா'வின் தலைபோல இருக்கும் என்று எழுதியிருந்தேன்!

இங்கே பலதீவுகள் இருந்தாலும், 'ரோத்தமன் தீவு'களில் வசிக்கும் ஃபிஜியன்கள் கொஞ்சம் மாறுபட்டத் தோற்றம் உடையவர்கள். இவர்களில் பெண்கள் மிகவும் அழகாக இருப்பார்கள்! நல்ல பொன்னிற மேனியெழில்! ( வெள்ளைக்காரர்களின் சோகை வெளுப்பு இல்லை)ஆண்களும், மற்ற ஃபிஜி ஆண்களை விடவுமே 'ஹேண்ட்சம்!'

எங்கள் குழந்தைக்கு ஆறு மாதமானபோது, மாடிவீட்டில் இருக்கப் பயந்துகொண்டு ( குழந்தை நடக்க ஆரம்பித்தால், எங்கே மாடிப்படியில் விழுந்துவிடுமோ என்ற பயம்தான்!) வீடு மாறி ஒரு வீட்டின் கீழ்த் தளத்துக்குப் போய்விட்டோம். அந்த வீட்டின் மாடியில் ஒரு ரோத்தமன் தீவைச் செர்ந்த ஃபிஜியன் குடும்பம் இருந்தார்கள். அவர் பெயர் பென்னி ரம்பூக்கா. அரசாங்க உத்தியோகம் வகிப்பவர்! அவர மனைவி மிகவும் அழகாக இருப்பார்கள். அவர்களுக்கு நான்கு குழந்தைகள். அவர்களுட்ன், நான்கு வருடங்கள் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது!

மூத்தமகனின் பெயர் என்ன தெரியுமா? 'ச்சோ' ! அடுத்த பெண் குழந்தை 'வூக்கி' அப்புறம் 'கிரேக்' ( இவனும் என் மகளும் ஒரேவயது) அப்புறம் 'சகியூஸா'. இவர்கள் தாயின் பெயர் 'ஆலா' என் நெருங்கிய தோழி ஆகிவிட்டார்கள்.

கொஞ்சம் படித்த அனைவரும் ஆங்கிலமும் பேசுகிறார்கள். மற்ற படிப்பறிவு இல்லாத ஆட்கள், நம் ஹிந்தி மொழியை நன்றாகவே பேசுகிறார்கள். நம் மாடிவீட்டுக் குழந்தைகள் எல்லாம் எப்போதும் நம் வீட்டில்தான் 'டேரா' அதிலும் மூத்த இரண்டும் பள்ளிக்குப் போய்விட்டால் என் மகள் வயசுள்ள குழந்தை 'கிரேக்' எங்களுடனே இருப்பான். அவனும் 'பப்பு மம்மு, தச்சு மம்மு' எல்லாம் சாப்பிட நன்கு பழகிவிட்டான்.சில தமிழ் வார்த்தைகளும் அவனுக்குப் புரியும்! இங்கே வா, அம்லு ( என் மகள்)வுடன் விளையாடு என்றெல்லாம் ஃபிஜியனில் சொல்ல நானும் கற்றுக் கொண்டேன்.

'க்ரேகா, லாக்கமாய், கீதோவாதோ அம்லு'

அவனுடைய கால்கள் கொஞ்சம் வளைந்திருந்ததால்,' தங்கமலை ரகசியம்'
படத்தில் வரும் சிவாஜி போல நடப்பான். நாங்கள் அவனைத் தங்கமலை என்றும் கூப்பிடுவோம்!

'பஷே கூஷி' இது 'கிரேக்' பேசும் தமிழ். பச்சைக் குச்சி!


நகரங்களில் வசிக்கும் ஃபிஜியர்கள் பெரும்பாலும் அரசு ஊழியர்களே! பெண்கள் பெரும் அளவில் மருத்துவத் துறைகளில் நர்ஸ் வேலைசெய்கிறார்கள்.

ஃபிஜியன்களின் வாழ்வில் 'பாய்'க்கு ஒரு முக்கியத்துவம் உள்ளது! என்ன பாயா? நாம தூங்கற பாய்தாங்க! ஒரு விதமான மெல்லிய ஓலைகளால் முடையப்பட்டிருக்கும் இந்தப் பாய்களுக்குச் சுற்றிலும் வர்ண நூல்களைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருக்கும்! அநேகமாக எல்லாஃபிஜியன்களுக்கும் இதை முடைவது தெரிந்திருக்கிறது! இவர்கள் கல்யாணங்களில், இந்தப் பாய்தான் ரொம்பவே முக்கியமான 'சீர்'. இதுவேதான் கல்யாணத்துக்கு கிடைக்கிற அன்பளிப்பும்!

பாய்ன்னா நம்ம ஊர்ப் பாய் மாதிரி சுருட்டி வச்சிக்கறது இல்லே! கல்யாணச் சத்திரங்களிலே விரிக்கிற 'பவானி ஜமக்காளம்' மாதிரி பெரீஈஈஈய்ய சைஸ்! மடிச்சு வைக்கலாம்.

இவர்கள் குடும்ப வாழ்க்கையில் இன்னொரு சுவையான(!) விஷயம்.இவர்கள் குடும்பங்களில் யாருக்காவது பணக்கஷ்டம், உணவுப் பற்றாக்குறை ஏதாவது ஏற்பட்டால், ஒரு பாயை எடுத்துக்கொண்டு, தெரிந்த உறவினர் வீட்டுக்குப் போய்விடுவார்கள். அவ்வளவுதான்! வீட்டுக்காரர்களும் இவர்களை எப்போது திரும்பப் போகப் போகிறார்கள் என்று கேட்கக்கூடாதாம்! அங்கேயே அவர்களில் ஒருவராக இருந்து விடுவார்கள். கூடமாட வீட்டுவேலைகளைப் பார்த்துக்கொண்டு இருப்பார்கள்.

நம்ம தமிழ்ப் பத்திரிக்கைகளில் வரும் 'விருந்தாளி ஜோக்' ஞாபகம் வருகிறதா?

இன்னும் வரும்.


Wednesday, October 13, 2004

வீடுகள்????????????

ஃபிஜி அனுபவம் பகுதி 8
***************************


கொஞ்சம் அப்படி, கொஞ்சம் இப்படின்னு எல்லா ஊர்லேயும் நடக்குற விஷயம்தான். முதல்லே இதை எழுதணுமான்னு கொஞ்சம் யோசனையாதான் இருந்தது! ஊர்லே, உலகத்துலே நடக்காததையா எழுதறோம்னு நினைச்சு, இப்ப எழுதறேன்!இங்கே வந்த புதிதில். இந்த விஷயங்களைக்க் கேள்விப்பட்டபோது, என்னவோ கேட்கக் கூடாதை ஒன்றைக் கேட்டுவிட்டதாக எண்ணினேன். இந்தியாவில் நாம் வளர்க்கப்பட்ட விதம் அப்படி!



இங்குள்ள இந்தியர்களிடையே ( குஜராத்திகள் நீங்கலாக) இதற்கு எந்தவிதமான எதிர்ப்பும் இல்லை. எல்லோரும் இதை வழக்கத்திற்கு மாறாக நினைக்காமல் ரொம்பச் சாதாரணமாகவே எடுத்துக் கொள்கின்றனர். எதற்கு இவ்வளவு 'பீடிகை' போடுகிறேனென்று நினைக்கின்றீர்களா? எல்லாம் கொஞ்சம் 'சென்சிடிவ் ஆன விஷயம்'தான்.

சின்ன வீடுகள் ! ஆனால் இந்தியாவில் சில இடங்களில் உள்ளது போல இது பெரும் அளவில் காணப்படுவதில்லை என்றாலும்கூட, சிறிய நாடாக இருப்பதாலும், எல்லோருக்கும் எல்லோரையும் தெரிந்திருப்பதாலும், அதிகமாக நிகழ்வதுபோன்ற ஒரு தோற்றம் கிடைக்கிறது!

'உஸ்கோ ச்சோடுதீஸ். இஸ்கோ ரக்தீஸ்' ( இவர்கள் பேசும் ஹிந்தி போஜ்புரி ஸ்டைல். இவளை விட்டுவிட்டான், அவளை வைத்துகொண்டான் என்று அர்த்தம்) என்று சாதாரணமாகச் சொல்லிவிடுகின்றனர். ஒளிவு மறைவு என்றெல்லாம் இல்லை. அதேபோல இது நிகழ்ந்த மக்களுக்கும், சமூகத்தில் எந்த விதமான எதிர்ப்போ, ( நம் நாட்டில் சில கிராமங்களில் உள்ளது போல ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பது போன்ற நிலைகள்) அல்லது அவமதிப்போ ஒன்றும் கிடையாது. அப்படியே
அவர்களை அங்கீகரிக்கிறார்கள்.

அது போகட்டும். வெள்ளையர்கள் நாட்டில் நடக்காததா?

இங்குள்ள மக்களின் சில நம்பிக்கைகள் மிகவும் கவலையூட்டக்கூடியது!


மந்திரம், மாயம் இவைகளில் பரவலான நம்பிக்கை உண்டு! ' செய்வினை செஞ்சிருக்காங்க' இதை அடிக்கடி கேட்க வேண்டி இருக்கும். எனக்கு எப்போதும் ஒரு சந்தேகம் வரும். செய்வினை செய்கிறவர்களிடம் யாராவது போய், 'இன்னார் குடும்பம் கெட்டுப் போகவேண்டும். இதற்கு செய்வினை செய்யவேண்டும்' என்று கேட்பார்களா? கொஞ்சம் அசிங்கமாக இல்லை?

மேலும், 'எங்களுக்கு யாரோ செய்வினை வச்சிட்டாங்க'ன்னு சொல்கின்றவர்களும், அப்படி ஒண்ணும் அமர்க்களமான வாழ்வு நடத்தும் ஆசாமிகளும் இல்லை. அங்கே என்ன இருக்கிறது, இவர்களைக் கெடுப்பதற்கு என்று ஆச்சரியமாக இருக்கும்.


சரி. இதற்கு என்ன மாற்றுவழி என்று பார்க்கலாம் என்றால், செய்வினையைத் திருப்பி எடுக்கவென்று ஒரு கூட்டம்வேறு இருக்கிறது.கிடைக்கும் கொஞ்சநஞ்சக் காசையும் இதற்குச் செலவு செய்துவிட்டுக் கஷ்டப்படுவார்கள்.

ஒரு சமயம், இந்தியாவிலிருந்து மூன்றுபேர் ஒரு பெண்ணும், இரண்டு ஆண்களுமாக வந்திருந்தனர். எல்லாருக்கும் நடுத்தர வயது. இவர்கள் எதற்காக வந்தார்கள் என்று தெரிந்தால் உங்களுக்கும் ஆச்சரியமாக இருக்கும். இவர்கள் இங்கே ஜோசியம் பார்க்க வந்தார்களாம். எப்படி வந்தார்கள், எப்படி விசா எடுத்தார்கள் என்று எங்களுக்குத் தெரியாது.

இவர்கள் ஒவ்வொரு ஊராகப் போய், ஜோசியம் சொல்லிக் கொண்டு நாங்கள் இருந்த ஊருக்கு வந்து சேர்ந்தார்கள். வழக்கம் போல விவரம் எங்களுக்கு வந்துவிட்டது. அதுதான் எல்லோருக்கும் எல்லோரையும் தெரியுமே!

நாங்களும், இந்தியாவிலிருந்து வந்திருக்கிறார்களே என்று அவர்களை உணவுக்காக அழைத்தோம். அப்போதுதான் தெரியவந்தது, அவர்கள்ஜோதிடம் பார்ப்பது, இன்னும் மந்திர மாயங்கள் செய்வது மற்றும் குடும்ப சந்தோஷத்திற்காக பூஜைகள் செய்வது என்று பலதும் செய்கிறார்கள் என்பது. இதில் வேடிக்கை என்னவென்றால், குழந்தை இல்லாதவர்களுக்கு, பூஜைமூலம் குழந்தை பிறப்பதற்கு வேண்டிய பரிகாரம் செய்வார்களாம்.

இதில் என்ன வேடிக்கை ?

ஏன் இல்லை? இந்தப்பூஜையின் மூலம் குழந்தை கண்டிப்பாகப் பிறக்குமாம். ஆண் குழந்தை வேண்டுமென்றால் பூஜைக்கு ஆகும் செலவு 250 டாலர்கள். பெண் குழந்தையே போதும் என்றால் 150 டாலர்கள்தான் செலவு!

இது எப்படி இருக்கு?

இன்னும் வரும்.
*****************


Saturday, October 09, 2004

கேம்ச்சோ? ரைட்ச்சே!!!!

ஃபிஜி அனுபவம் பகுதி 7
******************************


இப்போது தெரிந்திருக்குமே, இந்தப் பகுதி யாரைப் பற்றி என்பது! நீங்கள் அனுமானித்தது ரொம்பச் சரி! எல்லாம் நம் 'குஜ்ஜு' மக்களைப் பற்றித்தான்!

இவர்கள் வியாபாரம் செய்வதற்காகவே ( பிறந்தவர்கள்) வந்தவர்கள். 'பனியா'வின் பிரத்தியேகக் குணம் இவர்கள் ரத்தத்திலேயே கலந்துள்ளது! அந்தக் காலத்தில், இவர்கள் வந்தபோது அப்படி ஒன்றும் வாழ்க்கை சுலபமாக அமைந்துவிடவில்லையாம்! சின்னக் கடைகள் வைத்துக்கொண்டு, அங்கேயே சமைத்து, சாப்பிட்டு, கடைகளின் 'கவுன்ட்டர்' மேலேயே உறங்கி, பணம் சம்பாரிப்பது ஒன்றே தவமாய் இருந்திருக்கிறார்கள். ஓரளவு வசதிகள் பெருகியதும், தாய் மண்ணுக்குத் திரும்பிப் போய், தங்கள் குடும்பத்தினரையும் அழைத்துக்கொண்டு வந்தவர்களே பெரும்பாலோர்!

இன்னும் அவர்களின் வேர்கள் இந்தியாவிலும், விழுதுகள் ஃபிஜியிலுமாய் இருக்கிறார்கள்.



இவர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது முக்கியமாகச் சொல்லவேண்டியது இவர்களின் 'உழைப்பு!' இதில் வயசு வித்தியாசமோ, ஆண், பெண் என்றபாகுபாடோ இல்லை. அவரவருக்குத் தக்க முறையில் உழைக்கத் தயாராக இருக்கும் ஒரு கூட்டத்தினர்!!

இவர்களும் கூட்டுக் குடும்பமாகவே வாழ்கின்றனர். சில வீடுகளில் நான்கு தலைமுறைகள் ஒன்றாக வாழ்கின்றனர்!

ஒரு சிறிய அளவில் கடை வைத்துள்ள வியாபாரியாகத்தான் இருக்கட்டுமே, குடும்பம் பூராவும் அந்தக் கடையில் வேலை செய்வார்கள்.

பெரும்பாலோர், இன்னமும் தங்கள் கடைகளின் அருகிலேயே வீட்டை அமைத்துக் கொண்டுவிடுகின்றனர். காலையில், அவரவர் சம்பிரதாயப்படி பூஜையை முடித்துக்கொண்டு ஆண்கள் கடைகளுக்கு வந்துவிடுவார்கள். பெண்கள் , எல்லாக் கடமைகளையும் வேகமாகச் செய்து முடித்து விட்டு, அவர்களும் கடையில் வியாபாரத்தைக் கவனிக்க வந்துவிடுவார்கள்.

பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகள், மாலை வீடு வந்தவுடன், கடைகளிலே வந்து அவர்களால் இயன்ற உதவிகளைச் செய்வார்கள். மிகவும் சிறிய குழந்தைகள் என்றாலும், குறைந்த பட்சம் கடையிலே ச்சும்மாவாவது உட்கார்ந்து இருப்பார்கள்!

முதியோர்களும், கடையிலேயே தங்கள் பொழுதைக் கழித்துவிடுவர். வியாபாரம் நடக்கிறதோ இல்லையோ கடையில் இருப்பார்கள்! சோம்பல் என்றால் என்ன? என்று கேட்கும் ரகம்! எப்போதும் வெகு சுத்தமான ஆடைகளுடன், முகத்தில் ஒரு வாட்டமும் இன்றி இருக்கும் அவர்களைப் பார்க்கும்போதே, நமக்கும் ஏதோ ஒரு உற்சாகம் வந்துவிடும்!

முதியோரை அவர்கள் பராமரிக்கும் விதமே தனி. எப்போதும் , எது செய்தாலும் அவர்களின் கருத்துக்களைக் கேட்டே செய்வார்கள். வீட்டில் மருமகள் ஒரு ஊறுகாய் தயாரிக்க வேண்டுமென்றாலும், தன்னுடைய மாமியாரைக் கலந்து பேசி, அதில் போடும் உப்பு, காரத்தின் அளைவைக்கூட அவர்களிடம் கேட்டே செய்வார்கள். இத்தனைக்கும் அந்த மருமகள் கல்யாணமாகி வந்து 30 ஆண்டுகள் ஆனவராக இருப்பார்! இதுபோன்ற செயல்களால், முதியவர்களுக்கு, ஒரு மனநிறைவும், இன்னும் தான் தன் குடும்பத்துக்குத் தேவைப்படுகின்றோம் என்ற திருப்தியுமாக வாழ்க்கை ஓட்டம் இருக்கிறது. இதையெல்லாம் பார்த்து வளரும் இளைய தலைமுறையினரும், முதியோர்களை மதிக்கவும் கற்றுக்கொண்டு விடுகிறார்கள். எல்லாம் சொல்லித் தராமலேயே வருகின்றது! இதனால் குடும்பங்களில் மன அமைதியும், மகிழ்ச்சியும் நிலவுகின்றது. ஒருவருக்கொருவர் அனுசரணையாக இருக்கக் கற்றுக் கொள்கின்றனர், இளைய தலைமுறையினர்!

இப்போது நவராத்திரி சீஸன் வருகிறதல்லவா? குஜராத்திகள் எல்லாம் 'அம்பா மாதா'பூஜை செய்து, இந்த ஒன்பது நாட்களிலும் அவர்கள் பாரம்பரிய முறைப்படி, 'கர்பா' என்னும் நடனம் ஆடிக் கொண்டாடுகிறார்கள். இந்த நாட்களில், மாலை கடைகளை அடைத்தபிறகு, நம் வீட்டின் அருகேயுள்ள ஒரு பூங்காவில் அனைவரும் கூடி, பூஜை, நடனம் எல்லாம் குறைவின்றி நடத்தி, அவரவர் கொண்டுவரும் பிரசாதங்களை விநியோகம் செய்து, வீடு திரும்ப இரவு பத்துமணி ஆகிவிடும்! இதுபோலவே எல்லா (ஒன்பது) நாட்களும்!

நவராத்திரி முடிந்தவுடன் வருவது தீபாவளிப்பண்டிகை. அதையும் சிறப்பாகவே கொண்டாடுகின்றனர். அதற்கு மறுநாள் 'குஜ்ஜு'க்களுக்குப் புது வருடம் பிறக்கிறது! அதற்கான லக்ஷ்மி பூஜையும் மிகவும் சிறப்பாக வீடுகளிலும் ,கடைகளிலும் கொண்டாடப்படுகின்றது. பூஜைமுடிந்தவுடன், பட்டாசு வெடிப்புகள். இனிப்பு வழங்குதல். இவை எல்லாவற்றிலும், குடும்பாங்கத்தினர் ஒருவர் விடாமல் அனைவருமே கலந்து மகிழ்கின்றனர். நம் கம்பெனியின் உரிமையாளர்கள் குஜராத்திகள்தான். எங்களுக்கான வசதிகளைப் பார்த்துப் பார்த்து செய்து தந்தார்கள். ஆறு வருடங்கள் இவர்கள் சமுதாயத்தில் நாங்களும் ஒரு அங்கமாகவே இருந்தோம். அவர்களிடமிருந்து பல நல்ல விஷயங்களையும் கற்றுக்கொள்ள முடிந்தது. அவர்களும், நம் இட்டிலி,சாம்பார், ரசம் தோசையெல்லாம் செய்வதற்கு என்னிடம் இருந்தும் கற்றுக் கொண்டனர்.

மாதம் ஒருமுறை அருகிலுள்ள ஏதாவது இடங்களுக்கு ஒரு 'பிக்னிக்' நிச்சயம் உண்டு! நான் வழக்கமாகக் கொண்டுபோகும் இட்டிலியை எதிர்பார்த்து இருப்பார்கள். இட்டிலியைக் கையில் எடுத்து, கத்தியால் அதை ரெண்டாக 'ஸ்லைஸ்' செய்து, சட்டினியைத் தடவி, 'சாண்ட்விச்' ஆக்கிவிடுவார்கள். எங்களை, அவர்கள் குடும்ப அங்கத்தினர் போன்றே வேற்றுமையில்லாமல் கருதியிருந்தார்கள்.

இன்னொரு முக்கிய குணம், இவர்களில் யாராவது ஒருவர், ஏதோ காரணத்தால் வியாபாரத்தில் நஷ்டம் அடைந்து, கஷ்டத்தில் இருக்கும்படிநேர்ந்துவிட்டால், அந்த சமூகத்தினர் அனைவரும் உதவி செய்து, அந்தக் குடும்பத்தைக் கைகொடுத்து மேலே தூக்கிவிடுவார்கள்.அதுவும் மற்ற சமூகத்திற்கு தெரியாத முறையில்! எவ்வளவு நல்ல குணம் பாருங்கள்!
உழைப்பு எப்படியோ அப்படியே ஓய்வும்! மாலையில் வேலை முடிந்து, குடும்பத்தினர் அனைவரும் ஒருங்கே இருந்து சற்று நேரம் உரையாடி மகிழ்வார்கள். அப்போது, உ.பா. உண்டு. சின்னப் பசங்களும், பெண்களும் 'சாஃப்ட் ட்ரிங்க்ஸ்'ம், ஆண்கள் லிக்கரும்(ஸ்மால் ஒன்லி) எடுத்துக்கொள்வார்கள். வயதில் முதிர்ந்த பெண்மணிகளும் விஸ்கி, பிராந்தி எல்லாம் எடுப்பார்கள்.

காந்தி பிறந்த குஜராத்தில் மதுபானம் இல்லையென்பது தெரிந்திருந்த எனக்கு, முதலில் இது ஒரு 'ஷாக்'காகவே இருந்தது! அப்புறம் நான் தெரிந்து கொண்டது, 'குஜராத்தில் மட்டும்தான் இல்லை' என்பதே!

இந்தியாவில் சென்று கல்யாணம் செய்துகொண்டு வருவது, இன்னும் சர்வசாதாரணமாக நடக்கிறது. கூடவே, உள்ளூரிலேயே அவர்கள் சமூகத்தில் திருமணங்களும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. வரதட்சிணை என்றெல்லாம் பெரிதாக ஒன்றும் இல்லை. ரொம்ப வசதியான குடும்பங்கள் , ரொம்ப சாதாரண வசதியுடையவர்களுடன் சம்பந்தம் செய்து கொள்வது பரவலாக காணப்படுகின்றது. பணக்காரக் குடும்பங்களிலும்கூட பெண்குழந்தைகளுக்கு, எல்லா வீட்டுவேலைகளையும் செய்ய நல்ல முறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதேபோல, கல்லூரியில் படிக்கும் பையன்களும்கூட நேரம் கிடைக்கும்போதெல்லாம், கடையில் வந்து வியாபாரத்தைக் கவனிக்கவும்ஆர்வம் காட்டுகின்றனர்.

இவர்கள் சமூகத்தில், மற்றவர்வீட்டு சுப, அசுப நிகழ்ச்சிகளிலும் எல்லாரும் கலந்துகொண்டு அதைச் சிறப்பிக்கின்றனர். கல்யாணம்போன்ற விசேஷங்களில், 'மொய்' எழுதும் பழக்கம் உண்டு. அந்த 'மொய்ப் பணம் ரெண்டேகால் டாலர்'தான். எல்லோரும் அது மட்டும் தான் எழுதவேண்டும். நெருங்கிய சொந்தங்கள் மட்டும் தங்கமாகத் தருவார்கள். அதுவும் தனியாக, வீட்டில் வைத்து. சபையில் அல்ல! எங்களுக்கும் 'ஜாலி'தான்! கல்யாணங்களுக்குப் போகும்போது ஒரு ரெண்டேகால் டாலர் கொண்டு போனால் போதுமே!

இவர்களுக்கும், மற்ற ஃபிஜி இந்தியர்களுக்கும் உள்ள உறவு சுமுகமாகவே இருந்து வருகின்றது.

இவர்கள் வாழ்வில் உள்ள ஒரு ஒழுங்குமுறை அதிசயிக்கத்தக்கது! இவர்களிடமிருந்து, நாம் கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் இருக்கிறது!

இன்னும் வரும்.


Thursday, October 07, 2004

புயலுக்கு முன்னே ஐஸ்க்ரீம் !!!

ஃபிஜி அனுபவங்கள். பகுதி 6

புயலுக்கும், ஐஸ்க்ரீமுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா? இருக்கே! எப்படி ?

புயல் வரப் போகிறதென்ற அறிவிப்பு ரேடியோவில் வந்தவுடன் ஃப்ரீஸ்ஸரில் இருக்கும் ஐஸ்க்ரீமையெல்லாம் தின்னு தீர்த்துவிட வேண்டும்! இன்னும் ஃப்ரீஸ் செய்து வைத்துள்ள கோழி இறைச்சி முதலானவைகளை வெளியே எடுத்து, சமைத்து தின்றுவிட வேண்டும்!

'ஏன் அரக்கப் பரக்கத் திங்கணும்?' என்று கேட்டால் ஒரே பதில்தான். கரண்ட் நின்று போய்விடும்! சரிதான். எப்பத் திரும்பிவரும்? யாருக்குத் தெரியும். பல நாட்கள் ஆகும்!


இங்கே வருடா வருடம் 'புயல் திருவிழா'வும் உண்டு. டிசம்பர் மாதம் தொடங்கி, மார்ச் மாதம் வரை புயல் காலம்! அதுவே கோடைக்காலமும் ஆகும். வெய்யில் கொளுத்தக் கொளுத்தப் புயல் வருவது நிச்சயமாகிவிடும்!

'வங்கக் கடலிலே மையம் கொண்டுள்ள புயல்..... என்ற இடத்திலே நாளை மறுநாள் கரையைக் கடக்கவிருப்பதால், சென்னையிலும் அதன்சுற்றுப் புறங்களிலும், இடியுடன் கூடிய பரவலான மழை பெய்யும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இது ஆகாசவாணியின் செய்திஅறிக்கை'

இதுதான், சென்னைவாசியான எனக்குப் புயலின் கூட உள்ள சம்பந்தம். ஒரு நாளும் புயலின் நிஜ சொரூபத்தைப் பார்த்ததில்லை!

ஃபிஜியில் எங்களது முதல் புயல் அனுபவம் வேறுவிதமாக இருந்தது!

வானொலியில் எச்சரிக்கை செய்தபடி இருந்தார்கள். மேலும் 'டெலிஃபோன் டைரக்டரி'யின் கடைசிப் பக்கத்தில் என்ன முன்னெச்சிரிக்கை எடுக்க வேண்டுமென்றும் விலாவரியாகச் சொல்லப்பட்டு இருந்தது!

ரேடியோக்கும், டார்ச் லைட்டுக்கும் ஆன பேட்டரிகள், குடிநீர், முதல் உதவிப் பெட்டி, டின்களில் அடைத்த பதப்படுத்தப்பட்ட உணவு என்று ஒரு பெரிய பட்டியல்.

குறிப்பிட்ட நேரத்தில் காற்று வீசத் தொடங்கிவிட்டது. அதற்கு முன்பே எல்லோரும் வீடு திரும்பிவிட்டனர். காற்றின் வேகம் அதிகரிக்க, அதற்கு ஏற்றாற்போல மழையின் வேகமும் அதிகரிக்கிறது! ' ஹும்ம்ம்ம்ம்'மென்ற சத்தம் இப்போது பெரும் இரைச்சலாக இருக்கிறது..

எல்லாஜன்னல், கதவுகளையும் இழுத்துப் பூட்டியிருந்தாலும், வீட்டிற்குள்ளே தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அவற்றைத் தடுக்க, பலவிதமானதுணிகளை ( கைக்கு எட்டினதை) வைத்து அடைக்கிறோம். அதெல்லாம் எந்த மூலைக்கு?


இனி ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலையில் தளர்ந்து போய், கட்டிலில் ஏறி உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். நாங்கள் இருப்பது மாடியில்! கீழே இருக்கும் வீடுகளின் நிலமை என்ன என்று தெரியவில்லை!

இந்தக் களேபரத்தில், காற்றின் ஓசையையும் மீறி வேறு ஏதோ சத்தம் கேட்கிறது. நம்முடைய பிரமையோ? இரவு நேரம்வேறு! எப்போது கண்ணயர்ந்தோம் என்று தெரியவில்லை. விழிப்பு வந்தபோது, காற்று நின்றிருந்தது! பால்கனிக் கதவை மெதுவாகத் திறந்து பார்த்தால், தெருவெங்கும் வீசி எறியப்பட்ட மரக்கிளைகள். பக்கத்து வீட்டில் மாடிக்கும் கீழேயுமாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். என்ன விவரம் என்று தெரிந்ததும் என் நெஞ்சே நின்றுவிடும்போல ஆனது. அவர்கள் வீட்டு மூத்த மருமகள், புயல் அடித்த சமயம் பெட்ரோல் ஊற்றித் தீவைத்துக் கொண்டார்களாம்!

பேய்மழையின் காரணத்தால், எங்கும் வெள்ளப் பெருக்கு. மருத்துவ மனைக்கோ ஆற்றைக் கடந்து போக வேண்டும். பாலம் எல்லாம் நீரில் மூழ்கி விட்டிருந்தது. சாலைகள் எல்லாமே தண்ணீரில் மூழ்கி இருந்தன! படகு வைத்திருப்பவர்கள் தெருக்களிலே படகுகளில் போய்வந்து கொண்டிருந்தனர்!

தீக்காயம் அடைந்தவரையும் ஒருவழியாகப் படகிலே ஏற்றி, மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் பயனில்லை. இறப்பதற்கு முன், 'ஏதோ ஒரு குரல் இப்படிச் செய்'யச் சொன்னதாகச் சொன்னாராம்!

கூட்டுக்குடும்ப வாழ்க்கை. 23 பேர் உள்ள குடும்பம்! என்ன மன அழுத்தமோ?
(இதன் பின் ஒவ்வொரு முறை புயல் எச்சரிக்கை வரும்போதும் என்னை அறியாமலேயே இந்த சம்பவம் நினைவுக்கு வந்துவிடும்!)

அநேகமாக எல்லா இந்திய மக்களுமே கூட்டுக் குடும்பமாகவே வாழ்கின்றனர். மூன்று தலைமுறையைச் சேர்ந்தவர்களாகவே நிறையகுடும்பங்கள்.

முதியோர் இல்லங்கள் எங்குமே இல்லை. சொந்தங்கள் இல்லாமல் தனியாகிவிடும் முதியோர்களையுமே, யாராவது தங்கள் வீடுகளில்கொண்டு வைத்துப் பராமரிக்கின்றனர். மனிதனின் மனத்தில் இன்னும் ஈரம் இருக்கிறதென்பதற்கு இவையே சாட்சி!

அரசாங்கம் எந்தவிதமான பராமரிப்புச்செலவும் தருவதுமில்லை. மருத்துவ வசதிகளும் வெகு நல்ல முறையில் உள்ளதென்று சொல்ல இயலாது. ஆனாலும், காலம் முடிவடையும் வரை வாழவேண்டுமல்லவா?

சரி, புயலுக்கு வருவோம்! பகல் நேரமென்றால், புயலடித்து ஓய்ந்தபின், எல்லோரும் அவரவர் வீடுகளில் இருந்து புறப்பட்டு, இதுவரை நடந்த சேதாரங்களைப் பார்வையிடப் போவார்கள். கடைகள் வைத்துள்ள வியாபாரிகள், கடைகளுக்குச் சென்று, தண்ணீர்,கடைகளில் புகுந்து எவ்வளவு சேதம் விளைவித்துள்ளது என்றும் பார்க்க வேண்டுமல்லவா?

இப்போதெல்லாம், காப்பீட்டு நிறுவனங்களும், புயல் சேதத்திற்கு காப்பீடு வழங்குவதை நிறுத்திவிட்டன. வருடா வருடம் இதேகதி என்றால் அவர்களுக்கும் பெருத்த நஷ்டமல்லவா?

இன்னும் வரும்.

Wednesday, October 06, 2004

வெற்றிவேல் !!! வீரவேல்!!!!

வெற்றிவேல், வீரவேல்
************************


எனக்கு ஏதாவது 'சாமி வந்துவிட்டதோ' என்று நினைக்கிறீர்களா?

இங்கே ஃபிஜியில் சிறிதும் பெரிதுமாக 350க்கும் மேலே தீவுகள் இருக்கின்றன. அவைகளில், இரண்டு தீவுகள் முக்கியமானவை. ஒன்று மிகப் பெரிதான தீவு. பெயர் 'வீடிலேவு' மற்றது இதில் பாதி அளவு வரும் 'வனுவாலேவு'
இவைகளையே நான், வெற்றிவேல், வீரவேல்' என்று சொல்லிக் கொண்டிருப்பேன். மற்ற தீவுகள் எல்லாம் சின்னச் சின்னது. சிலரொம்பக் குட்டி இப்படி வகைவகையாய்!

பல தீவுகளில் யாருமே வசிப்பதில்லை. சிலவற்றில் வெறும் கால்நடைகள் மட்டும். கொஞ்சம் ஆடு, மாடுகளைக் கொண்டு போய் விட்டு விட்டால், அவை தாமே பல்கிப் பெருகிடுமே!

கொஞ்சம் அளவில் சுமாராக இருப்பவைகளில், வெளிநாட்டு நிறுவனங்கள் 'ரிசார்ட்' அமைத்து விட்டன. சிலவற்றை ஒரு 30 நிமிஷத்தில்ஒரு சுற்று சுற்றிவிடலாம்!

ஓய்வு எடுக்கச் சரியான இடம்! அந்த ரிசார்ட்டைத் தவிர வேறு ஒன்றுமே அங்கே இருக்காது. பகல் முழுவதும், சூரியக் குளியல் எடுத்துக் கொண்டும், இரவு முழுதும் 'பார்'இல் குடியாயும் இருப்பார்கள் பலர். எல்லாம் 'ஹாலிடே' வரும் வெள்ளையர்கள்தான்! சில இடங்களில், கண்ணாடித்தரை உள்ள படகுகளில் சென்று, பவழப்பாறைகளைப் பார்க்க முடியும். இன்னும் பலவிதமாகப் பொழுதைப் போக்கவும், 'ஸ்நோர்க்கேல், வாட்டர் ஸ்கீயிங் இப்படி பல வசதிகள் உண்டு. சுற்றுலா மூலம்தான் மிகப் பெரிய வருமானம் இந்த நாட்டுக்கு வருகிறது! அதே 'ஹோட்டேல்களில் நிர்வாகம் எல்லாம் இந்தியர்களே. எல்லா 'ஹோட்டேல்'களிலும் ஃபிஜியர்கள்தான் வேலை செய்கிறார்கள். அவர்களின் சிரிப்பே ஒரு பெரிய மூலதனம்! இவர்களா ஒரு காலத்திலே 'நரமாமிசம்' உண்பவர்களாக இருந்திருக்கிறார்கள்? நம்பவே முடியவில்லை. ஆனால் நம்பணும்!

'வீடிலேவு'தான் பெரிய தீவு என்பதால், அங்கே தான் தலை நகரும், பெரும்பாலான வசதிகளும், பன்னாட்டு விமானதளமும் இருக்கிறது. இந்தியத் தூதரகம், மற்ற அண்டை நாடுகளான நியூஸிலாந்து, ஆஸ்தராலியாவின் தூதரகங்களும் தலைநகரான 'சுவா'என்னும் ஊரில் உள்ளது. பெரிய தீவு என்றாலும் ஒரு முறை வட்டமாக இந்தத் தீவைக் காரில்ச் சுற்றிவர 8 மணி நேரம் போதும். பன்னாட்டு விமான நிலையம் இருப்பது தலைநகரில் இல்லை. தீவின் அடுத்த கோடியில்!

கடலை ஒட்டியே ரோடு போடப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களைத் தவிர, கடல் என்று தோன்றாத விதத்தில், ஒரு பெரிய ஏரி, குளம் போலவே அலைகள் இல்லாமல் அமைதியான கடலைக் காணலாம். நல்ல நல்ல இடங்களையெல்லாம், ரிஸார்ட் க்கு எடுத்துக் கொண்டதால் பொது மக்களுக்கு என்று உள்ள 'பீச்' ரொம்ப சுமாராகவே இருக்கும்.

சென்னையிலே 'மெரீனா'வுக்கு மாலையிலே மக்கள் போவது மாதிரி, சூடான தேசமாக இருந்தாலும் இங்கே யாரும் போவதில்லை! மாலையிலே ஒரு ஈ, காக்காகூடக் கடற்கரையிலே இருக்காது!

இவ்வளவு எதற்கு? நாங்கள் வசித்த 'ம்பா டவுன்' மாலை 6 மணிக்கூ தெருக்கள் எல்லாம் வெறிச்சோடி, ஆள் அரவமற்றதாகிவிடும். அந்த ஊரின் மொத்த ஜனத்தொகையே ஐந்தாயிரம்தான். அதனால் எல்லோருக்கும் எல்லோரையும் தெரியும்! சாயந்திரம், கொஞ்சநேரம், உடற்பயிற்சிக்காக நடக்கலாம் என்று வெளியே போனால், தெருவில் ஒரு நாய் கூட ஓடாது. எல்லாம் கூட்டில் அடங்கிவிடும்போல! இதைப் பற்றி நாம் ஏன் கவலைப் படவேண்டும்? நாம் நடக்கலாம் என்று வாசலுக்கு வந்தால போதும், ரெண்டு அடி எடுத்து வைப்பதற்குள், தப்பித் தவறி அந்தப் பக்கம் வரும் கார், 'சரக்'கென்று அருகில் வந்து நிற்கும். 'ஏன் நடக்கின்றீர்கள்? எங்கே போகவேண்டும்?' என்றேல்லாம் கேட்டுத் துளைத்துவிடுவார்கள். எங்களை எப்படித் தெரியும்?

நாங்கள் அங்கே போன நாள், அந்த நாட்டின் ரேடியோ ஒலிபரப்பில் செய்தியாக வந்திருந்தோமாம்! அங்கே ஃபிஜியில் முதல் முதலாக வரப்போகும் ' கேபிள் கம்பெனி'யை ஆரம்பிக்கவே என் கணவரும், அவருடனே நானும் இங்கே வந்தோம். நாங்கள் இந்தியாவிலிருந்து வந்து இறங்கியததையும், கம்பெனி ஆரம்பித்தவுடன், உள்நாட்டினருக்கு வரப்போகும் வேலைவாய்ப்புகளைப் பற்றியும் அந்த ஒலிபரப்பில் விளக்கினார்களாம். தொழிற்சாலைக்கான கட்டிடம் மட்டும் காலியாக இருந்ததும், அங்கே வரப்போகும் 'மெஷீன்'கள் எல்லாம் ராட்சஸ அளவுள்ள பெட்டிகளில் அங்கே இறக்கப்பட்டிருந்ததும் எல்லாமே ஒலிபரப்பில் வந்ததாம்!

அன்றுமாலை, வியாபாரம் செய்யும் பிரிவைச் சேர்ந்தவர்களின் வரவேற்பும், எல்லோரையும் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சிகள் எல்லாம் தவறாது நடந்ததால் ஒரே நாளில் எல்லோருக்கும் எங்களைப்பற்றித் தெரிந்திருந்தது!

இந்த ரேடியோ ஒலிபரப்பு என்பது இங்கே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இருபத்துநாலு மணி நேரமும் இந்தியர்களுக்கான 'ஹிந்தி' ஒலிபரப்பு உண்டு.ஒலிபரப்பின் நடுவே திடீர் என்று ஒரு தமிழ்ப் பாட்டு, ஒரு மலையாளம் பாட்டு, தெலுங்குப் பாட்டு என்ரறு வரும்! வீடுகளிலும், கடைகளிலும், மற்ற தொழிற்சாலைகளிலும் கூட ரேடியோ நிகழ்ச்சி கேட்டுக்கொண்டே எல்லா வேலைகளும் நடந்துகொண்டிருக்கும்.

இங்கே யாராவது இறந்துவிட்டாலும், செய்தி சொல்வதற்கு முன்பாக 'டிங் டிங்'என்று ஒரு ஓசை வரும். அப்போதே தெரிந்துவிடும்! ஏதோ ஒரு 'சோக் சமாச்சார்' வரப்போகிறதென்று. அதில் விஸ்தாரமாக, இன்ன இடத்தில், இன்ன பெயருள்ள நபர் இறந்துவிட்டார். அவருடைய பிள்ளைகள் நெருங்கிய குடும்பத்தினர் பெயர்கள். சாவு எடுக்கப் போவது எத்தனை மணிக்கு, எந்த நாளில், எங்கே கொண்டு போய் அடக்கம் செய்வார்கள் என்றெல்லாம் சொல்வார்கள். ஒருமுறை அல்ல, பலமுறை.


இது நாடு முழுவதும் ஒலிபரப்பாகும். செய்தியை ஆட்களிடம் சொல்லி அனுப்பும் பழக்கம் எல்லாம் இல்லை. நாம் இதைக் கேட்டுவிட்டு, உடனே நம் பேட்டையில் என்றால் அவர்கள் வீட்டுக்குப் போய் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு வரவேண்டும்.சவ அடக்கம் ஆகும்வரை, அங்குள்ள மருத்துவமனை சவக்கிடங்கில் அந்த சடலம் பாதுகாக்கப்படும்.

ஃபிஜி 1989-ல்தான் சுதந்திர நாடாகத் தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டது. அதற்குமுன், 'காமன்வெல்த்' நாடுகளில் ஒன்றாகவும், பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் நேரடி அதிகாரத்திலுமே இருந்தது. அரசியின் சார்பாக 'கவர்னர் ஜெனெரல்' இருந்தார். ஆகவே ஃபிஜி குடியுரிமை உள்ளவர்கள், கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு பிரத்தியேக விசா ஏதும் இன்றி பயணிக்கவும் அங்கே தங்கி வேலை செய்யவும் தடைகள் ஏதும் இல்லாமல் இருந்தது.

இந்திய வம்சாவளியினர், மூன்று நான்கு தலைமுறைக்குப் பின்னர் பிறந்தவர்கள் மற்ற நாடுகளில் போய் தங்கள் வாழ்க்கையை ஆரம்பிக்க ஆவலுடன் இருந்தனர். அப்படியே பல குடும்பங்களில் நிறைய ஆட்கள், மகனும் மகளும் பேரக்குழந்தைகளுமாய் இடம் பெயர்ந்துவிட்டனர். இதனால், எப்படியும் ஒரு குடும்பத்தில் குறைந்த பட்சம் யாராவது ஒருவர் வெளியே இருந்து வரவேண்டுமென்ற நிலையில் இருப்பதால், சவ அடக்கம் ஒருபோதும் உடனே நடப்பதற்கு இயலாத நிலை.

அந்த நாள் வரும்வரை, மரணித்தவர்கள் வீட்டில் அடுப்புப் பற்றவைத்து சமைக்க முடியாது என்ற சாஸ்த்திர சம்பிரதாயத்தை ஒட்டி, அயல்பக்கத்தினரும், நண்பர்களின் குடும்பங்களும் ஏதாவது சமைத்துக் கொண்டு போய் அந்த வீட்டில் வைத்துவிட்டு வருவார்கள். கெட்டில் கெட்டிலாகத் தேநீரும், 'ப்ரெட்'டும், மற்ற சாப்பாடுவகைகளும் அடுக்களையில் குவிந்திருக்கும்!

அதைத்தவிர தினமும் மாலையில் அவரவர் தர்மத்தின்படி, கீதையோ, பைபிளோ படிப்பார்கள். அதற்கும் அயல்பக்க வீடுகளில் இருப்பவர்களும், நண்பர்களுமாகப் போய்வருவார்கள்.

சாவு வீடு என்றால், இந்தியக் கிராமங்களில் இருப்பதைப் போல் இல்லாமல் எல்லோரும் நல்ல உடை உடுத்துக் கொண்டு அலங்காரமாகவே இருப்பார்கள். அடக்கம் செய்யும் நாளன்று 'சட்'டென்று பார்ப்பவர்களுக்கு ஏதோ நல்ல விசேஷம் நடக்கும் இடம் போல எல்லோரும் நல்ல ஆடை ஆபரணங்களுடன் இருப்பார்கள். சோகத்தையுமே கொண்டாடத் தெரிந்தவர்கள்!


இன்னும் வரும்
*****************

Tuesday, October 05, 2004

சக்கரை இனிக்குற சக்கரை

ஃபிஜி அனுபவங்கள். பகுதி 4


சக்கரை இனிக்குற சக்கரை
******************************
பணம் காசு இங்கே யாருகிட்டே தெரியுமா? வழக்கம்போல குஜராத்திங்க கிட்டேதான்! அவுங்கதானே வியாபாரம் செய்யறாங்க! மத்த இந்தியர்கள் எல்லாம், வெள்ளைக்காரரோட இருந்த அக்ரிமெண்ட் முடிஞ்சபிறகு, இங்கேயே செட்டில் ஆயிட்டாங்கல்ல. அவுங்க என்ன செஞ்சாங்க? அவுங்களுக்குத் தெரிஞ்ச ஒரே தொழிலான விவசாயம், கரும்புத் தோட்டத்துலே பயிர் செய்ய்றதுன்னு ஆரம்பிச்சாங்க.


இந்த நாட்டுலே எல்லா விளை நிலங்களும், எல்லாவிதமான நிலப்பரப்பும் மண்ணின் மைந்தர்களான ஃபிஜியன்களுக்குத்தான்! நமக்குஇடம் வேணுமுன்னா, நாம் ஒப்பந்தம் போட்டு அதை உபயோகிக்கலாம். எந்த மாதிரி ஒப்பந்தம்? 99 வருஷம்! நம்ம ஆளுங்க எல்லாரும் அப்படித்தான் ஒப்பந்தம் போட்டு, இடம் எடுத்து, வீடுவாசல்ன்னு இருக்காங்க! இந்திய ஆளுங்களுக்குத் தேவையான சாமான்களை விக்கறதுக்கு வந்தவங்கதான் குஜராத்திங்க! இதுலே பாருங்க ஒரு விசேஷம், இங்க இருக்கற குஜராத்திங்க 99 சதமானம் ஒரே ஊர்லே இருந்து வந்தவுங்க! குஜராத்துலே இருக்கற 'நவ்சாரி'ங்கறது அந்த ஊர். எப்படி ஒரே ஊர்க்காரங்க வந்திருப்பாங்க? ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம். கொஞ்சம் யோசிக்க வேணும்.

'ஃபிஜி ஷுகர் கார்ப்பொரேஷன்' ன்னு ஒரு நிறுவனம் இருக்கு. இது அரசாங்கத்துக்குச் சொந்தமானது. நாட்டுலே விளையற மொத்தக் கரும்பையும் இவுங்கதான் வாங்குவாங்க. வேற யாருக்கும் விவசாயிங்க விக்க முடியாது. கரும்பு நடவு காலம் வரும்போது, இவுங்களே விவசாயிங்களுக்குக் கடன் கொடுப்பாங்க. அதைச் செலவு செஞ்சு கரும்பு நட்டு, அறுவடையாகும் காலம் வரும்போது அதை இவுங்க கம்பெனிக்கு வித்துறணும். அப்ப கரும்புக்கு உண்டான விலையிலே இருந்து, கடனைக் கழிச்சுட்டு, பாக்கியை தருவாங்க. இப்படிதான் பொழைப்பு ஓடிகிட்டு இருக்கு!

'ஷுகர் கார்ப்பொரேஷன்', சக்கரையை மத்த நாடுகளுக்கு ஏற்றுமதி செஞ்சிரும்! கரும்பு விளையுற ஊரிலே, பொங்கல் பண்டிகைக்குக்கூட ஒரு கரும்பை நாம எடுக்க முடியாது. கடையிலே கரும்பை விக்கக் கூடாது. ஆனா, தெரிஞ்சவுங்க தோட்டத்திலே இருந்து ரெண்டு கரும்பைக் கொண்டு வந்து படைக்கலாம்!


சர்க்கரையைக் கூட நல்ல வெளுப்பா ஆக்காம, ஒரு இளம் பழுப்புக் கலருலேயெ எடுத்து ஏற்றுமதி செஞ்சிருவாங்க. சட்டுன்னு பாத்தா ஆத்துமணலு போலவே இருக்கும்!

வருஷத்துலெ ஒரு குறிப்பிட்ட காலம் வரைதான் சர்க்கரை ஆலை வேலை செய்யும். அப்புறம் அதை 'மெயிண்டனன்ஸ்' செய்யவேணுமில்லையா?அது மூடறதுக்குள்ளெ எல்லா அறுவடையும் நடக்கணும். சிலசமயம் ஆளுங்க கிடைக்காம பிந்திப்போச்சுன்னா, நஷ்டம் ஆயிருமே.அப்போ என்ன செய்வாங்கன்னா, கரும்புக் காட்டுக்குத் தீ வச்சிருவாங்க! எல்லா தழையும் எரிஞ்சதும் அணைச்சிருவாங்க.கரும்பு மட்டும் 'குச்சி குச்சி'யா நிக்கும். அதை வெட்டறது கொஞ்சம் சுலபமாச்சே.' டக் டக்'குன்னு அறுத்துருவாங்க. இந்தத் தீஞ்சகரும்புக்கு விலை கொஞ்சம் கம்மியாத்தான் கிடைக்கும். ஆனா, முழுசா நஷ்டம் வரதுக்கு இது மேல் இல்லையா?

கரும்புக் காசு வர்ற சமயம் ஊரே கலகலப்பா இருக்கும். காசு ஓட்டம் இருக்குல்லே! கடைகளிலே வியாபாரம் அமோகம்! துணிமணி,நகை நட்டு, கல்யாணம் கார்த்தி எல்லாம் அப்பதான்.
கொஞ்சம் ஆளுங்க,வீட்டைச் சுத்தி இருக்கற இடத்துலே நமக்குத் தேவையான காய்கறிகளைப் பயிர் செஞ்சு, சனிக்கிழமை கூடும் சந்தைநாளில் கொண்டுவந்து விற்று, அவ்வப்போது கொஞ்சம் காசு பார்ப்பார்கள்.
கிலோக்க கணக்கு கிடையாது. எல்லாம் 'கூறு கட்டி வச்சிக்கிட்டு, குந்துக்கினு கூப்பிட்டா கோடி சனம் தேடிவரும்' கதைதான்! நம்ம ஊர் காய்களுக்குப் பஞ்சமே இல்லை. எப்பவும் வெயில்தானே. அச்சு அசல் தென் இந்தியாதான். ஆனா எல்லோரும் ஹிந்தி பேசுறதாலெ வட இந்தியா மாதிரி ஒரு தோணல்!


இன்னும் வரும்.
****************

Monday, October 04, 2004

குளு குளாத் திருவிழா !!!!

தொடர்ச்சி பகுதி 3 புரட்டாசி மாதம்!!
****************************************


இப்போது புரட்டாசி மாதம் நடக்கிறதல்லவா? ஃபிஜி மாரியம்மன் கோவிலில் 'குளு குளாத் திருவிழா' நடக்கும் காலம்.

இந்தத் திருவிழாவைப் பற்றி இந்தியாவில் ஏதும் விவரங்கள் இல்லை. புரட்டாசி சனிக்கிழமைகளில் கடைசி சனிக்கிழமையன்று, கோவிலில் குளுகுளாத் திருவிழா நடக்கும்.


குளுகுளா என்றால் என்ன?

இது மைதாமாவில் சர்க்கரை சேர்த்துப் பிசைந்து, சின்ன உருண்டைகளாகச் செய்து எண்ணெயில் பொரித்தெடுக்கப்படும் ஒரு தின்பண்டம்.
விழாவுக்கு மூன்று நாட்கள் முன்பே விரதம் அனுஷ்டித்து, இந்த பூஜையில் கலந்து கொள்பவர்கள், கோவிலிலே தங்கியிருப்பார்கள்.


விழாவன்று மாலையில் அம்மன் சந்நிதி முன்பு ஒரு மேடை போட்டு அதில் அடுப்பு வைத்து, ஒரு பெரிய வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ச்சுவார்கள். வேறு ஒரு பாத்திரத்தில் மாவையும் சர்க்கரையையும் சேர்த்து, நெய்யும் கொஞ்சம் ஊற்றிப் பிசைந்து,(சப்பாத்திமாவுப் பதத்தில் ) சின்னப் பந்து அளவில் உருட்டி வைப்பார்கள். எண்ணெய் காய்ந்துகொண்டே இருக்கும்!


இதில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் குளித்து முடித்து,வாயில் ஒரு துண்டைக் கட்டிக் கொண்டு, அம்மனை வணங்கி வரிசையாக வந்து எண்ணெய்ச் சட்டிக்கு முன் நிற்பார்கள். மாவு பந்துக்கள் எண்ணெயில் போடப்படும். அவை வெந்து பொன் நிறமாக மாறும்போது, ஒவ்வொருவராக வந்து, 'வெறும்' கைகளால், அந்த எண்ணெயிலிருந்து கோரி எடுப்பார்கள். கைகளை முக்கி குளுகுளாக்களை எடுத்து, அப்படியே கைகளை உயர்த்திக் காட்டிவிட்டு, ஒரு பாத்திரத்தில் வைப்பார்கள். விரதம் இருந்த்வர்கள் எல்லாரும் எடுத்தபின்,அவைகளை அம்மனுக்கு முன்வைத்து பூஜித்து, அனைவருக்கும் பிரசாதமாக வழங்குவார்கள்!

ஒவ்வொருவரும் எண்ணெயில் கைவிடும்போது 'கோவிந்தா கோவிந்தா' என்ற கோஷம் முழங்கப்படும்! புரட்டாசி மாதம் என்றெல்லாம்சொல்லத்தெரியாது. ஆனால் கோவிந்தாப் பூஜை மாசம் என்றே குறிப்பிடுவார்கள். இந்த 'கோவிந்தா' முழக்கம் எல்லா திருவிழாக்களுக்குமே பொது!

பழைய தலைமுறையைச் சேர்ந்தவர்களின் வீடுகளிலும் இந்த புரட்டாசிச் சனிக்கிழமை பூஜை நடத்துவார்கள்.

இங்கே சங்கம் என்ற பெயரில் ஒரு அமைப்பை இவர்கள் தொடங்கி, பள்ளிக் கூடங்களைக் கட்டி நடத்தி வருகின்றனர். இப்பள்ளிகளில் கற்பிப்பதற்கு, தமிழ் நாட்டிலிருந்தே ஆசிரியர்களை வரவழைத்திருந்தனர். இங்கே தமிழும் ஒரு பாடமாகப் போதிக்கப்பட்டு வந்ததாம். தலைமுறைகள் மாற மாற, தமிழ்ப் படிக்கும் மாணவர் எண்ணிக்கை குறைந்து விட்டது என்றும் அதனால் தற்சமயம் தமிழ் போதிக்கப்படுவதில்லை என்றும் தெரிவித்தார்கள். ஆனால் சங்கம் பள்ளிகள் அநேகக் கிளைகளைக் கொண்டிருக்கிறது!

வட இந்தியர்கள் முதலில் வந்ததால், ஹிந்தி மொழி பரவலாகப் பேசப்பட்டு, பின்னர் நம் தென் இந்தியர்களும் அவசியத்தை முன்னிட்டு ஹிந்தி பேசக் கற்றுக் கொண்டனராம். இப்போது ஃபிஜியில் ஹிந்தியும் ஒரு தேசியமொழியாக உள்ளது. மற்ற இரண்டும் ஆங்கிலமும்,ஃபிஜியன்என்னும் மண்ணின் மைந்தர்களின் மொழியும்! இந்த மொழிக்கு எழுத்துரு கிடையாது. ஆங்கில எழுத்துக்களையே பயன்படுத்துகின்றனர்.


ஃபிஜியர்

இவர்கள் கள்ளமில்லா மனத்தினர். என்ன ஒன்று, நாளை என்பதைப் பற்றிய கவலை இல்லாமல் வாழ்ந்து பழகியவர்கள்.இவர்களுடைய வாழ்க்கை முறை நம் வழக்கத்திலிருந்து மாறுபட்டது.


ஒவ்வொரு பகுதியைச் சேர்ந்தவர்களும், 'கோரோ' என்று அழைக்கபடும் சின்ன கிராமத்தில் கூட்டாக வசிக்கின்றனர். அந்த்க் 'கோரோ'வின் தலவர்தான் இவர்களுக்குப் படியளக்க வேண்டும்! அவர்கள், தங்களது இருப்பிடத்தைச் சுற்றி மரவள்ளிக் கிழங்கு, இன்னும் 'டாரோ'என்று அழைக்கடும் கிழங்கு வகைகளப் பயிரிட்டு , அதையே முக்கிய உணவாகவும் பயன் படுத்துகின்றனர். அரசாங்கம் தரும் உதவிப்பணம் அந்தந்த கோரோவின் தலைவர் மூலமாகப் பொருளாகவோ, பணமாகவோ அவர்களுக்குப் பிரித்துத் தரப்படுகின்றது.

வேலை செய்பவர்களும் அந்தந்த வாரச் சம்பளத்தை கிடைத்த அன்றே தீர்த்துவிடுவார்கள்!

வீட்டுவேலைக்கு இவர்கள் வந்தால் எல்லா வேலைகளையும் நம் மனம்
கோணாமல் செய்வார்கள். என்ன ஒன்று, சாப்பாடு
எதிர்பார்ப்பார்கள். சாப்பாடு என்றால், தலை வாழை இலை போட்டு விருந்தா? 'ப்ரெட்'ம் தேனீரும் தான்! இதுவே இவர்களுக்கு விருப்பம்!


இவர்களின் குடியிருப்புகளுக்குப் போனால் அன்போடு வரவேற்பார்கள். நல்ல வெள்ளந்திச் சிரிப்பு !!! இவர்களில் ஏறக்குறைய அனைவருமே ஹிந்தி பேசுவார்கள்! ஆனால் ஃபிஜியன் மொழி பேசும் இந்தியர்கள் வெகு அபூர்வம்! எல்லோரையுமே 'கைஸே பெஹனி, கைஸே பையா ( எப்படி இருக்கின்றீர்கள் சகோதரி/சகோதரா) என்றே சம்பாஷனையை ஆரம்பிப்பார்கள்.


இன்னும் வரும்
******************

Friday, October 01, 2004

கரும்புத் தோட்டத்திலே !!!!

'பாரதி' யின் கரும்புத் தோட்டத்திலே படித்திருக்கின்றீர்களா?

ஃபிஜித் தீவில் நிறைய இந்தியர்கள் இருக்கிறார்களல்லவா? இவர்களில் மூன்று பிரிவினர் உண்டு.தென்னிந்தியர்கள், வட இந்தியர்கள் மற்றும் குஜராத்தைச் சேர்ந்தவர்.

இவர்களில் தென் இந்தியாவைச் சேர்ந்தவர்களை, 'மந்த்ராஜிகள்' என்று மற்ற பிரிவினர் குறிப்பிடுகின்றனர். வட இந்தியர்களை 'குருவிக்காரங்க' என்று நம் 'மந்த்ராஜிகள்' கூறுவார்கள். குஜராத்தைச் சேர்ந்தவர்களை உலகம் பூராவும் எல்லா இடத்திலும் சொல்வதுபோலவே 'குஜ்ஜுஸ்' என்றும், நேடிவ் ஃபிஜி ஆட்களை, நம்ம ஆளுங்க எல்லாம் 'காட்டுப் பூச்சி' என்றும் சொல்வார்கள்.
எல்லாம் மறைமுகமாக, ரகசியமாகத்தான். ஆனால் இது எல்லோருக்கும் தெரிந்த ஒரு ரகசியம்.


நம் தமிழ் ஆட்கள் தங்களோடு கூடவே தம் கடவுளர்களையும் கொண்டு வந்துவிட்டனர்.

இங்கே 'ம்பா' என்னும் இடத்தில் உள்ள 'மாரியம்மன் கோயில்' மிகவும் பிரசித்திப் பெற்றது. ஆடிமாதத்தில், 'தீமிதி' உண்டு. தீமிதித் திருவிழாவுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே, தீயில் இறங்கும் ஆட்கள் அனைவரும் காப்புக் கட்டிக்கொண்டு விரதம் அனுஷ்ட்டிப்பார்கள். உணவு, உறக்கம்எல்லாமே கோவிலில்தான். கரகம் ஒன்றை அல்ங்கரித்து, தினமும் மேளதாளத்துடன் (சுத்தி இருக்கற பதினெட்டுப் பட்டி) கிராமங்களுக்குப் போவார்கள். அங்கங்கே கிராம மக்கள் , கிரகத்துக்கு கற்பூரதீபம் காட்டி, பிரசாதங்களை வைத்துப் பூஜித்து அந்தக் குழுவினருக்கு வழங்குவார்கள். வீடுவீடாகஇந்தக் கரகமும், தீமிதிக்கும் குழுவினரும் போவார்கள். இங்கே ஒரு வீட்டுக்கும் அடுத்த வீட்டுக்கும் நடுவே கரும்புத் தோட்டங்கள் காணப்படும்! ஏழெட்டு வயதுமுதல், முதியோர்கள்வரை இந்த தீமிதிக்குழுவில் இருப்பார்கள். அட்டைகளால் செய்யப்பட்ட ஒரு உருவம் 'மெகா சைஸஸில்' கூடவே வரும்! அதற்குள்ளே ஒரு ஆள் இருந்து அதைச் சுமந்துகொண்டு வருவார்!
மாரியம்மன் சிலையும் சும்மா பெரிதாக 'லைஃப் சைஸ்'ல் இருக்கும். நல்ல நைலக்ஸ் புடவை உடுத்தியிருக்கும் சாமி சிலைகள் எல்லாம். களிமண் கொண்டு பூசிய சிலைகள். கண்கள், முகம் எல்லாம்பெயிண்ட் கொண்டு வண்ணம் பூசப்பட்டிருக்கும்.


தெருக்கூத்து நாடகமும் உண்டு! ஒரே கதைதான். அசுரனைக் காளி நிர்மூலம் செய்தது! கட்டியங்காரர்,விதூஷகர் எல்லாமும் உண்டு. தமிழும் ஹிந்தியும் கலந்துதான் நாடக வசனக்கள் இருக்கும்.

பழைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தமிழ் பேசுவார்கள். இப்போதுள்ள தலைமுறையினர், தாங்கள் மந்த்ராஜிகள்தான் என்றும் தாத்தா, பாட்டிதான் மந்த்ராஜி பேசுவார்கலள் என்றும் இவர்களுக்குத் தெரியாது என்றும் ஹிந்தியில் சொல்வார்கள்.

சுமார் 150 வருடங்களுக்கு முன்பூ 'ப்ரிட்டிஷ்' காரர்களால் கரும்புத் தோட்டத்தில் கூலிவேலை செய்யக்கொண்டுவரப்பட்டவர்கள் இவர்கள்.

இன்னும் வரும்
****************