Sunday, June 22, 2008

யானைக்குப் பக்கத்திலே சிங்கம்!!(தொடர் பகுதி 3)

யானைக்குப் பக்கத்தில் சிங்கம் இருந்தா எப்படி இருக்குமுன்னு இங்கேதான் பார்த்தேன். சுத்திவர இருக்கும் மலைகளுக்கும் பெயர் வச்சுருக்காங்க. ஆனைமலை ன்னு ஒன்னு இருக்குன்னு சொன்னா நீங்க நம்பணும். இது என்னடாப் புதுக் கதை? நமக்காகச் சொல்றாங்களான்னு பார்த்தேன். இன்ன இடத்துலே நின்னு இன்ன திக்கைப் பாருங்க. அது யானைத் தலை, இது உடம்பு இது வால் பகுதின்னு அச்சடிச்சுக் கொடுத்துட்டாங்கல்லே? சிங்கமலை இருக்கு:-)))



மைட்டர் பீக் ன்னு ஒரு சிகரம் இங்கேதான் இருக்கு.
கிறிஸ்தவ மத பிஷப்புக்கள் போட்டுக்கும் தலைத் தொப்பிக்குத்தான் மைட்டர்ன்னு பெயராம். இந்த மலையின் சிகரம் அசப்புலே பார்க்க இப்படி இருக்குன்னு, இந்த பகுதியை சர்வே பண்ணவந்த குழுவில் இருந்த ஒருத்தர் மைட்டர் பீக் ன்னு இந்தப் பெயரை வச்சுட்டாராம். பெயர் வைப்பதில் கில்லாடிகளா இருக்காங்க இல்லே? இன்னொரு ருசிகரமான(?) தகவல் சொல்லிக்கவா? இதே பெயரில் பாகிஸ்தான்லே ஒரு மலைச்சிகரம் இருக்கு. அது ரொம்பவே பெருசு. நியூஸியைவிட மூணரை மடங்கு உசரம்.







மைட்டர் போட்டுருக்கும் பிஷப்பிடம் இருந்து ஆசி வாங்கும் கட்டுரை ஆசிரியை:-)
எங்களை இறக்கிவிட்ட படகே திரும்பிவந்து எங்களை ஏத்திக்கிட்டு அந்த சவுண்டுலே ரவுண்டு போய்க்கிட்டு இருக்கு. ஒரு பாறை முழுசும் இளவெயில் காஞ்சுக்கிட்டுச் சோம்பலாப் படுத்திருக்கும் ஸீ(ல்) லயன்கள் மனுசர்களின் பேச்சுச்சத்தம் கேட்டோ என்னவோ மெள்ளத் தலையை உயர்த்திப் பார்த்துட்டு,


"போங்கடா மனுசப்பயலுவளா...... வேற வேலை இல்லையாக்கும்?" என்றது போல ஒரு லுக் விட்டதுங்க.




'தினந்தினம் ஒரே மாதிரியான சாப்பாட்டைத் திங்கறீங்க இல்லே? அதான் நாக்குச் செத்து இப்படிப் போரடிச்சுக் கிடக்குறீங்க'ன்னு நானும் சொல்லிவச்சேன்.


பொழுதன்னைக்கும் தண்ணியிலே இருந்து ஒவ்வொண்ணும் மழமழன்னு யம்மா யம்மான்னு மினுங்குதுங்க. கோட்டுப் போட்ட சின்ன மச்சான்கள்தான்.ஃபர் சீல்கள்.( Fur seals) வகைகள்.



இவ்வளோ உசரத்துக்கு எப்படி இழைஞ்சு இழைஞ்சு ஏறிப்போயிருக்குன்னு பாருங்க!!!!





தமிழ்ச்சினிமாவில் குத்தாட்டம் ஸீன்லே ஆட்டக்காரி போட்டுக்கும் தாவணி மாதிரி அங்கங்கே பச்சை மாமலை மார்பில் மெல்லிசா நூலருவிகள்.








வேடிக்கையை இன்னும் நல்லாப் பார்க்கக் கப்பல் மேல்தளத்தில் போய் உட்கார்ந்தோம். எல்லாச் சனமும் இங்கேதான் இருக்கு. (நினைவிருக்கா? 4 பேருக்கு மேல் இருந்தால் கூட்டம் என்று கொள்க. )ஸ்ட்ர்லிங் ஃபால்ஸ் பக்கம் போய்க்கிட்டு இருக்கோம். கேப்டன் விலாவரியா காட்சிகள் விளக்கம் சொல்லிக்கிட்டே வந்தவர், எல்லாரும் கேமெராவை எடுத்து உள்ளே வச்சுருங்கன்னார். காட்சிகளைப் படம் புடிக்கவிடாம இது என்ன புதுசா? அழகை எல்லாம் அள்ளிக்கிட்டுப் போயிருவோமுன்னு நினைச்சுக்கிட்டாரா?



இல்லையாம். தள்ளிக்கிட்டுப் போயிருமாம் தண்ணின்னு சொல்லிப் படகை நீர்வீழ்ச்சிக்குச் சமீபமாக் கொண்டு போயிட்டார். என்ன ஏதுன்னு தலையை உயர்த்திப்பார்க்க முயலும் வேளையில் ஜாக்கெட் எல்லாம் போட்டுருந்தும் ஆகாசகங்கையில் தொப்பலா நனைஞ்சுட்டோம். அந்தப் பகுதியில் சுழன்று அடிக்கும் காத்துலே தண்ணி ஒரு ஆளையும் தப்ப விடலை. இந்த கலாட்டாவில் கூட்டத்தில் இருந்த ஒருத்தரின் மூக்குக்கண்ணாடி உண்மையில் 'பறந்தே' போயிருச்சு! புகையில் மாட்டிக்கிட்டதுபோல கண்ணையே திறக்கமுடியலை.



இதுக்கெல்லாம் அசரமாட்டோமுன்னு ஒரு போலி வீரம் காமிக்கலாமுன்னாலும்........ ஹைய்யோ............ மேல்தளம் பூராவும் தெப்பக்குளம். கம்பியேணியில் அடிச்சுப்புடிச்சு இறங்கிக் கீழ்தளத்துக்கு ஓடுனோம். ஸ்டெர்லிங் நீர்வீழ்ச்சி இதுவரை லீவே எடுக்கலையாம். வருஷம் முழுசும் ஒரே 'ஜோ'தான்:-)



ஒரு பத்து நிமிஷம் இங்கே ஸ்டாப் போட்டுட்டார் நம்ம கேப்டன். அதுக்குப்பிறகு பயணம் நேராக் கரைக்குத்தான். வேற ஒன்னும் பார்க்க முடியாம எல்லாரும் துணிகளைப் பிழிஞ்சுக்கிட்டும் தலையைத் துண்டால் துடைச்சுக்கிட்டும் இருந்தோம். மஜாவான கூட்டுக்குளியல்தான்:-)))





அடிக்கும் குளிர் காத்துக்கும் ஈர உடுப்புக்கும் என்னதான் அப்படியொரு ஜோடிப்பொருத்தமோ....... சில்லான சில். காரில் இருக்கும் ஹீட்டரை முழு வேகத்தில் வச்சுக்கிட்டு ஒரு வழியாத் திரும்பிவந்தோம். அப்படியும் ஒரு இடத்தில் Chasm என்ற போர்டைப் பார்த்துட்டு ஒரு ஸ்டாப் போட்டுட்டுத்தான் வந்தோம். ஹோ என்ற இரைச்சலுடன் அதலபாதாளத்தில் இருக்கும் மலைக்குகையின் பாறைகளை முழுவேகத்துடன் முட்டிமோதிக்கிட்டு வெள்ளம் பாயுது. எத்தனையோ நூற்றாண்டுகளா ஓய்வு ஒழிச்சல் இல்லாம இதுக்கு இதுதான் வேலையாம். தண்ணீ நடமாட்டம் பாறைகள் எல்லாம் வழுவழுன்னு உருட்டிவச்சுருந்தது.





வழியெல்லாம் திடீர்திடீர்ன்னு சத்தம் வரும்பக்கம் பார்த்தால் அங்கெல்லாம் ஒரு நீர்வீழ்ச்சி இருக்குது. கேஸ்கேட் ஃபால்ஸ் ரொம்ப அழகு. கைக்கு எட்டும் தூரம்.
நாம்தான் இப்படி மூணுநாலு நாள் டூர்ன்னு போய் நோகாமப் பார்த்துட்டு வர்றோம். உண்மையாச் சுத்திப் பார்க்க வரும் இளவயசுக்காரங்க 10 நாள் ரெண்டு வாரமுன்னு மலை, காடுகள் எல்லாம் கால்நடையாவே ஏறி இறங்கிச் சுத்திப் பார்க்கறாங்க. எல்லாம் கைடட் டூர்தான். அங்கங்கே இதுக்காகவே கட்டி விட்டிருக்கும் குடில்களில் இரவைக் கழிச்சுட்டுப் பகல்முழுதும் சுற்றிவர்றாங்க.

நம்ம தோழி ஒருத்தரின் கணவர் தன்னுடைய நெடுநாள் ஆசை இதுன்னு சொல்லி மூணு வருசம் முந்தி இப்படி 8 நாள் போய்வந்தார். அப்ப அவருக்கு வயசு 77தான்!


'நம்ம கங்கை'யை ஒரு முறை பார்ப்பதுதான் வாழ்க்கையின் லட்சியமுன்னு எப்பவும் சொல்லிக்கிட்டே இருந்த நான், 'ஆகாசத்துலே இருந்து நேரா இறங்கிவரும் கங்கையை இன்னிக்கு அனுபவிச்சுட்டேன். இதுவே ஆயுசுக்கும் போதுமு'ன்னு புலம்பிக்கிட்டே ஒரு பரவச நிலையில் இருந்தேன்.



தொடரும்.........


விடுபட்டவை:
(மெய்மறந்த நிலையில்.....ஆனை மலையை படம் எடுக்கத் தவறிட்டேன்.)


52 comments:

said...

ரீச்சர், படமெல்லம் சூப்பர். ஊரில் இல்லை. ஆனாலும் உங்க பதிவுக்கு வந்துட்டேன்!!

said...

ஆண்டு முழுவதும் “ஜோ வாக இருக்கும் நீர்வீழ்ச்சி மலைக்கு ஏன் சூர்யா என்று பேர் வைக்கலை?

said...

வாங்க கொத்ஸ்.

க்ளாஸ் லீடருக்கான கடமையே இதுதான்.

நல்லா இருங்க.

said...

வாங்க குமார்.

சூரியனைப் பார்ப்பதே அபூர்வமுன்னு இருக்கோம்.

இதுலே ஒரு மலைக்கு மட்டும் சூர்யான்னு பெயர் வைச்சா நல்லாவா இருக்கும்?

Anonymous said...

//ஆனைமலை ன்னு ஒன்னு இருக்குன்னு சொன்னா நீங்க நம்பணும்// பூனைகள் ஞாபகம் வராம ஆனைகள் ஞாபகம் வந்ததை ஜிகேயும் ஜூனியரும் கண்டிக்க சொன்னாங்க. விட்டுட்டு போனது மட்டுமில்லாம ஞாபகமே வரலியான்னு.

//இடத்தில் Chasm என்ற போர்டைப் பார்த்துட்டு ஒரு ஸ்டாப் போட்டுட்டுத்தான் வந்தோம்// இது இருக்கறது மில்பர்ட் சவுண்டாச்சே !!!!சீல் , மைட்டர் பீக் எல்லாம் டவுட்ஃபுல் சவுண்ட்ல இருக்கறதுல்ல, எல்லாத்துக்கும் ஒரே நாள்லயா போனிங்க‌

said...

ஆஹா,
இப்பவே கோடை விடுமுறைய ஞாபகப் படுத்திட்டீங்களே மேடம், எங்களுக்கு ஜூலை கடைசியில்தான் இந்த வாட்டி விடுமுறை கிடைச்சிது.

said...

மேடம்,
புதுப் பதிவு போட்டிருக்கேன், நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்க

said...

//பொழுதன்னைக்கும் தண்ணியிலே இருந்து ஒவ்வொண்ணும் மழமழன்னு யம்மா யம்மான்னு மினுங்குதுங்க. கோட்டுப் போட்ட சின்ன மச்சான்கள்தான்.ஃபர் சீல்கள்.( Fur seals) வகைகள். ///

'மழமழன்னு யம்மா யம்மான்னு' டைமிங் அட்டகாசம். படித்தவுடன் குபுக் என்று சிரிப்பு வந்தது.
:)

said...

அந்த கண்ணாடி பறந்த விசயம் எனக்கு ஒரு பதிவு போடறதுக்கு விசயம் இருக்க்குன்னு நினைவு படுத்துது.
துளசி சென்ஷீயின் பதிவு பார்க்கலயா..இந்த பாப் அப் பயங்கரமா படுத்துதே...பின்னூட்டம் போட படு சிரமம்.

@ராப் இது என்னங்க எல்லாரும் விஜய் மாதிரியே ஆரம்பிச்சிட்டீங்களா? :)

said...

வாங்க சின்ன அம்மிணி.

மலையையே இடம்பெயர்த்து வச்சுட்டு வந்துட்டீங்களா உங்க ட்ரிப்லே? :-))))))

இங்கேயும் ஓரு ஸீல் பாய்ண்ட் இருக்கு.

உங்களுக்காகவே கூடுதலா இப்ப ஒரு மேப் பதிவுலே சேர்த்துருக்கேன்.

said...

வாங்க ராப்.

வட கோளத்துக்கு வரலாமான்னு இருக்கு. இங்கே குளிர் நடுக்கம் இந்த வருசம் கூடுதல்.

வரேன் உங்க வீட்டுக்கு:-)

said...

வாங்க கோவியாரே.

இப்பத்தான் 'குருவி' பார்த்தேன்.

அதான்......

சோகத்தை இப்படி மறந்தால்தான் உண்டு. இல்லீங்களா? :-)))))

said...

வாங்க கயலு.

கொசுவத்தி வித்துட்டேனா உங்களுக்கு!!! :-)))))

பாப் அப் எடுத்துருக்கேன். பார்க்கலாம் சரியா வருதான்னு........

ப்ளொக்கர் என்னமோ குழப்படி செய்யுது இப்ப ரெண்டு நாளா....

said...

முதல் படத்தில் யானையை தேடி தேடி பார்த்து ஒரு வேளை இருக்கின்றதோ என கீழே வந்தால் ஆனை படம் இல்லையாமே/..........:)))

said...

வாங்க தமிழ் பிரியன்.

நானும் எங்க ஆல்பத்துலே தேடிப் பார்த்தும் கிடைக்கலை. கூகுளில் வேணுமுன்னா தேடிப்போடவா?

அதுக்கு நேரம் கிடைக்கணும். பார்க்கலாம்.

said...

படமெல்லாம் சூப்பரா இருக்கு :)

said...

தமிழ்ச்சினிமாவில் குத்தாட்டம் ஸீன்லே ஆட்டக்காரி போட்டுக்கும் தாவணி மாதிரி அங்கங்கே பச்சை மாமலை மார்பில் மெல்லிசா நூலருவிகள். //

இடையில இடுக்குல இந்த மாதிரி ஒரு கிளுகிளு கமெண்ட்ஸ் குடுக்கறீங்க பாருங்க. வயசான காலத்துலயும் இளமை திரும்பறா மாதிரி இருக்கு.

மத்தபடி ஒரு ப்ரொஃபஷனல் ஃபோட்டாகிராஃபர் ரேஞ்சிக்கு இருக்கு புகைப்படங்கள்.

said...

தஞ்சையிலருந்து மதுரைக்கு போற ரூட்ல (புதுக்கோட்டை தாண்டின்னு நினைக்கேன். 82ல தஞ்சையிலருந்தப்ப தூத்துக்குடி போற பாதையில பார்த்த ஞாபகம்) ஒருத்தர் மல்லாக்க படுத்துக்கிட்டு வானத்த பாக்கற போஸ்ல ஒரு மலை முகட்டைப் பாத்துருக்கேன். ரொம்ப தத்ரூபமா இருக்கும்.

said...

//மைட்டர் போட்டுருக்கும் பிஷப்பிடம் இருந்து ஆசி வாங்கும் கட்டுரை ஆசிரியை//

அப்பம் எல்லாம் சாப்டீங்களா? :p

//படகை நீர்வீழ்ச்சிக்குச் சமீபமாக் கொண்டு போயிட்டார்//

எந்த சமீபம்?னு கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க டீச்சர். :p

படங்கள் எல்லாம் சூபப்ரோ சூப்பர். பிட்டுக்கு அனுப்பினா நீங்க தான் பஷ்ட்டு வருவீங்க. :))

said...

//இதுலே ஒரு மலைக்கு மட்டும் சூர்யான்னு பெயர் வைச்சா நல்லாவா இருக்கும்?
//

போனா போவுது, அந்த பேரே இருக்கட்டுமே. (ஹிஹி, என் மவன் பெயரும் அதான்) :))

said...

//தஞ்சையிலருந்து மதுரைக்கு போற ரூட்ல //


ஆமா, மதுரை ஒத்தக்கடை தாண்டியதுமே ஆனை மலை கண்ணில் படும்.

இப்ப அந்த குன்று மேலே ஏற தடை செஞ்சு இருக்காங்கனு கேள்வி. நிறைய காதல் ஜோடிங்க லூசுதனமா தொப்பகடீர்னு குதிக்கறாங்களாம். :(

Anonymous said...

ஆங், இப்ப புரிஞ்சுது சரியா, தேங்க்ஸ் டீச்சர்

said...

மதுரை பக்கத்தில ஆனை மலையும் நாக மலையும் உண்டு.
இதேது சிங்க மலைன்னு பார்த்தேன். ஏதோ நம்ம பேரில மலையிருக்கேன்னு பாப்பாவும் என்னோட சேந்து டைப் அடிக்கிறா:)

படம் சூப்பர்னு சொல்லிடரேன்,.
ஆனா அதைவிட இந்த ''இடைச்செருகல்'' கமெண்ட்ஸ் தான்
அசத்தலா இருக்கு துளசி:)
ஆனையை மறந்தீங்களா என்னப்பா ஒரு கூட்டத்தையே விட்டுட்டீங்களே:)
எல்லாம் ப்ரொடெஸ்ட் செய்யுது.

said...

பொள்ளாச்சிக்குப் பக்கத்திலேயும் ஒரு ஆனைமலை இருக்கு.யாரும் போவதாக் காணோம்.படம் எடுத்துப் போடறதையும் காணோம்.

படங்கள் நல்லாயிருக்குதுங்க மேடம். பிட் படப்போட்டிக்கும் அனுப்புங்க.

said...

ஆ..... ஆனையா என ஓடி வந்தேன்.

ஓ.....ஆனை மலையா என தேடிக்கிட்டே வந்தேன்.

//(மெய்மறந்த நிலையில்.....ஆனை மலையை படம் எடுக்கத் தவறிட்டேன்.)//

கடைசில ஏ.....மாந்து போனேன்.

ஆனால் அத்தனை அழகுப் படங்களும் அதை ஈடுசெய்து விட்டன. குறிப்பாக என்று எதைச் சொல்ல எதை விட. பிரமாதம் போங்கள்.

[பின்னூட்டப் பெட்டிதான் திறப்பேனா என அழிச்சாட்டியம் பண்ணிட்டு.]

said...

டீச்சர்! நலமா? :)

படங்கள் கொள்ளை அழகு! இயற்கையின் அழகே அழகு! அதை ரொம்ப நல்லா எடுத்துறிக்கீங்க! :)))

ஆகாய கங்கை, பூந்தேன் மலர் தூவிச்சா!...என்ஜாய் மாடி!

said...

துளசி மலை மேலே ஆனைக்கு நான் கண்ணி வெச்சேன். ஆ..னைக்கு நான் கண்ணி வெச்சேன் - ஆனை விழும் கண்ணியிலே
சிங்கம் மட்டும் விழுந்ததம்மா!!
சொக்க வைக்கும் படங்கள், கண்ணெல்லாம் குளுகுளுன்னு இருந்துது
கவர்ச்சிக் கமெண்ட் கிளுகிளுன்னு இருந்துது.(ஆனா இது தேவையா?)

said...

இந்த பதிவுக்கு சம்பந்தமில்லாத கேள்விதான், ஆனாலும் வேற எங்கே கேட்கிறதுன்னு தெரியாததால இங்கயே கேட்கிறேன். இன்னிக்குதான் உங்க வலைப்பக்கத்துக்கு வரேன், ஆனா இந்த பெயர் ஏற்கனவே எனக்கு ரொம்ப புடிச்ச ஒண்ணு - காரணம் "என்டமூரி வீரேந்திரநாத்" எழுதின "துளசிதளம்" அப்படின்ற நாவல். படிச்சிருக்கிறீங்களா? இதுவரை நான் படிச்சதிலயே one of the best suspense thriller

said...

படங்கள் எல்லாம் சூப்பர் டீச்சர் ;))

said...

படங்களெல்லாம் அருமை துளசிம்மா!

இடையில இடையில் இருக்க உங்க கமெண்ட்லாம் சூப்பர் :))

said...

படங்களும் உங்க விவரணையும் அருமை.

said...

ஆஹா... அற்புதமான இயற்கை காட்சிகள்.நெஞ்சை அள்ளும் படங்கள்.படகை நீர் வீழ்ச்சிக்கு ரொம்ப பக்கமா போனப்ப எப்படி இருந்திச்சி உங்களுக்கு? ரொம்ப சாகசமான அனுபவமா இருந்திருக்கும் இல்லே?? துளசி மேடத்தின் சிறந்த பயண கட்டுரைகள்ல இதுவும் ஒண்ணு.

said...

கொஞ்சம் பொறுங்க. பதில் சொல்ல வாரேன்.
இப்பத்தான் ஆலங்கட்டி மழை பெய்ஞ்சு ஓய்ஞ்சது. நடுக்கமான நடுக்கம். இன்னிக்கு ஸ்நோ வார்னிங்
கொடுத்துருக்காங்க(-:

said...

வாங்க டி பி ஆர்.

இப்ப எதுக்கு அனாவசியமா வயசை இழுக்கறீங்க???

அது ஒரு பக்கமா இருந்துட்டுப் போகட்டும் கழுதை:-))))))

said...

வாங்க அம்பி.

பதிவர்களில் இப்ப பசங்க பெயருக்கு சூர்யாதான் சூப்பர் செலக்ஷன் போல இருக்கே.

இன்னொரு மூத்த பதிவர் மகனும் சூர்யா தான்:-)))) அவருக்கு இப்ப 5 வயசுன்னு நினைக்கிறேன்.

பிஷப் அப்பம் கொடுக்கலை(-:

(என்னைப் பார்த்து)சிலையா நின்னுட்டார்.

இது மேடம் துஸாடு. லண்டன் :-))))

said...

வாங்க வல்லி.

இப்ப இருந்தே பாப்பாவுக்கு நம்ம தமிழ்மணம் பழக்கி விட்டுருங்க.

பதிவு எழுதுவது குடும்பப் பழக்கமுன்னு சொல்லிக்கலாம்:-)))

said...

வாங்க ராஜ நடராஜன்.

புதுசா இருக்கிங்க!!! வணக்கம். நலமா?

(முதல் முறைன்னு ஒரு விசேஷக் கவனிப்பு)

பிட்டுக்கு அனுப்பிப் பிரம்படி பட்டுக்கிட்டுத்தான் இருக்கேன்:-))))

அங்கே போட்டியில் கலந்து, கலக்கும்
மக்கள் நிறைய இருக்காங்க.

நானும் இருக்கேன்னுக் காமிச்சுக்கத்தான் ஒரு ஆஜருக்காகப் போறேன்:-)))

said...

வாங்க ராமலக்ஷ்மி.

ரெண்டு நாளா எனக்கும் தண்ணி காமிச்சது நம்ம பெட்டி. விட்டுருவொமா? அதான் தூக்கிட்டேன்:-)

யானைப்பிரேமிகள் எண்ணிக்கை வரவரக்கூடிக்கிட்டே போகுது.

அதுவே ஒரு இனிய மகிழ்ச்சி.

said...

வாங்க புதுவண்டு.

நலம். நலமறிய ஆவல்.

நான் இங்கு சுகமே.....

நீ(ர்) அங்கு சுகமா?

எல்லாம் தண்ணி தெளிச்சுவிட்ட கேஸ்:-)

ஆகாயகங்கையைச் சொன்னேன்.

said...

வாங்க நானானி.

//கவர்ச்சிக் கமெண்ட் //கிளுகிளுன்னு இருந்துது.(ஆனா இது தேவையா?)//


இல்லையா பின்னே?

உண்மையைச் சொன்னா...... இதைவிட சுலபமான சொல் இருந்துச்சுப்பா.

சாதிச்சாயம் பூசிருவாங்கன்னு விட்டுட்டேன்:-))))

said...

வாங்க வெண்பூ.

நானும் அந்தப் புத்தகம் படிச்சதில்லை. அடுத்த முறை இந்தியா வரும்போது வாங்கிரணும்.

பதிவு ஆரம்பிக்க நினைச்சப்ப இந்த தளத்துக்கு என்ன பெயர் ன்னு ப்ளொக்கர் கேட்டப்ப மனசுலே சட்னு வந்துச்சு. இது துளசியின் தளம். துளசிதளமுன்னே இருக்கட்டும் என்றுதான்.

said...

வாங்க கோபி.

எல்லாரும் படங்கள் சூப்பர்ன்னு பாராட்டுனதுக்கு நன்றி. ஒரு சில படங்கள் (ரொம்ப நல்லா இருப்பது??)
பயணத்தில் கிடைச்ச ப்ரொஷர்லே இருந்து எடுத்து ஸ்கேன் செஞ்சேன்.

நாங்க படகில் இருக்கும்போது ஏரியல் ஷாட்லே படகும் அருவியுமா எப்படி எடுக்க முடியும்?

said...

வாங்க கவிநயா.

விவரணைகளுக்கும் பல படங்களுக்கும் மட்டுமே நான் சொந்தம்.

ரெண்டு மூணு எடுத்தது நானில்லை(-:

said...

வாங்க சாமான்யன் சிவா.

கவிநயாவுக்குச் சொன்னதுதான் உங்களுக்கும்.

ரிப்பீட்டேய்............:-)

said...

வாங்க பிரேம்ஜி.

இயற்கைக்கு ஒப்பனை இல்லை பாருங்க அதுதான் எப்பவுமே அழகா இருக்கு.


நீர்வீழ்ச்சியில் நனைஞ்சப்ப தோணிய உணர்வு?

ஹேண்ட்பேக்லே இன்ஹேலர் பத்திரமா இருக்கணுமே என்பதுதான்.

ஆஸ்த்மா அட்டாக் வந்தாத் தொலைஞ்சேன்(-:

said...

//யானைப்பிரேமிகள்//

நல்ல வார்த்தைப் பிரயோகம். சொல்லிப் பார்க்க.. நல்லாருக்கு.

said...

படமெல்லாம் அட்டகாசம்.. நீங்க எடுத்ததுதா??? :)

said...

ராமலக்ஷ்மி,

சொற்கள் சிலசமயம் அப்படியே வந்து விழுது நியூட்டனுக்கு ஆப்பிள் மாதிரின்னு சொன்னா ஃபோர் மச்?

said...

வாங்க இராம்.

படங்களை அனுபவிக்கணும். ரொம்ப ஆராயக்கூடாது:-))))


ரெண்டு மூனு சுட்டது. பாக்கி நம்மது.

said...

//பெயர் வைப்பதில் கில்லாடிகளா இருக்காங்க இல்லே? //

என்னங்க இருக்காங்க இல்லைன்னு இரண்டையும் சொல்றீங்க....சரி சரி டென்ஷன் ஆகாதீங்க..நெக்ஸ்ட் போறேன்

//மைட்டர் போட்டுருக்கும் பிஷப்பிடம் இருந்து ஆசி வாங்கும் கட்டுரை ஆசிரியை:-) //

பரம மண்டலத்தில் இருக்கும் பரமபிதாவே ன்னு ஏதாவது சொல்லுவாங்களா??

//"போங்கடா மனுசப்பயலுவளா...... வேற வேலை இல்லையாக்கும்?" என்றது போல ஒரு லுக் விட்டதுங்க.//

எங்க போனாலும் இவங்க இம்சை தாங்கலைன்னு டென்ஷன் ஆகி இருக்கும்

//'தினந்தினம் ஒரே மாதிரியான சாப்பாட்டைத் திங்கறீங்க இல்லே? அதான் நாக்குச் செத்து இப்படிப் போரடிச்சுக் கிடக்குறீங்க'ன்னு நானும் சொல்லிவச்சேன்.//

:-))))

//பொழுதன்னைக்கும் தண்ணியிலே இருந்து ஒவ்வொண்ணும் மழமழன்னு யம்மா யம்மான்னு மினுங்குதுங்க. //

வயசானாலும் இன்னுக் குறும்பும் குசும்பும் உங்களைவிட்டு போகலைங்க

//தமிழ்ச்சினிமாவில் குத்தாட்டம் ஸீன்லே ஆட்டக்காரி போட்டுக்கும் தாவணி மாதிரி அங்கங்கே பச்சை மாமலை மார்பில் மெல்லிசா நூலருவிகள். //

:-))))

//மேல்தளம் பூராவும் தெப்பக்குளம்.//

"துளசி தளத்துக்கே" சிக்கல்னு சொல்லுங்க

//ஒரு பத்து நிமிஷம் இங்கே ஸ்டாப் போட்டுட்டார் நம்ம "கேப்டன்"//

தீவிரவாதி யாரையாவது பார்த்துட்டாரா :-))))

//அடிக்கும் குளிர் காத்துக்கும் ஈர உடுப்புக்கும் என்னதான் அப்படியொரு ஜோடிப்பொருத்தமோ....... //

சாம்பார் வடை மாதிரி

//மூணு வருசம் முந்தி இப்படி 8 நாள் போய்வந்தார். அப்ப அவருக்கு வயசு 77தான்! //

ரொம்ப இளமை தான்

அசத்துங்க ..

said...

வாங்க கிரி.

பிஷப் வாயடைச்சு நின்னுட்டார்:-)))))

வரிக்கு வரி படிச்சதைப் பாராட்டுகிறேன்.

வகுப்புலே இப்படித்தான் அலர்ட்டா இருக்கணும்.

சபாஷ்:-)

பை த வே........ எனக்கு சாம்பார் வடை பிடிக்காது. ச்சும்மா மொருமொருன்னு தின்னணும்:-)

said...

Very thriller novel ever ever read