Friday, December 24, 2010

Bபுலா ரஹேங்கே Bபுலந்த் தர்வாஸா..........

பகலுக்கு எதாவது சாப்பிடக் கிடைக்குமான்னு பார்த்துட்டு வரலாமுன்னு எதிரே மாலுக்குள் நுழைஞ்சால் இளநீர் விக்கிறார் ஒருத்தர். தொண்டைவேற தகராறு. வலி இருக்கு. பேசாம ஒரு இளநீர் குடிச்சுக்கலாம், போதுமுன்னு நினைச்சேன். மாடியிலே ரெஸ்டாரண்ட் இருக்கு. அங்கே கோபாலுக்கு எதாவது கிடைக்கும்.

முப்பது ரூபாய்ன்னார். முதலில் ஒன்னு வாங்கிப் பார்த்துட்டு நல்லா இருந்தால் இன்னொன்னு வாங்கிக்கலாம். சிங்கையில் வாங்குவது போல இங்கே இந்தியாவில் நம்பி வாங்க முடியலை பலசமயம் கரிப்போ கரிப்பு.
பேப்பர் டம்ப்ளர் எடுத்து சேம்பரில் இருந்து குழாயைத்திறந்து ரொப்பறார். பைப் லைனிலா இளநீர் வருது. ஃப்ரஷா இங்கே இருக்கும் இளநீரை வெட்டித் தான்னதும் கத்தியின்றி ரத்தமின்றி மெஷினில் வச்சு கைப்பிடியை அமுக்குனதும் 'சதக்னு இளநீரில் ஓட்டை. அட! நல்லா இருக்கே!
அதை உடனே டம்ப்ளரில் சரிச்சு ஒருகுறிப்பிட்ட அளவு வந்ததும் நம்மிடம் நீட்டினார். இன்னொரு டம்ப்ளரில் மீதம் இருப்பதை ஊத்துன்னா............. இந்த க்ளாஸ் 250 மில்லி. ஒரு இளநீர்ன்னா 206 மில்லி ( 4 மில்லி கொசுறு)ன்னு சொல்லும் போர்டு பாருங்கன்னுட்டு மீதம் இருக்கு இளநீரை அந்த சேம்பரைத் திறந்து ஸ்டாக் பண்ணிக்கிட்டார்.
பகல் கொள்ளையா இருக்கே! மாடர்னா ஆக ஆக இப்படியெல்லாம் நடக்கும்போல! அரை இளநி முப்பது, அநியாயம்:('

டெக்னாலஜி இஸ் கான் ஃபார் டூ மச்!!!

மாடிக்குப் போனால் எல்லா தளமும் காலியாக் கிடக்கு. ரெஸ்ட்டாரண்டும் மூடி இருக்கு. எஸ்கலேட்டர், லிஃப்ட் எல்லாம் வச்சு அருமையா இருக்கும் மாலில் கடைகளே இல்லை. ஒருவேளை 'மால்' அதிகம் கேக்கறாங்களோ என்னவோ? விடியா மூஞ்சு கதை! கீழ்தளத்துலே ஒரு மெக்டோனால்ட்ஸ்.. அங்கே போய் சிப்ஸும் பர்கரும் வாங்கிக்கிட்டோம். கீழ்தளத்துலேயே கைவினைப்பொருட்கள் (எல்லாம் பளிங்குச்சாமான்கள்) கடை ஒன்னு. ரெண்டு யானை கிடைச்சது.

இன்னும் அரைநாள் பாக்கி.. த டே ஈஸ் ஸோ யங்! ஒரு முப்பத்தியெட்டு கிமீ தூரத்தில் ஃபடே(ஹ்)பூர் ஸிக்ரி இருக்கு. போயிட்டு வந்துறலாமுன்னு கிளம்பினோம். போகும் வழியில் இன்னொரு யானை எதிர்கொண்டு போச்சு. கடைவீதிகளைத் தாண்டும்போது உடுபி ஹொடேல் போர்டு பார்த்து வச்சுக்கிட்டேன். நகர எல்லையைக்கடந்து கோட்டை வாசலுக்குப்போக ஒரு மணி நேரம் ஆச்சு.
நகர எல்லையைக் கடக்கும்போதே ஒரு கூட்டம் வந்து வழி மறிச்சது. நாம்தான் தேறிட்டோமே...... வண்டியை நிறுத்தாம ஓட்டிட்டோம்.

எல்லா வண்டிகளையும் வழி மறிச்சு கார்பார்க்குலே கொண்டுபோய் விட்டுடறாங்க. அங்கே பலத்த வரவேற்பு. 'மேலே மலை ஏறணும். நாங்களே கொண்டுபோய் எல்லாத்தையும் காமிச்சுக் கூட்டி வந்துருவோம்'

"வேணாம். நாங்களே பார்த்துக்கறோம். அதான் பஸ் ஒன்னு மேலே போகுமுன்னு போர்டு இருக்கே. அஞ்சு ரூபாதான் அதுக்கு. அதுலே போறோம்."

"பஸ் நிறைஞ்சால்தான் எடுப்பாங்க. அதிலும் அங்கிருந்து திரும்பிவர பஸ் சிலசமயம் கிடைக்காது. 'மலை'யில் இருந்து நடந்து வரணும்.." விடாமப் பின் தொடர்ந்தார். 800 ரூ சார்ஜ். பேரம் பேசி முன்னூறாக்குனோம். ஒரு செல்ஃபோன் கால். எங்கிருந்தோ ஆட்டோ ஒன்னு வந்து நம்முன்னால் நிக்குது. அதுலே வந்தவருக்கு அசைன்மெண்ட் கொடுத்தார் ஏஜண்ட்.

நாலைஞ்சு நிமிசத்துலே 'மலை' ஏறியாச்சு. அங்கே இன்னும் உசரத்துலே கோட்டை மதிலுடன் நிக்குது ஜமா மசூதி. சரிவுப்பாதையில் மேலே ஏறிப்போறோம். கைடுக்கு கால் சரியில்லை. ஒரு பாதம் வளைஞ்சு இருந்தாலும் விந்திவிந்தி வேகமா நடக்கறார்.

இந்தப்பக்கம் ஃபடே(ஹ்)பூர் அந்தப்பக்கம் ஸிக்ரி. ரெண்டுக்கும் எதிரில் இருக்கும் குன்றின்மேல் இருக்கும் கோட்டையின் தெற்கு வாசலில் நின்னுக்கிட்டு கையை நீட்டிக் காட்டறார் மொஹம்மத். நமக்காக இவரைத்தான் அனுப்பினார் அடிவாரத்துலே இருந்த ஏஜண்ட்.

ஆமாம் பாஸ். இந்த ஆளுக்கு ஒரு ஆள் இருக்கான் பாஸ். அவன் அவனுக்குத் தெரிஞ்ச ஆள்கிட்டே சொல்லி அவனோட ஆள் மூலம் வேலையை முடிச்சுருவான் பாஸ்.

நாம் மசூதிக்கோட்டைக்குள் நுழைஞ்சது கிழக்கு வாசல் வழியாக. இதுதான் அரசகுடும்பம் வரும் வழியாம். (அது ஏன்னு அப்புறம் தெரிஞ்சது) மேற்குப்பக்கம் வெராந்தாக் கட்டிடமும் வெறும் சுவரும் தான். இந்த திசை நோக்கித்தான் கும்பிடுவாங்க. வடக்குப் பக்கம் நீண்ட வெராந்தாக்களுடன் உள்ளே உள்ளே போகும் கூடங்கள் இடதுபுறம். வலதுபுறம் தரை முழுக்க சமாதிகள். சிஷ்டி குடும்பத்தினருக்கு மட்டுமே இங்கே அடக்கம் செய்யும் உரிமை.
ஸலீம் சிஷ்டின்னு ஒரு சூஃபி ஞானி, ஸிக்ரி குன்றுகளின் குகையில் இருந்தார், அக்பர் சக்ரவர்த்தி, விந்திய மலைத்தொடரின் வாலாக இருக்கும் இந்தக் குன்றுகளின் மேல் ஒரு மசூதி அமைக்கத் திட்டம் போட்டு இங்கே வந்துருக்கார். இவர்தான் கட்டிடக்கலையில் ஆர்வம் மிகுந்தவராச்சே.

அக்பருக்கு ஏராளமான மனைவிகள் இருந்தும் புத்திர பாக்கியம் இல்லை. இந்த மகானை வழிபட்டு ஆசிகள் வாங்குனதும் மனைவி ஜோதாபாய்க்கு பிறந்த பிள்ளைதான் ஸலீம் ஜஹாங்கீர். அக்பருடைய பெரிய சாம்ராஜ்யத்துக்கு வாரிசு என்று ஜஹா...ங்கீர்னு பெயர். குருவின் ஆசியோடு பிறந்த பிள்ளை என்றதால் ஸலீமுன்னு குருவின் பெயரையும் சேர்த்து வச்சாராம்.
1570 இல் இந்த மசூதி கட்ட ஆரம்பிச்ச ரெண்டே வருசத்தில் (1572) குருவின் காலமும் முடிஞ்சுபோச்சு. குருவை இங்கே மசூதியிலேயே அடக்கம் செஞ்சு சமாதிக் கட்டிடம் எழுப்பி இருக்கார். இதுவும் கோட்டை மசூதி போலவே சிகப்பு மணல் கற்கள் கட்டிடம்தான். (இப்போ இதை சலவைக் கல் கட்டிடமா மாற்றிட்டாங்க.)
மசூதிக்கு மேற்கே குன்றில் சிலமாளிகைகளும் கட்டி இருக்கார். அதுலே ஒன்னு ஜோதாபாயின் அரண்மனை.

சின்னதும் பெருசுமா தரைப்பகுதியில் இருக்கும் குடும்ப சமாதிகளைக் கடந்து உள்ளே போறோம். ஒரு இடத்தில் படிக்கட்டுகள் கீழே இறங்கிப்போகுது. சுரங்கப்பாதை. இங்கே இருந்து ஆக்ரா கோட்டைக்குள் போய்ச் சேருது. இதன் வழியாத்தான் அனார்கலியை உயிரோடு சமாதி வைக்க ஆக்ராவுக்குக் கொண்டு போனாங்களாம்.

முற்றத்தில் ஒரு மரத்தைச்சுத்தி எழுப்பி இருந்த மேடையில் பூஜைப்பொருட்களை வச்சு விக்கறாங்க. கலர் கலரா மெல்லிய துணியில் சரிகை வச்சுருக்கு. ஸலீம் சிஷ்டி தர்காவுக்குள் வெறுங்கையாப் போகக்கூடாதுன்னு மொகம்மத் ஹிண்ட் கொடுக்கறார். உண்டியலில் காசு போடலாமான்னா...... ரூபாய்களை போடக்கூடாதாம். என்ன வம்பாப் போச்சு...உள்ளே போகலாமா வேணாமான்னு கோபாலுக்கு யோசனை.
மொஹம்மத்

மனுசர்களின் மனங்களைப் படிச்ச மொஹம்மத் சொல்றார்........

"ரொம்ப சக்தி வாய்ந்த தர்கா இது. வேண்டுதல்கள் கட்டாயம் நிறைவேறும். ஒவ்வொருத்தருக்கும் மூணு வேண்டுதல்கள் பலிக்கும். என்ன வேண்டுனோமுன்னு யார்கிட்டேயும் சொல்லக்கூடாது என்பது கண்டிஷன். நீங்க ரெண்டு பேரும் தனித்தனியா மூணு வரங்கள் கேக்கலாம். இந்த நிறங்கள் ஒவ்வொன்னும் ஒரு பிரிவுக்கான தர்ம கைங்கர்யம். விதவைகள் மறு வாழ்வு, ஏழைக் குழந்தைகள் படிப்பு, ஏழைப்பெண்கள் திருமண உதவின்னு வச்சுருக்காங்க."

ஏழைப்பெண்கள் திருமண உதவிக்கு இருக்கட்டுமுன்னு சிகப்புத் துணி வாங்கினோம். கூடவே ரெண்டு சிகப்பு மஞ்சள் நூல்கள் இருக்கு அதுலே. வேண்டுதலை மனசில் சொல்லிட்டு அந்தக் கயிறை அங்கே இருக்கும் சன்னலில் கட்டி விடணுமாம்.

இங்கே இது ஒரு ரிங்போல் செயல்படுதுபோல. வியாபாரிகளுக்கும் கைடுகளுக்கும் தர்காவில் பூஜை செய்பவர்களுக்கும் ஒரு உள்த்தொடர்பு இருக்கு. நாம் எடுத்த துணிக்கு 1100 ரூபாய் கட்டணம். 'கடைசி நிமிட்லே கவுத்துட்டியே பாவி'ன்னு, என்னை ஒரு பார்வை பார்த்தார் கோபால். 'போயிட்டுப்போகுது விடுங்க. ஏழைப்பெண்கள் கல்யாணம் சம்பந்தப்பட்டது. கணக்குப் பார்க்காதீங்க'ன்னு பார்வையால் பதில் சொன்னேன். இந்த முப்பத்தி ஆறரை ஆண்டு வாழ்க்கையில் பார்வைகளுக்குப் பொருள் துல்லியமாப் புரிஞ்சுருது.
தர்காவுக்குள் நுழைஞ்சோம். தலையை மூடிக்கணும். நமக்குத்தான் துப்பட்டா இருக்கே. ஆண்களுக்கு அங்கேயே ஒரு தொப்பி கொடுக்கறாங்க.
சரிகைத் துணியை விரிச்சு சமாதி மேல் போர்த்தணும். பூஜை செய்யும் நபர் உதவி செய்யறார். கண்மூடிப் பிரார்த்திச்சுக் கயிறுகளை ஜன்னலில் கட்டுனோம். சமாதி மேல் பலவித நிறத் துணிகள் நிறைஞ்சுருக்கு. சலவைக்கல்லில் நவரத்தினக் கற்கள் பதிச்சுருக்காங்க. முத்துகளால் அலங்கரிக்கப்பட்ட துணியால் ஆன விதானம்.

வெளியே வலம் வரும் வெராந்தா சுத்திவர பளிங்குக்கல் அலங்காரச்சுவர்கள் லேஸ் டிஸைனில் இருக்கு. நுண்ணீய வேலைப்பாடு. வெளியே இருந்து பார்த்தால் ஒன்னும் தெரியாது. உள்ளே இருந்து வெளிப்புறம் பளிச்ன்னு தெரியுது. ஒரு பக்கச்சுவரில் சின்னதா ஒரு மூணடி உசரக்கதவு. அது அந்தக் காலத்தில் பெண்கள் தரிசனத்துக்கு வரும் வழி.. ராஜபுதனப் பெண்கள் எப்பவும் நிமிர்ந்த நடை கொண்டவர்களாம். தலைவணங்காதவர்களுக்கு இத்தனை சின்னதா ஒரு வாசல். எப்படியும் குனிஞ்சுதானே உள்ளே வரமுடியும். ஜோதாபாய்க்காக கட்டுன வாசல்!!!!
கட்டளையாப் போடாமல் எப்படி நாசுக்கா இருந்துருக்கார் அக்பர்ன்னு பாருங்களேன்! தர்கா முகப்பில் சின்ன மண்டபத்துலே இருக்கும் அலங்காரத் தூண்கள் மழைநீர் சேகரிச்சுக் கிணற்றுக்குள்ளே அனுப்பும் விதமா செயல்படுது.
பிரமாண்டமான முற்றத்தில் தரையோடு தரையாக் கிணறு ஒன்னு சின்ன வாயோடு. நல்லவேளை கம்பிகள் போட்டு வச்சுருக்காங்க. இதுலே இருந்து தண்ணீர் கோரி பானைகளில் வச்சு பார்வையாளர்கள் குடிக்க ஒரு ஏற்பாடு. தீர்த்தம்!

தரிசனம் முடிச்சு அடுத்த பகுதியில் இருக்கும் கூடங்களுக்குள் போனால். அக்பர் ஸ்தாபிச்ச புது மதமான தீன் இலாஹிக்கான ஹால். இந்து கிறிஸ்துவம் இஸ்லாமிய டிசைன்கள் மூணும் இணைஞ்சுருக்கு. கிறிஸ்துவ தேவாலயங்கள்போல் கிண்ணக்கூரை(டோம்) இஸ்லாமியக் கட்டிடக்கலையான வளைஞ்சும் நெளிஞ்சும் இருக்கும் சுவர் டிஸைன், ரெண்டு சுவர்கள் சேரும் இடத்தில் இந்துக்கோவில் கோபுர டிஸைன்.
என்ன ஒன்னு, கோபுரம்தான் தலைகீழா இருக்கு:(

இன்னும் சில கூடங்களின் சுவர்களில் வெவ்வேற ஊர்களில் இருந்து கொண்டுவரப்பட்டப் பல நிறங்களில் உள்ள பளிங்குக்கற்களால் பூவேலைகள் அமைச்சுருக்காங்க. இன்லே ஒர்க். அவையெல்லாம் பழுதுபட்டால் மீண்டும் புதுப்பிக்கும் வேலை செய்ய ஒரு ஆயிரத்து ஐநூறு குடும்பங்கள் இந்த படே(ஹ்)பூர் ஸிக்ரியில் இப்போதும் வசிக்கிறாங்களாம்.


பதினைஞ்சு வருசம் கஷ்டப்பட்டுக் கட்டுன இந்தக் கோட்டையையும் சுற்றுப்புற அரண்மனைகளையும், எண்ணிப் பதினாலு வருசங்கள் மட்டுமே தலைநகராக வச்சுருந்தவுங்க தண்ணீர் கஷ்டத்தால் இந்த இடத்தைவிட்டு மறுபடி ஆக்ராவுக்கே போயிட்டாங்க. யமுனை இருக்கே!.
இப்போ நாம் நிற்கும் இடம் புலந்த் தர்வாஸா. 'புலந்த்' ன்னால் உசரம் ரொம்ப உசரமுன்னு பெர்ஸிய மொழி சொல்லுது. 175 அடி! மசூதி கட்டி முடிச்ச அஞ்சாவது வருசம் டெக்கான் போரில் ஜெயித்த அக்பர், அந்த வெற்றியைக் கொண்டாடும் விதமா இந்த வாசலைக் கட்டுனார்.
குன்றின்மேல் இந்த வாசல் 54 மீட்டர் உயரம். கீழே தரையில் இருந்து குன்றுக்குவர நீளமான படிகள் 42. கொஞ்சம் உயரமான படிகள். ஏறி வர்றது மூட்டுவலி கேஸ்களால் முடியாது. வலியில்லா மக்களுக்குமே கஷ்டம்தான். ஆனா பலர் இந்த வழியா வர்றாங்க!!!!இந்தக் கணக்கில் உலகிலேயே உயரமான வாசல் இது.

இந்த முப்பது மீட்டர் அகல வாசலுக்கு பிரமாண்டமான மரக்கதவுகள் ரெண்டு. கதவுகளிலும், குதிரை லாடங்களை ஏராளமா அடிச்சு வச்சுருக்காங்க. அதிர்ஷ்டம்!!

இந்த புலந்த் தர்வாஸா (வாசக்) கட்டிடத்துலே மார்பிள் எழுத்துக்களால் குரானின் சில பகுதிகள் பொறிக்கப்பட்டிருக்கு. கூடவே இயேசு கிறிஸ்தின் உபதேசங்கள் சிலதும்! அக்பருடைய பரந்த மனப்பான்மையையும், மத நல்லிணக்கத்தைக் காட்டும் வகையிலும் அமைஞ்சுருக்கு. பகவத் கீதையில் இருந்து ஒரு வரியும் சேர்த்துருந்தா நோக்கம் முழுமையா நிறைவேறி இருக்கும்.

பலவிதப் பழங்களை அடுக்கி வச்சு ஃப்ரூட் ஸாலட் செஞ்சு விக்கறாங்க சிலர். ஃபடே(ஹ்)பூர் ஸிக்ரி படங்கள், புத்தகங்கள் விற்கும் சிறுவர்கள் பயணிகளைப் பிச்சுப்பிடுங்கறாங்க. ஆரம்ப விலையில் இருந்து சட்னு அதலபாதாலத்துக்குப் போகுது. நாம்தான் ஏற்கெனவே மதுராவில் வாங்கிட்டோமே, ஹோம் ஒர்க் செய்ய.
ஜோதா அரண்மனை

இந்த இடத்தில் இருந்து பார்க்கும்போது கொஞ்ச தூரத்தில் ஜோதாபாய் மாளிகை தெரியுது. ஆனால் அங்கே சிஷ்டியின் வம்சத்தினர் இப்போ வசிப்பதால் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லையாம்.
மசூதியின் உள்புற வெராந்தாவில் அழகழகான கைவினைப்பொருட்கள் (எல்லாம் ஸோப் ஸ்டோன், மார்பிள் செதுக்கல்கள்) கிடைக்குது. மின்சார விளக்கு, மெழுகுவத்தி இப்படி உள்ளே வச்சோமுன்னால் அழகா ஜொலிக்குது. எனக்கும் ஒரு யானை ஆப்ட்டது. (நவம்பர் மாச பிட்டுக்கு அனுப்பினேன்) பேரம் பேசிக்கணும். முதலில் சொல்லும் விலை மக்கள் மனசறிஞ்சு ரெண்டு மடங்கு!

ஆட்டோவில் ஏத்திக் கீழே கொண்டுவந்து விட்டுட்டு காசை வாங்கிக்கிட்டார் மொஹம்மத். ஒன்னரை மணி நேரம் ஆகி இருக்கு.
ஆக்ராவுக்குத் திரும்பிக்கிட்டு இருக்கோம். கடைவீதிக்குள் பாதிவழியில் இருக்கும்போது ட்ராஃபிக் போலீஸ் நம்ம வண்டியை ஓரங்கட்டுச்சு. " வண்டி யாருது? கிஸ்கா காடி ஹை?" எங்களுதுதான். பேப்பர்ஸ் எல்லாம் இருக்கா? இருக்கு. அப்ப நீ ஒன்வே யிலே வந்துட்டே. இல்லையே எங்களுக்கு முன்னால் வண்டி போகுது. பின்னாலும் வண்டிகள் வருது.

பேப்பர்ஸ் காமின்னதும் எடுத்துக் காமிச்ச ப்ரதீப்பின் கையில் இருந்து 'லபக்'னு பிடுங்கிட்டு போறார் போலீஸ். ஐயோ ஐயோன்னு ப்ரதீப் ஓட, எனக்கு எரிச்சலா இருக்கு. அஞ்சு நிமிசத்துக்கும் மேல் ஆச்சு இன்னும் ஆளைக் காணோமேன்னு கோபால் போய் பார்த்தா ரெண்டாயிரம் கொடுன்னு பேரம் ஆரம்பிச்சு ரெண்டு நூறில் படிஞ்சது. அடாவடி போலீஸ்.

ட்ரைவர் மட்டும் போயிருந்தால் அம்பது, நூறோடு முடிஞ்சுக்கும். நான் போனதால் 'லஞ்ச' விலை ஏத்திட்டான்றார் கோபால். மதிப்பு கூடிப்போச்சோ;-)))))

இதுக்குத்தான் சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் சொன்னதுபோல், இது இதுக்கு இவ்வளவுன்னு அஃபீஸியலா பட்டியல் ஒன்னு போடவேணுங்கறது.

காலையில் அம்பது ப்ரேக் ஃபாஸ்ட்டுக்கு. டின்னருக்கு அம்பது எப்படிப்போதும்? அதான்........

ஆக்ச்சுவலா அது ஒன்வே இல்லை. வெளியூர் வண்டின்னதும் அதிகாரம் காமிக்கிறாங்க. கேஸ் புக் பண்ணிக்கோன்னா..... யாராலே இதுக்காக அங்கே இன்னொருமுறை போ ஆஜராகமுடியும்? தொலையட்டும் சனியன்னு லஞ்சம் கொடுக்க வேண்டித்தான் இருக்கு. மக்களுடைய இயலாமையைக் காசாக்கத் தெரிஞ்சுக்கிட்டாங்க.

இந்தியா முழுக்க வண்டி ரெஜிஸ்ட்ரேஷனுக்கு நம்பர் மட்டும் கொடுக்கலாம். முன்னாலே எந்த ஸ்டேட்ன்னு ரெண்டு எழுத்து போடுவதால் தானே இந்தத் தொல்லை?

அப்படி ஒரு விதி கொண்டுவந்தால் போலீஸே போராட்டம் நடத்துமோ என்னவோ? ஒரு ரெண்டு மணிநேர உண்ணாவிரதம்......

மறுநாள் கொஞ்சம் சீக்கிரமாக் கிளம்பி நேரே வீட்டுக்கே போயிடலாம். பத்துமணி நேர ட்ரைவிங். முடியுமான்னு ப்ரதீப்பிடம் கேட்டால் பிரச்சனை இல்லை. நான் பதினெட்டு மணிநேரம் ட்ரைவ் செஞ்சு ஆமடாவாத் போயிருக்கேன்னார்.

மறுநாள் காலையில் தொண்டை பயங்கரவலி. பல்தேய்க்கும்போது தொண்டையில் இருந்து ரத்தமா வருது. கோபாலுக்குச் சொல்லலை. பயந்துருவார் மனுசர். கையில் இருக்கும் மாத்திரையைப் போட்டுக்கிட்டு எதிரில் இருந்த மெக்டோனால்ட்ஸ்லே காஃபிக்குப் போனா 'அதிகாலை'ப் பத்துமணிக்குத்தான் திறப்பாங்களாம்.

கிளம்பிடலாம். போகும் வழியில் நேத்து பார்த்துவச்ச உடுபி இருக்கே! எட்டுமணிக்குத்தான் டிஃபன் கிடைக்கும். கறாராச் சொன்னார் பணியில் இருந்தவர். இப்போ ஏழே முக்கால். காஃபி போதும். அது வந்து குடிக்க ஆரம்பிக்கும்போது மணி எட்டு. இட்லி வடை கிடைச்சது.

மதுரா வழியிலேயே வந்து தில்லிக்குள் நுழையாம ரிங் ரோடில் போய் ஊரெல்லையைத் தாண்டுனோம். மயூர்விஹார் போகும் சாலை, நிகம்போத் காட் எல்லாம் கண்ணில் பட்டபோது சம்பந்தப்பட்டப் பதிவர்கள் நினைவுக்கு வந்தாங்க.

பகல் உணவுக்கு ஹைவேயில் சோனிப்பெட் ஹவேலிக்குள் நுழைஞ்சுட்டு, வீடுவந்து சேர்ந்தப்ப மணி மாலை ஆறரை. சரியாப் பதினொன்னரை மணி ஆகி இருக்கு. வெரி லாங் ட்ரைவ்:(

மதுரா ஆக்ரா பயணம் முடிஞ்சது.

கிறிஸ்மஸ் விடுமுறைக்காக உங்களுக்கு லீவு விட்டாச்சு! புதுவருசத்தில் சந்திப்போம்.

நண்பர்கள் அனைவருக்கும் விழாக்கால வாழ்த்து(க்)கள்.
என்றும் அன்புடன்,
டீச்சர்.

Thursday, December 23, 2010

உலக அதிசயத்தில் ஒன்னு!

முதல்முறை தாஜைப் பார்த்தப்ப இருந்த பரவசம் இப்போ சுத்தமா இல்லை. போதாக்குறைக்கு பனிமூட்டத்தில் கலங்கலாத் தெரியுது. கூட்டமான கூட்டம். நாங்களும் ஊர்ந்து போய் செருப்பை விட்டுட்டு படிகளில் ஏறினோம்.
முகப்புக் கட்டிடம் மட்டும் அச்சுஅசலா அக்பர்சமாதி முகப்பு போலவே இருக்கு. எல்லாம் ஒரு ஸ்டேண்டர்ட் டிஸைனா இருக்கும்போல! முகப்பையொட்டி ரெண்டுபக்கமும் நீளமான வெராந்தாக்களுடன் எக்கச்சக்க அறைகள்.
தாஜ், அன்றும் இன்றும் என்று ஒரு பதிவே போடலாம் போல. வித்தியாசங்கள் நிறைய இருக்கு. எதுன்னு முதலில் சட்னு புரிபடலை.
முகப்பில் லாக்கர்ஸ் வச்சு நம்ம கேமெரா, கைப்பைகள் எல்லாம் வாங்கி வச்சுக்குவாங்க அன்று. இன்றோ..... அதெல்லாம் ஒன்னும் இல்லை.
தாஜ் முன்னைவிட இன்னும் சாம்பல் பூத்த நிறத்தில் நிக்குது. படியேறும் இடத்தில்....... இப்போ படிகளுக்கு மரச்சட்டம் அடிச்சு தரைவிரிப்பு போட்டு வச்சுருக்காங்க. முந்தி அங்கே வரிசையாய் உக்கார்ந்திருந்த ஆட்கள் துணியால் ஆன காலணியைப் போட்டுவிட, சூடு தாங்காமல் ஓடுனோம். கோடையின் உச்சம் அப்போ. இப்போ குளிர்காலம் துணிக்காலணி ஒன்னும் இல்லை.
முகப்பில் இருந்து தாஜ்
இது தாஜ்மஹல் மேடையில் இருந்து முகப்பு நோக்கி எடுத்த படம்.

மேடையேறினதும் நேரா சமாதிக்குப் போகமுடியாது. இப்பெல்லாம். வரிசை இடமாப் போகுது. எங்கே பார்த்தாலும் ஏகே 47 தாங்கிய ராணுவம். இடம்சுத்தி வந்து சமாதி ஹாலில் நுழைஞ்சோம். ஒரே இருட்டு. கூட்டம் நெரியுது. கொஞ்சம்நஞ்சம் வாசல்வழியா வரும் வெளிச்சம்கூட கூட்டம் மறைச்சுருது. பளிங்கு அலங்காரத் தடுப்பினுள்ளே பளிங்கு மேடையில் ரெண்டு சமாதிகள்.
வரிசையில் நின்னு உள்ளே
தடுப்புக்குள் சமாதிகள்

அன்று: மேலே நாம் பார்ப்பது போலி சமாதி. கீழே நிலவறை போல படிகள் இறங்குது. அதன் வழியா கைடு கூட்டிக்கிட்டுப் போனார். மேலே இருப்பதுபோலவே சமாதிகள். ஆனால் அழகான இன்லே வேலைப்பாடுகள். நவரத்தினக் கற்கள் பதிச்ச பூக்கள் டிஸைனுடன் நிலவறையில் ஜொலிக்குது. படிகள் கடந்து நிலவறைக்குப்போகும் வழி உயரம் அதிகம் இல்லாதது. அதனால் தலையைக் குனிஞ்சு உள்ளே போகணும். ஆட்டோமேடிக்கா வணக்கம் சொல்லிருவோம். சமாதியில் மின்சார விளக்கெல்லாம் கிடையாது. ஒரு ஹரிகேன் விளக்கு சமாதிமேல் உக்காந்துருக்கும் லேசான மங்கிய வெளிச்சம் காமிச்சுக்கிட்டு.

சுட்டது. கூகுளுக்கு நன்றி.

இன்று: மேலே பார்ப்பதோடு சரி. வேறெங்கும் போக வழியே இல்லை..

அன்று பார்க்கும்போது இருந்த மனநிலை..... உலக அதிசயத்தில் நிக்கறோம்.

இன்று......தாஜைபற்றிய ஏராள சேதிகள் அதுவும் இது ஒரு இந்துக் கோவிலாக இருந்தது என்று வலையில் படிச்சது முதல், உண்மையா இருக்குமோன்னு கண்ணை முழிச்சுப் பார்த்துக்கிட்டு இருக்கேன் எங்கியாவது துப்பு கிட்டுமுன்னு. (அப்படியே அந்த சேதி உண்மைன்னாலும் என் ஊனக்கண்ணுக்குத் தெரியும்படியாவா வச்சுருப்பாங்க? நிலவறையை மூடிவச்சது ஒருவேளை இதுக்குத்தானோ? குரங்கு மனம் என்னெல்லாம் ஆட்டம்போடுது பாருங்க. ச்சும்மாக்கிட மனமே)
ரெண்டு பக்கங்களிலும் மசூதிகள் இருக்கு.



தாஜுக்கு ரெண்டு பக்கமும் சிகப்பு மணல் கற்கள் கட்டிடம் பக்கத்துக்கொன்னா நிக்குது. வெங்காயக்கூரை பழுதுபார்க்கும் பணி நடக்குது. தாஜுக்குப் பின்புறம் யமுனையின் ஓட்டம். மக்களின் கூட்டம்.
பின்பக்கம் யமுனா

தாஜுக்கு முன் இருக்கும் நீரோடையில் தாஜின் பிரதிபலிப்பு தெரியலை. கலங்கல். தாஜுக்கு நேரெதிரா இருக்கும் பளிங்கு மேடையில் நாலு புறமும் பளிங்கு பெஞ்ச் ஒன்னு போட்டுருக்கும்.அதுதான் ஃபோட்டோ பாய்ண்ட். பின்புலத்தில் தாஜ் அட்டகாசமா ஜொலிக்கும். (அன்று, படங்கள் எடுத்தோம்) இன்று...ஒரே ஈ மொய்ச்சதுபோல் மக்கள் கூட்டம். குளிர் காலம் என்பதால் கூட்டமே இல்லைன்னு ஒருத்தர் சொல்லிக்கிட்டு இருந்தார்.

வரிசையில் நமக்கு முன்னால் ஒரு சிங்களக்குடும்பம். ஏழெட்டுபேர் சிங்களத்தில் பேசிக்கிட்டு இருந்தாங்க.

தோட்டம் பராமரிப்பு எல்லாம் சுத்தமாவே இருக்கு.
என்ன தவம் செய்தனை.............. எல்லாநேரமும் அதிசயப் பார்வை!!!
சட்னு உக்காருங்க. மக்கள்ஸ் குறுக்கே வருமுன் க்ளிக்கணும்.


தாஜைப் பற்றி எல்லோருக்கும் தெரிஞ்சுருக்கும் என்றாலும் ஒரு சிறு குறிப்பு வரைய வேணாமா?

கட்டியவர் ஷாஜஹான். அக்பரின் பேரன். ஜஹாங்கீரின் மகன். 1592 இல் பிறந்து தன் முப்பத்தி அஞ்சாவது வயசில் 1627 பட்டத்துக்கு வந்தார். முப்பது வருசம், 1658 வரை அரசாண்டார். இதுக்கிடையில் தன் இளவயதில்(15 வயசுதான்) பெர்ஸியா நாட்டுப் பிரபுவின் 14 வயசுப் பேத்தி அஞ்சுமன் பானு பேகத்தைக் கண்டதும் காதல் ஏற்பட்டுக் கல்யாணம் கட்டிகிட்டார். அஃபீஸியலா இவருக்கு(ம்) மூணு மனைவிகள். அதுலே ஸ்பெஷல் இவுங்க. இவுங்க அறிவையையும் திறமையையும் பாராட்டும்விதமா இவுங்களுக்கு மும்தாஜ் மஹல்ன்னு பெயரைச்சூட்டி இருக்கார். (அரண்மனை ரத்தினம்!)

ராஜா போகுமிடங்களில் எல்லாம் ராணியைக் கையோடு கூட்டிக்கிட்டுப் போவாராம். பிரிஞ்சு ஒரு கணமும் இருக்கமுடியாத அளவு அன்பு. ஒரு போர் விஷயமா புர்ஹன்பூர் என்ற இடத்துலே கேம்ப் போட்டுருந்த சமயம் சோகம் நடந்துபோச்சு.

மும்தாஜுக்கு 38 வது வயசில் மரணம். காரணம்? இடைவிடாத பிள்ளைப்பேறு. கல்யாணம் ஆன 24 வருசத்துலே 14 பிரசவம். இந்தக் கடைசிப் பிரசவத்துலே போய்ச் சேர்ந்துட்டாங்க. அதே ஊரில் ஒரு தோட்டத்துலே சவ அடக்கம் நடந்துச்சு. ராஜா ஒரு வருசம் தனிமையில் துக்கம் அனுஷ்டிச்சார். மனைவி இறந்த அதிர்ச்சியால் தலைமுடியெல்லாம் 'பொளேர்'னு வெளுத்துப் போச்சாம் அப்போ. துக்க காலத்துலே யோசிச்சுத் திட்டம் போட்டதுதான் தாஜ்மஹல் கட்டிடம். ஆறு மாசத்துக்கு முன்னே இறந்த மனைவியின் சமாதியைத் தோண்டி சவத்தை ஒரு தங்கப்பெட்டியில் வச்சு ஆக்ராவுக்குக் கொண்டுவந்து யமுனை நதிக்கரையில் ஒரு சின்னக்கட்டிடத்தில் தாற்காலிகமாப் புதைச்சு வச்சுட்டு தாஜ்மஹலைக் கட்டத் தொடங்கியாச்சு.

இருபதாயிரம் பேர் வேலை செஞ்சும்கூட 22 வருசமாச்சுக் கட்டி முடிக்க
1653லே கட்டிடம், வெளிப்புறத்தோட்டம், தோரணவாசல் இப்படி முழுசும் பூர்த்தியாச்சு. முக்கியமான சமாதிக் கட்டிடம் 1648 லேயே முடிச்சுட்டாங்க. அதுக்குள்ளே தங்கப்பெட்டியைப் புதைச்சு சமாதி கட்டுன கையோடு தனக்கும் மனைவியின் அருகிலேயே இன்னொரு சமாதி கட்டி வச்சுக்கிட்டார். எப்பவும் மனைவியின் அருகிலேயே இருக்கணும்.

ஷாஜஹானுக்குத் தன் தாத்தா அக்பரைப் போலவே கட்டிடக்கலையில் ஆர்வம் அதிகம். தில்லியில் இருக்கும் செங்கோட்டை, முத்து மசூதி, ஜமா மசூதி, செங்கோட்டைக்குள்ளே இருக்கும் மாளிகைகள் எல்லாம் இவர் கைவண்ணம்தான். அந்தப் பகுதிக்கே ஷாஜஹானாபாத் என்ற பெயர்தான். அதுதான் இப்போ பழைய தில்லின்னு ஆகி இருக்கு. ப்ரிட்டிஷ்காரன் கடத்திக்கிட்டுப்போன தங்கமயிலாசனமும் ஷாஜஹானின் ஐடியாக்களில் ஒன்னு.
1658 வது வருசம் அவருக்கு உடம்பு சரியில்லாமல் போனதும் அவருடைய மகன் ஔரங்கஸேப், தகப்பனை ஆக்ரா கோட்டையில் சிறை வச்சுட்டு, தானே முடிசூட்டிக்கிட்டார். சிறையில் எட்டு வருசம். அவரை அடைச்சு வச்ச அறையில் இருந்து பார்த்தால் தூரத்துலே தாஜ்மஹல் தெரியுது.(கோபால் எடுத்த வீடியோவில் பார்த்தேன்)
1666 வது வருசம் ஷாஜஹான் (74 வயசு) இறந்துட்டார். அவருடைய மூத்த மகள் தகப்பனின் சவ ஊர்வலத்தை பிரமாண்டமா நடத்துமுன்னு திட்டம் போட்டாங்க. ஆனால் அக்காவின் திட்டத்துக்கு வேட்டு வச்சார் தம்பி ஔரங்கஸேப். இஸ்லாமியக் கலாச்சாரத்தில் ஆடம்பரத்துக்கு இடமில்லைன்னு சடலத்தைக் குளிப்பாட்டி, சந்தனப்பெட்டியில் வச்சு ஒரு படகில் யமுனை நதியைக் கடந்து ஏற்கெனவே நிர்மாணிச்சு இருந்த சமாதியில் புதைச்சுட்டாங்க.

எனக்கு யமுனையின் மறுகரைக்குப்போய் அங்கிருந்து தாஜ் பார்க்க ஆசை. அதுக்காகவே கோபால் ஒரு ஆக்ரா வரைபடம் ஒன்னு வாங்கி வச்சுருந்தார். ரொம்ப சுத்து வழியில் போகணும் என்பதால் அப்புறம் பார்த்துக்கலாம். இப்ப நேரா ஹொட்டேலுக்குப் போய் செக்கின் செஞ்சுக்கலாமுன்னு கிளம்பிட்டோம். கார் பார்க் திரும்பிவர இந்த முறை குதிரை வண்டி.
ஹொட்டேலைத் தேடிக்கிட்டுப்போனால்...சாலையில் யானையார் நமக்கு முன்னே போறார். ஹொட்டேலைக் கண்டுபிடிச்சுட்டு செக்கின் செஞ்சுட்டு அதுக்கு எதிர்வரிசையில் இருக்கும் மாலுக்குள் உணவகம் இருக்கான்னு தேடணும். சாலைக்கு வந்தால் நம்ம யானையார் நின்னுக்கிட்டு இருக்கார். கரும்புப்பொதிகளை ஏத்தறாங்க. நீ படம் எடுக்கலையேன்னுதான் உனக்காகக் காத்துருக்கேன்றார்!

தொடரும்...............:-)



Wednesday, December 22, 2010

காவியமா......... நெஞ்சில் ஓவியமா..........இங்கே பாடினால் தப்பாங்க?

நல்ல பனி மூட்டம். சாலை மசமசன்னு இருக்கு. நெடுஞ்சாலை என்றதால் கொஞ்சம் அகலம். வழியில் பார்த்த சில ட்ரக்குகளின் வாசகங்களைப் படிச்சுக்கிட்டே வந்தோம். 'Bபூரி நஜர் வாலே தேரா மூ(ஹ்) காலா'. சில வண்டிகளில் கூடுதல் வசவுக்காக ஒரு செருப்புப் படம்!

ரெண்டு தலைமுறையை இந்திப் படிக்கவிடாமல் புண்ணியம் கட்டிக்கிட்டவங்களைச் சொல்லணும்.எத்தனை ஃபன்களை மிஸ் செய்யறாங்க பாருங்களேன்:-)
மதுரா ரிஃபைனரீஸ் கடக்கும்போது எக்கச்சக்க டேங்கர் லாரிகள் வரிசைகட்டி நின்னு எண்ணெய் வாங்கிக்கிட்டுப் போகுதுங்க. இந்தப் புகையால்தான் தாஜ் கறுப்பாகிக்கிட்டே வருது. பளீரென்ற வெண்மைக்கும் சிகப்பழகுகளுக்கும் தொலைக்காட்சியில் காமிக்கும் ஏராளமான வகைகளில் உள்ள அழகு சோப்புகள் போட்டுக் குளிப்பாட்டக்கூடாதா?


ஆக்ராவுக்கு ஒரு எட்டு கிலோமீட்டர் முன்னாலேயே சிக்கந்த்ரா வந்துருது. என்ன விசேஷம்? எல்லாம் நம்ம அக்பர் சக்ரவர்த்தியின் கல்லறை இருக்கும் இடம்தான். எல்லா மதமும் சம்மதமுன்னு காட்ட எல்லா மதத்துலேயும் பொண்ணு கட்டிக்கிட்டார். அஃபிஸியலா 36. அதுலே ரொம்ப முக்கியமானவங்க மூணுபேர். இஸ்லாமிய, கிறிஸ்துவ, இந்து மதங்களைச் சேர்ந்தவங்க. இவருடைய கல்லறையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்துலே பிரியும் சாலைக்குள்ளே போனால் மிரியம் என்ற மனைவியின் கல்லறை இருக்கு.(நாம் அங்கே போகலை)

நம்ம தசரதனுக்கு ( அதாங்க ராமரின் அப்பா) அறுபதினாயிரம் மனைவிகள்ன்னு மிகைப்படுத்திச் சொல்றதுபோல நம்ம அக்பருக்கு மூவாயிரம் மனைவிகள்ன்னு சொல்றாங்க. என்னதான் சக்கரவர்த்தின்னாலும் கட்டுப்படியாகி இருக்குமா சொல்லுங்க!

அக்பர் சமாதி இருக்குமிடம்தான். சிக்கந்த்ரா தேசிய நெடுஞ்சாலை 2 லேயே இருக்கு. ரொம்ப அழகான வேலைப்பாடுகளுடன் இருக்கும் சிகப்பு மணல்கற்கள் கட்டிடம். எனகென்னமோ தாஜ்மகலைவிட இதுதான் ரொம்பவே அழகுன்னு படுது. ஒரு 16 வருசத்துக்கு முன்னே முதல்முறையா இங்கே வந்தது நினைவுக்கு வந்துச்சு. மாற்றங்கள் ஒன்னும் இல்லாம அப்படிக்கப்படியே இருக்கு.

கட்டிடக்கலையில் ரொம்ப ஆர்வம் காட்டிய அக்பர் தன்னாட்சி காலத்துலே ஏகப்பட்ட கோட்டைகளையும் அரண்மனைகளையும் கட்டி இருக்கார். தன்னுடைய கல்லறைக்கான இடத்தையும் தேர்வு செஞ்சு கட்டிடத்தையும் டிஸைன் செஞ்சு அதைக் கட்டவும் ஆரம்பிச்சார். ஆனா வேலை முடியுமுன்னேயே (வருசம் 1605) அவருக்குப் போய்ச்சேரும்படியா ஆச்சு. அவரது மகன் ஜஹாங்கீர்தான் 1612 வது ஆண்டு இந்தக் கல்லறைக் கட்டிடத்தைப் பூர்த்தி செஞ்சார்.
தோரணவாசல்
முன்வாசல் 75 அடி உசரம். தொல்லியல் துறையின் பாதுகாப்பில் இருக்கு இந்த சமாதி. வெளிநாட்டு சுற்றுலாக் குழுவினர் நடமாடிக்கிட்டு இருந்தாங்க. நாங்களும் போனமுறை தில்லி சுற்றுலா குழுவில்தான் வந்தோம். வசதி என்னன்னா நம்மகூடவே ஒரு கைடும் வருவார். காலையில் கிளம்பி சிக்கந்தரா, ஆக்ரா, ஆக்ரா கோட்டை காமிச்சுட்டு ராத்திரி 9 மணிக்கு தில்லியில் கொண்டு விட்டுருவாங்க.நாங்க போன பயணத்தில் பேருந்து பழுதாகி அத்துவானக்காட்டில் நின்னு ஆள் வந்து சரிசெஞ்சு ராத்திரி 12 மணிக்குப்போய்ச் சேர்ந்தோம்.


பத்து ரூபாய் நுழைவுக் கட்டணம். வீடியோ எடுக்கணுமுன்னா கூடுதல் 25 ரூ. மற்றபடி கேமெராவுக்கு கட்டணம் ஒன்னும் இல்லை. பேருக்கு சில செக்யூரிட்டி. பெண் செக்யூரிட்டி ஒருத்தர் இருக்கார். ரொம்ப வயசானவர், தலையைத் தூக்கக்கூட முடியலை. சுவரில் சாஞ்சு உக்காந்துக்கிட்டு நம்மைப் பார்த்து ஒரு தலை அசைப்பு. அவ்ளோதான்.
சுற்றுச்சுவர்களில் கூட கல்லால் ஆன ஜன்னல்கள் அழகை அள்ளிக்கிட்டுப் போகுது. என்ன ஒரு வேலைப்பாடுன்னு அதிசயிக்கத்தான் முடியுது!
சுத்திவர பெரிய தோட்டத்தின் நடுவே அட்டகாசமான கட்டிடம். நுழைவு வாசலுக்கும் சமாதிக் கட்டிடத்துக்கும் இடையில் தண்ணீர் ஓடைகள். செயற்கை நீரூற்றுகள், கூடுதல் தண்ணீர் வழிஞ்சு ஓடும் அமைப்புகள் இப்படி எல்லாம் பார்த்துப் பார்த்து செஞ்சுருக்காங்க.
சமாதிக் கட்டிடத்தின் நடு வாசலுக்கு ரெண்டு புறமும் அறை அறைகளா இருக்கு. எல்லாத்துக்குள்ளும் ரெண்டு மூணு கல்லறைகள். யார் என்ன என்ற விவரம் ஒன்னும் இல்லை. சின்னதா இருப்பது சின்னப்பிள்ளைகளோடதுன்னு நினைச்சுக்கிட்டேன்.

மெயின் வாசலில் நுழைஞ்சால் உசரமான விதானங்களில் அழகான ஓவியங்கள். காலத்தால் கொஞ்சம் மங்கல். கொஞ்சம் சரிவான ரேம்ப் போல் இருக்கும் சின்ன வழி நம்மை அக்பர் பாதுஷாவின் சமாதிக்குக் கொண்டு போகுது. நல்ல சதுரமான பெரிய ஹால். ரொம்பவே உசரமான மேற்கூரை. நட்ட நடுவில் சதுரமான ஒரு பெரிய பளிங்கு மேடையின் சமாதி. மெல்லிய ஒளியோடு அலங்கார விளக்கு ஒன்னு சமாதிக்கு மேலே தொங்குது. சுவர்களில் சித்திரங்களோ, இல்லை வேலைப்பாடுகளோ இல்லாமல் ரொம்பவே சிம்பிள். காற்றுக்காக உசரத்தில் குட்டியா ஜன்னல்கள். முகலாய சாம்ராஜ்யத்தின் பெருமைக்குக் காரணமாயிருந்த பேரரசரின் சமாதி இவ்வளோ எளியதா இருக்கேன்னு வியப்புதான்.
சமாதி அறைக்கு வழி
அக்பர் சமாதி


ராஜஸ்தான் கட்டிடக்கலையும் முகலாயக் கட்டிடக்கலையும் சேர்ந்த அழகு மனசுலே பதிஞ்சு போகுது. நாலு புறமும் ஒரே மாதிரி சதுரமான வெளிஅமைப்பு. நீண்டு கிடக்கும் கூடங்கள் காவியமா நெஞ்சின் ஓவியமா பாடத்தான் வேணும். பாடினேன். அங்கே தாஜில் பாடமாட்டியான்னார். உண்மையில் முகலாய சாம்ராஜ்ய தீபம் அக்பர்தான். அதான் இங்கேயே (தொண்டை சரி இல்லாத நிலையிலும்) பாடறேன். கூட்டமே இல்லாத காலிக்கூடங்கள் இங்கேதானே இருக்கு!!!!!

நல்ல பராமரிப்புடன் இருக்கும் சுத்தமான புல்வெளியில் மான்கள் எல்லாம் ப்ளாக்பக் வகை.

பக்கத்துலே இருக்கும் பள்ளிக்கூடத்துக்குப் போகும் பிஞ்சுகள்.
சிக்கந்த்ராவின் ஸப்ஜி மண்டி (கொத்தவால் சாவடி) சாலையை ஒட்டியே இருக்கு. முள்ளங்கி மலைகள், கீரைக்குன்றுகள்ன்னு பச்சைப்பசேல்! யமுனையை ஒட்டியே போகும் சாலை, அக்கரைக்குப் போகும் பாலம் எல்லாம் கடந்து ஆக்ரா ஊருக்குள் நுழைஞ்சோம். போக்குவரத்து போலீஸ் நம்ம வண்டியை ஓரங்கட்டச் சொல்லி கைச்செலவுக்கு அம்பது ரூபாய் வாங்கிக்கிட்டார். எல்லா பேப்பர்ஸும் இருக்கா? இருக்கு. இது ரொம்பத் தப்பு.. ஒழுங்கா எல்லாம் வச்சுருந்தால் சட்டப்படிக் குற்றம்!!!!

ஆக்ராக் கோட்டையைச் சுத்திப்போகும் சாலையின் மறு கோடியில் நாம் தங்கவேண்டிய ஹொட்டேல் இருக்கு. போகும் வழியில் தாஜ்மஹல். பார்த்துட்டே போயிடலாமுன்னு கோபால் சொன்னதை நல்லவேளையாக் கேட்டேன். என்னுடைய ஒரிஜனல் ப்ளான் படி அது மறுநாள் வெள்ளிக்கிழமை அதிகாலை வரவேண்டியது.

இந்த முறை(யும்) ஆக்ரா கோட்டைக்குள் போகும் எண்ணம் எனக்கில்லை. போனமுறை நல்ல கோடையில் வந்துட்டு (52 டிகிரி செல்ஸியஸ்) மகள் துவண்டு போனதால் கோட்டை முகப்பில் தோரணவாசல் காவல்காரருடன் பேசிக்கிட்டே இருந்துட்டோம் நானும் மகளும். கோபால்தான் வீடியோ கேமெராவில் கோட்டை முழுசும் படம் புடிச்சுக்கிட்டு வந்தார்.

ஆக்ரா கோட்டை


கார் பார்க்கிங் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் வச்சுருக்காங்க. நினைவுப்பொருட்கள் விற்கும் கடைகள், தாஜ்மஹல்வரை நம்மைக்கொண்டுபோக ஒட்டகவண்டிகள் எல்லாம் எக்கச்சக்கமாக் குவிஞ்சுருக்கு இந்த கார்பார்க்கில். இதெல்லாம் கூட போனமுறை வந்தப்ப இல்லை. சமீபத்தில் வந்ததா இருக்கும். அப்போ நேரா முகப்புக்குப் பக்கத்தில் பஸ் போய் நின்னது.
ஒட்டக வண்டியில் இதுவரை போகலையேன்னு பத்தே ரூபாய்க்குக்கொண்டு விடறேன்னு சொன்ன வண்டியில் ஏறின அடுத்த வினாடி....வண்டி ஓட்டி, குண்டு போட்டார்! 'இங்கே கலைப்பொருட்கள் எம்போரியத்தில் பத்து நிமிசம் பார்த்துட்டுப்போகலாம்'னு.

பாங்காக் மாதிரி இங்கேயுமா....................... 'ருக்கோ ருக்கோ'ன்னு அலறிக்கிட்டே வண்டியில் இருந்து குதிச்சோம். சைக்கிள் ரிக்ஷா ஒன்னு கிடைச்சது. மேற்கு வாசலில் கொண்டு இறக்கிவிட்டார். நுழைவுச்சீட்டு இப்போ 20 ரூபாய். வெள்ளிக்கிழமை சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்பு.. தப்பிச்சோம்.

மக்களை வரிசையில் வைக்க புல்தரையெல்லாம் இரும்புக்கம்பிகள் நட்டு பாழாக்கி வச்சுருக்காங்க:( செக்யூரிட்டி செக் முடிஞ்சு முகப்பைக் கடந்து உள்ளே போனோம்.

தொடரும்............:-)