Monday, January 21, 2013

110 வயசுலே ஒரு பதிவர்!

என்னதான் சொல்லுங்க.....  வெளிநாடுகளில் வசிக்கும் நம்மவர்க்கு இண்டியன்  என்ற சொல்லைப் பார்த்தாலோ இல்லை காதுபடக்கேட்டாலோ உடம்புலே ஒரு  கெத்தும் மகிழ்ச்சியும் வந்துருது என்பது உண்மைதானே?


இங்கே கடைவீதிகளில் வலம்வந்தபோது சில கடைகளில்  'பர்ட் மன்றொ இண்டியன் ' என்று இருந்ததைப் பார்த்ததும் இவர் எப்போடா இந்தியன் ஆனார். ஒரு வேளை நம்ம தாமஸ் மன்றோவின் சொந்தக்காரரோ என்ற நினைப்பு. (மர்லின் மன்றோ நினைப்பு வரலையான்னு  யாரும் கேக்கப்பிடாது) 


கோபாலிடம் யாரு இவருன்னு ச்சும்மா ஒரு பேச்சுக்குக் கேட்கப்போய்.....  'ஏன் இவரைப்பற்றித் தெரியாதா? என்ஃபீல்ட்  ஓட்டுனவர்' என்றார். (கொஞ்சம் விட்டால் காதுலே பூ சுத்திருவாரே)

 அட நம்மூர் என்ஃபீல்ட் வண்டியா?  நம்ம தோஸ்து ஒருத்தர்கூட அங்கெதானே வேலை செஞ்சுக்கிட்டு இருந்தார்.


"நம்ம அறையிலே படங்கள் இருக்,கே பார்க்கலையா?"
 
அட அவரா இவர்? மூணு படங்கள் தொங்குதே, மோட்டர்ஸைக்கிளோடு!

 "இவர்தான்  உலக ரெக்கார்ட்லே இன்னிக்கு வரை. இப்ப ஒரு ஏழெட்டு வருசத்துக்கு முந்தி சினிமாப்படம்கூட வந்துச்சே"

'ஓ' ன்னு தலையாட்டிட்டு,  அடுத்துப்போற இடம் எதுன்னு  பார்த்துக்கிட்டு இருந்தேன்.


நல்லவேளையா இன்வெர்கார்கில்  நகரத்துக்குள்ளேயே  பார்க்கவேண்டிய இடங்கள் எல்லாம்  அடுத்தடுத்து அமைஞ்சு போச்சு ஒன்னுரெண்டைத்தவிர. பார்க்குகளும் இதில் சேர்த்தின்னாலும்  விடுமுறைநாட்களில் திறந்துதானே இருக்கப்போகுது.  அது அப்புறமுன்னு குவீன்ஸ் பார்க்கின் வளாகத்துலேயே  இருக்கும்  அருங்காட்சியகத்துக்குப் போனோம்.

 வாட்டர்டவர் பார்த்தோம் பாருங்க  அதே தெருவில்  ஒரு நிமிஷ ட்ரைவில் இருக்கு. அப்பாடான்னு மழை வேற கொஞ்சம் தயவு  காமிச்சது.

மியூஸியம்  பகுதியில் நுழைஞ்சதும்    இந்தப்பக்கம் ஒரு பெரிய டுவடாரா.  அதுக்கு ஒரு மவொரி வெல்கம் கொடுத்தேன்.  மில்லினியம் ஆண்டு கொண்டாட்டத்தின் நினைவுக்கு  ரோட்டரி  சங்கம் வச்சுக்கொடுத்த சிலை.  12 வருசமாயும் பளிச்:-)  ம்யூஸியத்துக்கு   வெளிப்புறம் கார்பார்க்கிங்  பகுதியில்  பெண் சிலை கம்பீரமா நிக்குது.  கையில் சிலம்பு(மாதிரி )ஒன்னு!!!   அட!கண்ணகி நீதி கேட்டு இம்மாந்தூரம் வந்துட்டாளான்னு  பார்த்தால், இது அறிவு தேவதை   மினர்வா .  பக்கத்துலே  நம்ம இண்டியன் .  இந்த மியூஸியத்தையே பிரமிட் மாதிரி டிஸைன் செஞ்சுருக்காங்க.  ஆர்ட் கேலரியும்  இதோடு இணைஞ்சுருக்கு என்பதால்  நமக்கு ஒரு கல்லில் ரெண்டு மாம்பழம்.

இந்த டுவடாரா, முதலை, பல்லி, நம்மூர் ஓணான் இப்படி இருக்கும் வகைகளில் இடைப்பட்டதுன்னு சொல்லலாம். அதெல்லாம் பல நாடுகளில் இருந்தாலும் இந்த ஒரு வகை எங்களுக்கே எங்களுக்குன்னு சொல்றாய்ங்க.  அழியப்போகுதே இந்த இனம் என்ற பயத்தோடு கண்ணும் கருத்துமா இவைகளைக் காப்பாற்றி வைக்கணுமுன்னு அரசு சொல்லி  தபால்தலைகூட வெளியிட்டுருக்கு. டுவடாரா என்ற சொல்லே மவோரிகள்  மொழிதான்.  முதுகிலே சிகரங்கள் என்று பொருளாம்!


முழுவளர்ச்சியடைஞ்ச டுவடாரா 80 செ.மீ நீளமும்  1.3 கிலோ எடையும் இருக்கு(மாம்). வெளி முற்றத்துலே இருக்கும்  சைஸுலே அந்தக்கால டுவடாரா இருந்து,  இப்ப  தேய்ஞ்சு போச்சுன்னு  தகவல்.  முதுகுலே  கிரேக்க தொப்பி மாதிரி முள்வரிசை. குத்துமோ?  இருக்காது என்று நம்புவோம். மேல்தாடை அப்படியே கீழ்த்தாடைமேல் கவிழ்ந்து  இருக்கும். சட்னு பார்த்தால் கீழ் உதடுதெரியாது. ப்யூர் நான்வெஜிடேரியன். காடுகளில் புழு பூச்சிகளுகளுக்கு எமன்.
1940 ஆம் ஆண்டு இன்வெர்கார்கில்  ம்யூஸியத்துலே  டுவடாரா வச்சுக்கறோமேன்னு அரசாங்க அனுமதி கேட்டப்ப.....  அதெப்படி உசுரோட இருக்கும் ஒன்னை செத்தகாலேஜுலே வைக்கிறதுன்னு  மறுத்துட்டாங்க.  21 வருசம் விடாமல் நச்சரிச்சுக் கேட்டு 1961 ஆம் ஆண்டு வேற ஒரு ஊரின் உயிர்க்காலேஜுலே  இருந்து ஜியார்ஜ் இங்கே வந்து சேர்ந்தார்.  ரொம்ப ஆடம்பரமான வசதிகள் எல்லாம்  இவருக்குத் தேவையில்லையாம். எளியவர் பாருங்க. அவரு வேணான்னா நாங்க விட்டுருவோமா?

1974 இல் தனியா வெளிப்புறம் ஒரு அமைப்பு ஏற்படுத்தி “Tuatarium” என்ற பெயரும் வச்சாங்க. இதுக்குள்ளே  வெவ்வேற வகைகள் எல்லாம் இங்கே  வந்துருச்சு.  1990 வது ஆண்டு ம்யூஸியத்துக்கு புது உருவம் கிடைச்சது. அதுதான் இந்த பிரமிட் ஷேப். அப்போ நம்ம டுவடாராக்களுக்கும்  வசதி இன்னும் கொஞ்சம் தாராளமா ஏற்படுத்திக்கலாமேன்னு 200 சதுர மீட்டர் இடத்துலே இன்னும் விரிவுபடுத்திக் கட்டினாங்க.  பார்வையாளர்களுக்கு எளிதா இருக்கும்படியும்  உள்வாசிகளுக்கு  தேவையான  வைட்டமின் டி கிடைக்கும்படியாகவும் ப்ளெக்ஸிக்ளாஸ் (Plexiglass UVT acrylic)கூரை அமைப்பு. இதனால்  நம்ம டுவாக்களுக்கு (செல்லப்பெயர்!) நல்ல எலும்பு வளர்ச்சியும் தரமான முட்டையிடும்  வாய்ப்பும் கிடைச்சது. குடும்பங்கள் பல்கிப்பெருகி  சுகமா வாழ்க்கை நடக்குது. iving fossils என்று சொல்லும்படி ரொம்பவே மெதுவான வளர்ச்சிதான். அவசரமே இல்லாத வாழ்க்கை! கொடுத்துவச்சதுகள்!

காட்டு வாழ்க்கையில் இதுகள் இரவு நேரவாசிகள். நகருக்கு வந்ததும் இதுகளுக்குக்கூட வாழ்க்கைமுறை மாறிப்போச்சு பாருங்க.


இங்கிருக்கும்  ஹென்றி ஒரு பதிவர் என்பது கூடுதல் தகவல். இவருக்கு வயசு வெறும் 110தான். முதியோர் இல்லம் போரடிக்குதுன்னு, போன ரெண்டாம் வருசம்தான் பதிவு எழுத ஆரம்பிச்சார். 2011 மார்ச் முதல் வருசக் கடைசிவரை 24 பதிவு.  2012 முழுசும் ஒன்னுமே எழுதலை. புள்ளி பயங்கர பிஸி. புள்ளெகுட்டிகளைப் படிக்கவைப்பதில்  கவனமோ என்னவோ!  ஜூலியட், லூஸி, மைல்ட்ரெட்  என்று மூணு மனைவிகள்.  இவருக்கு 8 ஃபாலோயர்ஸ் கூட இருக்காங்கப்பா!!!

இவர்கள் இனத்துலேயே மூத்த & ஒரே ஒரு பதிவர் இவர்தான் போல. இவருடைய முதல் இடுகை இங்கே!  மேலே படத்தில்  மிஸ்டர் ஹென்றி.


முதல் ஹாலில்  வரவேற்பு, நினைவுப்பொருட்கள்  விற்பனைன்னு  இருக்கு. அடுத்த ஹாலில்  உள்ளூர் கலைஞர்கள்  சிலர் தங்கள் கைவினைப்பொருட்களைக் காட்சிக்கு வச்சுருக்காங்க.  பரவாயில்லாமரொம்ப சுமார் ரகம். அடுத்த ஹாலில் மீண்டும் பர்ட் மன்றோ இண்டியன்! ஆஹா... The Legendary life of Burt Munro .  ஒரு முழு ஹாலே இவருக்காக  ஒதுக்கியிருக்காங்க.


சுவர்களில் இருக்கும் விவரங்களை வாசித்ததில் தெரிஞ்சது இவர் உள்ளூர்க்காரர்.   தச்சர். பொழுதுபோக்கு, பழைய மோட்டர்ஸைக்கிளை  வாங்கி மாற்றியமைச்சு அதில் வேகம் கூட்டுவது. இருபது வருசம் இதே ஜோலியா இருந்துருக்கார். 1000 சி சிக்கும் குறைவான  எஞ்சின்  பவர் உள்ள இண்டியன் பைக்ஸ்.

அந்த இண்டியன், நம்ம இந்தியன் இல்லையாக்கும் கேட்டோ:-)))) Indian Motorcycle Company of America தயாரிப்பு, Indian Scout (motorcycle) வகை. உள்நாட்டுலே ஸ்பீடு ரெக்கார்ட் செஞ்சபிறகு   ஸால்ட் லேக் கரையோரம் உள்ள பாலைவனப்பகுதியில் அதிவேகமாப் போக பலமுறை முயன்று   1962, 1966, 1967 ன்னு  மூன்று முறை தன் வேகத்தை தானே  மீறி ரெக்கார்ட் செஞ்சுட்டார்.  முதல்முறை  அதிவேக ரெக்கார்ட் செஞ்சபோது இவருக்கு வயசு 63!!!!மூன்றாவது முறை  வேகம் காட்டுனது தன் 68 ஆம் வயசில்!!!! 190.07 MPH. இதுதான் இப்போதுவரை உலக ரெக்கார்ட். Land Speed record holder



உனக்கு 47 எனக்கு 68ன்னு, அவருடைய  இண்டியனுக்கு அப்போ 47  வயசு( அய்ய...பழைய வண்டி!)


தன்னுடைய 77 வயசுலே உடம்பு சரியில்லாமப்போய்  ஸ்ட்ரோக் மாதிரி வந்துருச்சு. மனம் உடைஞ்சுபோய் தன்னுடைய மோட்டர்ஸைக்கிள்களை உள்ளுர் டீலருக்கு வித்துட்டார்.  அதையெல்லாம் அரும்பொருளா காட்சிக்கு வச்சுருக்காங்க.


அடுத்த வருசமே தன்னுடைய 78 வது வயசில் சாமிகிட்டே போனதும் இதே இன்வெர்கார்கிலில்தான்.  ஊருக்கே ஒரு ஹீரோ!!!


இங்கே இன்வெர்கார்கிலில்  இவர் புகழ் நிரந்தரமா ஒளிவீசிக்கிட்டு இருக்கு. நிறைய மோட்டர்ஸைக்கிள் கடைகளில் இவருடைய இண்டியன் வண்டிகளைப்போல் செஞ்சு காட்சிக்கு வச்சுருக்காங்க.  பெருமையை போற்றுதும்!


ரொம்ப அஸால்ட்டா  மணிக்கு 200 மைல் ( 320 கிமீ) வேகத்துலேகூட  ஓட்டி இருக்கார். ஸ்பெஷலா   மூணு பட்டை செயின் போட்டுருந்தாராம். ஐ ன் மோட்டர்   ஸைக்கிளுக்கு:-))


The World's Fastest Indian என்ற பெயரில் திரைப்படம் ஒன்னு 2005 ஆம் ஆண்டு வெளிவந்துருக்கு. ஆன்டனி ஹொப்கின்ஸ் நடிச்சது.


ஹெர்பெர்ட் ஜேம்ஸ் மன்றோ என்ற இவர் பெயரை பெர்ட்ன்னு சுருக்கி எல்லோரும் சொல்லிக்கிட்டு இருந்த சமயம்,அமெரிக்க  பத்திரிகை ஒன்னு (American motorcycling magazine)இவரை பர்ட் Burt  என்று  பிழையா அச்சடிக்கப்போய் , போகட்டும்போன்னு இவர் தன் பெயரையும்  பர்ட் என்றே மாத்திக்கிட்டாராம். செருப்புக்கேத்தமாதிரி காலை வெட்டிக்கலாமா?


வாங்க. மாடியேறிப்போய்  அடுத்த பகுதியில் என்ன இருக்குன்னு பார்க்கலாம்.


தொடரும்............:-)))



29 comments:

said...

என்ன சொல்லுங்க மோட்டர் சைகிள் ,மாதிரி வராது.

இண்டியன் படம் தொலைக்காட்சியி; பார்த்திருக்கிறேன். மும்முரம்னால் இதுதான்.
டுவா நல்லா இருக்கு. பாதுகாக்கணும்னு உங்க ஊர்க்காரங்க எடுத்துக்கற முயற்சிகள் மகிழ்ச்சியா இருக்கு.
பதிவர் படம் எடுக்க விடலையா.

said...

நேரடியாகப் பார்ப்பதைப் போன்ற
உணர்வைத் தந்தன புகைப்படங்கள்
விளக்கங்களும் சொல்லிச் சென்றவிதமும் அருமை
தொடர வாழ்த்துக்கள்

said...

படஙகள் நல்லா இருக்குது. வழக்கம் போல கையப் பிடிச்சு, கதை சொல்ற மாதிரி பேசிட்டே கூட்டிப் போறீங்க. சந்தோஷமா சுத்திப் பாக்கறேன் நானும். 110 வயதுங்கறதே ஆச்‌சரியம். பதிவு எழுதினார்ங்கறது இன்னும் சர்ப்ரைஸ்!

said...

இவர் புகழ் நிரந்தரமா ஒளிவீசிக்கிட்டு இருக்கு. நிறைய மோட்டர்ஸைக்கிள் கடைகளில் இவருடைய இண்டியன் வண்டிகளைப்போல் செஞ்சு காட்சிக்கு வச்சுருக்காங்க. பெருமையை போற்றுதும்!//

ஹெர் பெர்ட்ஜேம்ஸ் புகழ்போற்றுவோம்.

மாடி ஏறி உங்கள் பின்னாலேயே வருகிறேன்.

said...

110 வயசு பதிவர்... அசத்தலான ஆளா இருக்காரே! :)

விதம் விதமான அனுபவங்கள்.... அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் உங்களுக்குப் பூங்கொத்து!

said...

முதல் லேந்து மூணாவது படத்தைப் பார்த்தேன். அசந்தே போயிட்டேன்.
முத்தம் ஒன்று சந்தடி சாக்கிலே...!! !! அந்த‌
முதலை டுவாராவுக்கு !! அட டே !!!

கோபாலு பக்கம் பார்த்தேன். இவரு என்னா பா நினைக்குராரு அப்படின்னு....

நான் உன்னை நினச்சேன் !! நீ என்னை நினைக்காம இந்த டுவராவை நினைக்கிறையே
அப்படின்னு உருகறாரு பாருங்க... !!

போயிட்டு போறாரு. அவருக்கும் ஒன்னு ஃப்ளையிங் கொடுத்துடுங்க...


மீனாட்சி பாட்டி.

said...

எல்லாமே அசத்தலா இருக்கு டீச்சர். பாதுகாக்கணும்னு நினைக்கிறதே பெரிய விஷயம். உங்க ஊருக்கு ஒரு சல்யூட்!

டுவாரா கிட்ட நீங்க! உங்களுக்கு செம தைரியம் டீச்சர்..:))

said...

அவங்க பாதுகாப்பதை நீங்க இங்க ஆவணமாக்கறீங்க பாருங்க அதுக்கு ஷ்பெஷல் பாராட்டுக்கள்.

நாங்களும் தெரிஞ்சிக்க முடியுது.

said...

தென் துருவத்தில் வெற்றிகரமா நடந்த பதிவர் சந்திப்பு வரலாற்றில் இடம் பிடிச்சுருச்சு :-)))

என்ஃபீல்ட் இளைஞர்களின் கனவு வாகனமாயிற்றே :-)

said...

சிறப்பான தகவல்கள் படங்கள் என்று பதிவு சுவாரசியமாக இருக்கு.

டுவாராவுக்கு முத்தமெல்லாம் கொடுத்து..அடுத்ததாக அதை pet ஆக வைத்துக்கொள்ள ஆசையா?

said...

//என்னதான் சொல்லுங்க..... வெளிநாடுகளில் வசிக்கும் நம்மவர்க்கு இண்டியன் என்ற சொல்லைப் பார்த்தாலோ இல்லை காதுபடக் கேட்டாலோ உடம்புலே ஒரு கெத்தும் மகிழ்ச்சியும் வந்துருது என்பது உண்மைதானே?//

என்னதான் சொல்லுங்க..... இந்த வரிகள் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

ரசிப்புக்கு நன்றி.

said...

வாங்க வல்லி.

ஒரு காலத்துலே தடதடன்னு ஒரு சிங்கம்போல மோட்டர்சைக்கிள் வந்து வாசலில் நிற்கும்போது மனசு பூராவும் மகிழ்ச்சியா இருந்துருக்குமே!!!!

பதிவர் அங்கெதான் இருந்தாரு. ஆனா கூட்டத்துலே அவரைக் கண்டுபிடிக்க முடியலை:(

said...

வாங்க ரமணி.

தொடர்ந்த வரவுக்கும் ரசனைக்கும் நன்றிகள்.

said...

வாங்க பால கணேஷ்.

எதிரிகள் யாரும் இல்லாத பாதுகாப்பான வாழ்க்கை. ஸ்ட்ரெஸ் கொஞ்சம்கூட இல்லை. தொப்புளுக்கு மேலே கஞ்சி:-)

ஆயுசு கூடிவரக் கேட்பானேன்.

said...

வாங்க கோமதி அரசு.

கூடவே வர்றதுக்கு என் பணிவான நன்றி.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

பூங்கொத்து கிடைச்சது.

மனம் நிறைந்த நன்றி.

said...

வாங்க மீனாட்சி அக்கா.

ஆஹா.... அது முத்தம் இல்லைக்கா!

மவொரி முறையில் வெல்கம் அப்படித்தான் சொல்லணும்.மூக்கோடு மூக்கை தொடணும்.

நீங்க கிளம்பி வாங்கக்கா. உங்களையும் மவொரி முறையில் வரவேற்கிறேன்:-)))

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

பயந்தால் வாழ முடியுமாங்க!!!!!

said...

வாங்க புதுகைத் தென்றல்.

வரலாறு முக்கியமாச்சேங்க...அதான்.

நன்றி.மீண்டும் வருக.

said...

வாங்க அமைதிச்சாரல்.

பதிவர் சந்திப்பு. அதுவும் இருவேற மொழியில் நடந்து சரித்திரத்தில் இடம் புடிச்சுருச்சு:-)

ஒரு காலத்தில் இந்த வண்டியைப் பார்க்கவே ஆசையா இருக்கும். வண்டியைத் தூக்கி ஸ்டேண்ட் போடக்கூட,வெஜிடேரியன் பலமில்லை கதைதான்:-)))

said...

வாங்க ரமா ரவி.

வீட்டுலே அவ்வளவா வசதி இல்லைங்களே:(

இன்னிக்கு புதுசா ஒரு சேதி இங்கே. பார்த்துட்டு மனம் கலங்கிப்போச்சு. வீட்டுப்பூனை வளர்ப்புக்கு முடிவு கட்டணுமாம். அதனால் பறவை இனங்களுக்கு ஆபத்துன்னு ஒருத்தர் திருவாய் மலர்ந்துருக்கார்!!!

said...

வாங்க ஜயராஜன்.
என்னதான் சொல்லுங்க... இந்தப் பின்னூட்டமும் எனக்கு ரொம்பப் பிடிச்சுருக்கு:-)

said...

படபட மோட்டர்சைக்கிள்.
அதில ஏறிவரும் சிங்கம்.

படபடத்தது உண்மையே. அது 18 வயசில:)

said...

110 வயசுப்பதிவர்..ஆச்சரியம்....பெரிய ஓணானுக்கு துளசிம்மா கொடுக்கற முத்தம்..ஐயோ பயமா இல்லையா?:)

said...

வல்லி,

இளமை ஊஞ்சலாடாதா என்ன:-))))

said...

வாங்க ஸாதிகா.

அய்ய.... நாங்க டுவாடாரான்னு பெத்த பேர் சொல்லிக்கிட்டு இருக்கச் சொல்ல இப்படி ஓணான்னு பட்ன்னு போட்டுடைக்கலாமா:-)))))

இம்மாத்தூண்டு 'ஓணானை' பார்த்து பயந்தால் துளசியின் வீரத்துக்கு இழுக்கல்லவோ!!!!

said...

டுவாவுக்கு நீங்கள் கொடுக்கும் வரவேற்பு நல்லாருக்கே!!ஹை!!

நானும் மோட்டார் சைக்கிளுக்குத்தான் ஓட்டு போடுவேன். பழைய நினைவுகள் ஆச்சே! மறக்க முடியுமா? ஹி...ஹி...

said...

புதிது புதிதாக சுற்றிப் பார்க்கின்றோம்.

மோட்டார் சைக்கிளில் பறக்க ஆசைதான் நிலத்தில் புரளாதவரை :)