Wednesday, April 30, 2014

அஸ்ஸியும் துள்ஸியும்...... அடுத்தடுத்து!

ஒரு கூட்டு, ஒரு கறி, சாம்பார், ரசம், மோர் என்று சிம்பிளான சாப்பாடு. ஆனால் சுவை அருமையோ அருமை!  (ரெண்டு நாளா  சோத்தைக் கண்ணால் பார்க்கலை என்றதும் ஒரு காரணம் கேட்டோ!)  முற்றம் கடந்த தாழ்வாரத்தின் மூலையிலொரு அடுக்களை!    அப்படியொன்னும் கண்ணைக் கவரும் டிசைன் இல்லை.  பழைய காலக் கூட்டுக் குடும்ப வீட்டின் அடுக்களைபோல களேபரம்:-)

 கிரைண்டர் ஒன்னு மாவு அரைச்சுக்கிட்டு இருக்கு. பக்கத்தில் ஒரு இட்டிலிக் குண்டான்!பார்த்துப் பலநாளாச்சு இதை! இப்பெல்லாம்  இட்லி ஸ்டேண்ட் தானே எல்லோர் வீட்டிலும், இல்லையோ?


பேசாம ராத்திரி டிஃபனுக்கு இங்கே வந்துருங்கன்னார்  தலைமை  சமையல்காரர் கோவிந்த்.  தினம், இட்டிலி, தோசை  உண்டு.  பொங்கலும் உப்புமாவும்  சிலநாட்களில்  இருக்கும் என்றார். யாத்திரை வருபவர்கள் இங்கேயே தங்கிக்கவும் செய்யலாம்.  குறைஞ்சபட்சம் நம்மூர் சாப்பாடு கிடைச்சுரும்.  மெஸ் மாதிரிதான் நடத்தறாங்க.  விலையும் அதிகமில்லை.  சரியாச் சொன்னால்  ரொம்பவே குறைவு!
(மேலே: அன்னதாதா கோவிந்த் ஜி)

வசதிகள்  எல்லாம் ஜஸ்ட் பேசிக்.  அட்ஜஸ்ட் பண்ணிக்க முடிஞ்சால்  செலவும் குறையும்.  வேற ஹொட்டேலில் தங்க விருப்பமுன்னா அதுக்கும் ஏற்பாடு செஞ்சு தர்றாங்க.  அக்கம்பக்கம்  சாரநாத், கயா,ப்ரயாக் எல்லாம் போய்வரவும் இவுங்களே ஏற்பாடு செஞ்சு தர்றதால்  நமக்குத் தலைவலி இல்லை, கேட்டோ!

நீங்க காசி போய் இறங்கினது முதல்   காசி, கயா, ப்ரயாகை த்ரிவேணி சங்கமம்  என்று மூன்று இடங்களிலும் வைதீகக் கர்மாக்கள் முடிச்சு, ஊரையும் சுத்திப் பார்த்து,  கங்கைக்கரைக் கோவில்களில் தரிசனம், படித்துறைகள் உலா என்று சகலமும் நடத்திக்கொடுத்து,   திரும்ப உங்களை  அங்கிருந்து வண்டியேத்தி  அனுப்புவது வரை  எல்லாத்தையுமே அவுங்க பொறுப்பில் விட்டுட்டு நாம் ஹாயா இருக்கலாம்.

(வலது பக்க  மூலையில் அடுக்களை)

சாப்பாடு நமக்கு இங்கேன்னு தெரிஞ்சதும் உடனே கைலாஷை, செல்லில் கூப்பிட்டு அவரைப்போய் சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு வரச் சொல்லிட்டோம். வீட்டுக்குப்போய் வருவாரோ என்னவோ?  வரட்டுமே நிதானமா.  நமக்கு இங்கே இன்றைய  பரிபாடிகள் எவ்ளோ நேரமாகுமுன்னு விவரம் இல்லை பாருங்க.

கொஞ்சநேரம் ஆஃபீஸில்(!) இருந்து  பொதுவாப் பேசிக்கிட்டு இருந்தோம்.  'ரொம்ப நல்லா  எங்க மனத்துக்கு ஏற்றபடி  செஞ்சீங்க'ன்னு நன்றி சொன்னேன்.  நடத்திக் கொடுத்த சேவைக்கு எவ்ளோ சார்ஜ்ன்னு கேட்டதும், உங்க  இஷ்டம் என்றார் சிவகுமார். பையில் இருந்து  ஏற்கெனவே தனியா எடுத்து வச்ச தொகையைக்  கொடுத்ததும் அப்படியே வாங்கி சட்டைப்பையில் வச்சவரிடம், எண்ணிப் பார்த்துக்குங்கோ என்றேன். அதெல்லாம் ஒன்னும் வேணாம்மா.  உங்க திருப்தியே எனக்கு மகிழ்ச்சின்னார். இப்படியும் சிலர் இருக்காங்க!!!!

மறுநாள் வேறெங்காவது போகணுமுன்னு இருந்தால்  ( கயா தான் வேறென்ன? ) சொல்லுங்கோ. ஏற்பாடு செஞ்சுதர்றேன்னார்.  252 கிலோமீட்டர்!  மூணரை /நாலு மணி நேரப்பயணம்.  போய்வரவே எட்டுமணி நேரமாகிரும். அப்புறம்  மற்ற காரியங்கள்.  என்னால்  அவ்ளோதூரம் பயணம் செய்ய  முடியாது என்பதால்.....   இன்னொருமுறை கிடைச்சால் பார்க்கலாம் என்று சொல்லிட்டோம். சந்துக்கு வெளியே  கார் நிற்கும் இடம்வரை  கொண்டு வந்து விட்டுட்டு கொஞ்சநேரம் பேசிட்டு இருந்தார்.

 அந்த சங்கரமடம் கோவில்வழியாத்தான் வந்தோம். வழியில் இஞ்சிச் சாய் கொதிக்கும் கடைகள்.  நல்ல மணம் கேட்டோ!  இன்னொரு பக்கம் கல்பாவிய சந்தில் இருக்கும் இடம் பெயர்ந்த கற்களை சரியா வச்சு  காங்க்ரீட் போட்டு சரி செஞ்சுக்கிட்டு இருக்கு நகராட்சி.   இவ்ளோதான் பராமரிப்பு செய்ய முடியும்.  ரெண்டு பக்கமும் துளி இடம் விடாமல்  கட்டி வச்சுருக்காங்களே வீடுகளை! இதுலே ஹெவிவெயிட் சாம்பியன்களா மாடுகள் இடைவிடாமல் நடந்தும்  இருந்தும்  சேவை சாதிப்பதால்  சட்னு கற்கள் பெயர்ந்துருது.  சந்தில்  பராமரிப்பு வேலை நடக்கும்போது  பேருக்கு ஒரு கயிறு ரெண்டு பக்கமும்!   அதையே லக்ஷ்மண ரேகையா  நினைச்சுக்குதுகள் இந்த மாடுகள். அப்பா.....  என்ன ஒரு அறிவு!!!!

இப்ப எங்கேன்னு என்னை பார்த்தார் கோபால்.  வேறென்ன பெருமாள்தான், இல்லையோ?  அறைக்குப்போய் கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு  சாயங்காலம் வரலாமான்னு அவருக்கு யோசனை.   வேணாம்... பகல் நேரத்தில் காசியைக் காணாமல்  இருட்டில் திரும்பி வந்து தடுமாறணுமா?

முப்பத்தியஞ்சு நிமிசப்பயணத்தில் அஸ்ஸி காட்  வந்துட்டோம்.  வரும் வழியில் பெரும்பாலும் 'அந்தக் கடைகள்'தான். அதுவும் ஹனுமன்காட்டில் அடுத்தடுத்து ஏகப்பட்டவை. இவ்ளோ டிமாண்ட்  இருக்கா!!!

கங்கைப்படித்துறைகளின்  ஒரு கடைசி இந்த அஸ்ஸி காட்   ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துச்சு!  மெயின் ரோடில் இறங்கி  கல்லி (சந்துகள் ) வழியா நடக்க வேண்டிய அவசியமே இல்லை.  ஜஸ்ட்  டைரக்ட்டா...  படித்துறையிலேயே  வண்டியைக் கொண்டு வந்து நிறுத்திக்கலாம்!   இங்கேதான் அஸ்ஸி நதி , ஓடிவந்து  கங்கையில் கலக்கும் இடம்.

மரத்தடியில்   நம்ம  நேயுடு. இப்பத்தான் குளிச்சு முடிச்சதுபோல பளிச் என்னும் சிந்தூரவண்ணத்தில்!

கண்ணெதிரே நீளமாகப்போகும் பாதையின் வலப்பக்கம் கங்கை!  பாதைக்கும் நதிக்கும் இடையில் இன்னும்  விரிந்து கிடக்கும் படித்துறைப்படிகள்.  ஆனால் படிக்கட்டுக்கும் கங்கைக்கும் இடையில் இருக்கும் மண்பரப்பு சேறாக   இருக்கு:(

நமக்கிடப் பக்கம்  மேலே போகும் படிகளில்  கட்டிடங்கள், அவைகளுக்குள் கோவில்கள் என்று இருக்கு. சென்னையில் நடைபாதைக் குடும்பம் போல் இங்கே படித்துறைக் குடும்பங்கள் அங்கங்கே:(

ஏராளமான பிள்ளைகள் ஓடியாடிக்கிட்டு இருக்காங்க. கங்கையின் மற்ற படித்துறைகளைவிட, இது  மேல்நாட்டோரைக் குறிவச்சுக் கட்டுனது போல இருக்குன்னு எனக்கு ஒரு தோணல்.  வெளிநாட்டு சிகெரெட்டுகள் அடுக்கி வச்ச ஒரு  படித்துறைக் கடை!  பயணத்துலே இருந்தாலும் ப்ராண்ட் மாத்திக்க வேணாமாம்!


ரெண்டு மூணு  வெள்ளைக்காரப் பெண்கள், அங்கிருக்கும் குழந்தைகளுக்கு  படங்கள் வரையவும் புத்தகங்கள் வாசிக்கவும் சொல்லிக் கொடுத்துக்கிட்டு இருக்காங்க. ஆறுமாசம் தங்கும் முடிவோடு வந்துருக்காங்களாம். அப்படியே கொஞ்சம் சமஸ்க்ரதம், யோகா, இண்டியன் கல்ச்சார்(!)  எல்லாம் கத்துக்கிட்டுப் போகும் ஐடியாவாம்.

மூங்கில் குடைகளின் கீழ் பண்டாக்கள் உக்கார்ந்து, மக்களுக்கான வைதீக சமாச்சாரங்களை நடத்திக் கொடுக்கறாங்க.  வேலைகள் முடிஞ்சதும்  குடைகளை அங்கங்கே நிரந்தரமா விட்டு வச்சுட்டுத்தான் போறாங்க.  ஒரு குடையின் கீழ் பண்டா ட்ரெய்னி கீழே:-))))

இங்கேயும்  கொஞ்சம் சின்ன அளவில் கங்கை ஆரத்தி நடக்குதாம். அதுக்கான   மரப்பெஞ்சு அஞ்சு போட்டு வச்சுருக்காங்க.  பார்க்க ஒரு  கட்டில் போலசூப்பர். பேசாம படுத்து ஒரு குட்டித்தூக்கம் போட்டால் கொள்ளாம்:-) இப்போ  மதியம் மணி ரெண்டரை.   இதமான சூரிய வெப்பம். உண்ட மயக்கம் . கண்ணைச் சொக்கிக்கிட்டுப் போகுது!




பசுக்களுக்கும் பைரவர்களுக்கும்  ஏராளமான இடம். சுற்றித் திரியுதுகள். வெறும் மண்ணில்  என்ன கிடைக்குமோ தின்ன?

எதோ ஒரு தீனி (பெயர் தெரியலை. என்னவோ சொன்னார் கடைக்காரர். சட்னு  நினைவிலிருந்து நழுவிருச்சு)  வியாபாரம் நடக்குது. பார்க்க ரொம்ப கலர்ஃபுல்!



அஸ்ஸிக்கு அடுத்து நம்ம காட்:-)  துள்சி காட்!  ராமபக்தர்  துள்சிதாஸ்  இங்கே இந்தக்கரையில் இருந்துதான் ' ,ராமசரிதமானஸ்' என்ற ராமகாதையை எழுதுனாராம்.  ஒரு சமயம் அவர் கையில் இருந்த சுவடி நழுவி கங்கையில் விழுந்துருச்சாம்.(ஐயோ!)  ஆனால்  அடிச்சுக்கிட்டுப் போகாமல். அங்கேயே  நின்னதாம் இவர் மீண்டும் எடுக்கும் வரை! (அப்பாடா.....)

அவர் இங்கேயே கடைசிகாலம் வரை வாழ்ந்து மறைஞ்சார். அவருடைய சமாதியுடன் ஒரு கோவில் இருக்குன்னு சொல்றாங்க. ஆனாலும் இன்னொரு வெர்ஷனும் இருக்கு. தன் அந்திம காலத்தில், ஸ்ரீ ராமர் சரயூவில் இறங்கி தன் வாழ்க்கையை முடிச்சுக்கிட்டது போல், இவர் கங்கையில் இறங்கி அப்படியே 'போயிட்டார்'ன்னும் சொல்றாங்க. இவருடைய காலம் கிபி 1532 முதல் 1623 வரை.


 ராமாயணம் தவிர நிறைய பஜனைப் பாடல்களும் எழுதி இருக்கார். 'ஸ்ரீ ராமசந்த்ர க்ருபாளு  பஜமன  ஹரண பவ பய தாருணம்'  வடக்கே ரொம்பவே புகழ்பெற்றது.  கேட்கும்போதே மனசு சாந்தமாப்போயிரும்!    விருப்பமுள்ளவர்கள்  இங்கே யூட்யூப் லே கேட்டுப்பாருங்க. பாடியவர் அனுராதா பொடுவால் என்று சொல்கிறார்கள்.





இதே பாடல்  நம்ம  லதா மங்கேஷ்கர் குரலில் .   பாடல் வரிகளும்,  அதற்கான ஆங்கில மொழி விளக்கமும் உண்டு.

ஃபிஜித்தீவில், இந்துக்களுக்கிடையில்  ஏராளமான  ராமாயண் மண்டலிகள் இருக்கு. அவுங்க வால்மீகியை வச்சுருந்தாலும், துளசிதாசரையும்   கூடவே வச்சுருக்காங்க.  எந்த உற்சவமானாலும் முக்கியமா ஸ்ரீராமநவ்மி கொண்டாட்டத்தில்  (இது 10 நாள் உற்சவம்!)  ரெண்டு ராமாயணங்களையும் வாசிப்பாங்க.

அஸ்ஸி  படித்துறையும் துள்சி படித்துறையும் சேர்ந்தே அடுத்தடுத்து இருக்கு.  வயசில் அஸ்ஸி தான் மூத்தது:-) 1941 இல்  துள்ஸி படித்துறையை   சீர்படுத்தி, காங்க்ரீட் படிகள் அமைச்சு புனரமைச்சாங்க.  செலவு செஞ்சவர்   தொழிலதிபர், தனிகர்   பல்தேவ்தாஸ் பிர்லா.


இங்கிருந்தும் படகு சவாரி போகலாம்.  விதவிதமான படகுகள் பயணிகளுக்குக் காத்து நிற்கின்றன. சில படகுகளில்  எதோ  பம்ப்எஞ்சின்களை வச்சு கங்கைத் தண்ணீரை எடுக்கறாங்கன்னு  தோணுது, நீண்டு கிடக்கும்  குழாய்களைப் பார்த்தால். (இல்லைன்னா அழுக்குத்தண்ணியை கங்கைக்குள் பம்ப் செய்யறாங்களோ?)



துள்ஸியைக் கடந்தால் ஜானகி, அப்புறம் Bachhraj Ghat , Jain Ghat  இப்படிப் போய்க்கிட்டே இருக்கு. முடிவடையும் இடம் வருணா காட்.  பல படித்துறைகளின்  ஆதி காலத்துப்பெயர்கள் மாறி புதுப்பெயர்களோடு இருப்பதும் சகஜம்.  நம்ம துள்ஸி காட் கூட ஒரு காலத்தில் Lolark Ghat என்ற பெயரில்தான் இருந்துருக்கு.  லோலார்க் தீர்த்த காட் என்று  பெயர். புனிதமான  படித்துறைகளில் ஒன்று. இப்பவும் புனிதத்துக்குக் குறைவில்லை. துள்ஸி இல்லையோ!!!!

வந்த வேலையை  இன்னும்  முடிக்கலையே......  எங்கே என் பெருமாள்?

தொடரும்.........:-)





17 comments:

said...

ரசிச்சு ரசிச்சு எழுதி இருக்கிறீங்கள். அதிலும் அந்த பெயர் தெரியாத தீன்பண்டத்தை அழகாக படம் பிடித்திருக்கிறீர்கள். என் அம்மாவுக்கும் உங்கள் பதிவுகள் எல்லாம் நிரம்ப பிடிக்கும். ஆனால் பின்னூட்டம் போடுமளவுக்கு அவவுக்கு கணணி அறிவு இல்லை. வெகு சீக்கிரம் கற்பித்து விடுவேன். உங்களின் பதிவுகளில் அவவுக்கு பிடித்தது..."சிக்கனமா இல்லை கருமித்தனமா","எவ்ரிடே மனிதர்கள்". நன்றி.

said...

காசி முழுக்க காட்டுன்னு சொன்னாங்க. காட்டு காட்டுன்னு இத்தன காட்டு காட்டீட்டிங்களே. துளிசி காட்டையும் சேத்து.

அது என்ன தின்பண்டம்னு தெரியல. வடக்கத்திப் பண்டம். பாவ் பஜ்ஜி மாதிரி இருக்கு. வடாபாவ் மாதிரியும் இருக்கு. என்னவோ ஒரு பேர் சொல்லுவாங்களே. மறந்து போச்சே!

said...

இண்டு இணுக்கு விடாம எங்களையும் கூட்டிட்டு போய் காண்பித்து
விட்டீர்கள். எவ்வளவு விவரங்கள்!!!! .சின்ன சின்ன details கூடவிடாம பகிர்ந்துள்ளீர்கள் .
அந்த தின்பண்டத்தின் பேர் மறந்துச்சுன்னு சொன்னது அதிசயம் தான் .
trainy பண்டிட் andபெரிய்ய்ய்ய்ய்ய குடை போட்டோ அருமை . நேயுடுவின் மாலை வெகு அழகு . .துள்சிகாட் அருகே துளசி போட்டோ சூப்பர் !!!!

said...

வாங்க வைதேஹி.

உங்கள் அம்மாவுக்கு என் நன்றிகளைச் சொல்லுங்கோ.

தொடர்வருகைக்கு என் மனம் நிறைந்த நன்றி.

said...

வாங்க ஜிரா.

நம்ம பெயரில் ஒரு காட் கட்டி விட்டுருக்காங்க. அதைக் காட்டாமல் போனால் எப்படி:-)))))

அவர் பாவ்பாஜியும் செஞ்சு தர்றார். ஆனால் இந்த உருண்டைதான் என்னமோ சொன்னார்..... சரின்னு தலையாட்டிட்டு, உடனே மறந்துருக்கேன் பாருங்க:(

said...

வாங்க சசி கலா.

ஆனைக்கு வயசாகிக்கிட்டே போகுது. அதான் ஞாபக மறதி:(

said...

அன்ன தாதா கோவிண்த் போட்டோ நல்லா இருந்தது.அந்த வீட்டுப் படங்களும் அப்படியே.இந்த சேவைதான் நிலைக்கும். இது துளசி தளமா கோபால் தளமா தெரியலையே>}}} எனக்கென்னவோ அந்தக் குழாய்கள் கங்கை ஜலம் விற்கிறத்துக்காகப் போட்டவை மாதிரி தோணுகிறது.ஹனுமான் சூப்பர். ஒரு இன்ச் விடாமப் படம் பாடம் எடுத்திட்டீங்க துளசி.

said...

டீச்சர் கண்டுபிடிச்சிட்டேன்னு நெனைக்கிறேன். ரகதா பாட்டீஸ்னு நெனைக்கிறேன். இந்தப் பேர்தான் என் மண்டைக்குள்ள ஒளிஞ்சிக்கிட்டிருந்தது.

said...

அப்பப்பா எத்தனை தகவல்கள் - அருமையான புகைப்படங்கள். பார்க்கும் காட்சியெல்லாம் படம் பிடிக்க உங்களிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும்! :))))

ஆலு டிக்கி?

said...

அருமையான பயணத்தொடர் படித்துக் கொண்டு இருக்கிறேன். எல்லாம் நன்றாக இருக்கிறது.
படங்கள் எல்லாம் அழகு.

said...

வாங்க வல்லி.

கங்கை ஜலம் விற்பதற்கா???

ஒரு குழாயில் தண்ணீர் கங்கைக்குப் போகுதேப்பா..

குழப்பமாத்தான் இருக்கு:(

'அந்த' வீடு உண்மையிலேயே நல்லா இருக்குப்பா. இன்னும் கொஞ்சம், கொஞ்சமே கொஞ்சம் மேம்படுத்தினால் இன்னும் சூப்பரா இருக்கும்!

said...

வாங்க ஜிரா.

இது ரகதா பாட்டீஸ்னு சொல்றீங்களே.... அது எண்ணெயில்
(ஷேலோ ஃப்ரை) பொரிக்கணுமே.

இங்கே கடாய் ஒன்னுமில்லை. ஒருவேளை அந்த ராட்சஸ தோசைக்கல்லில் பொரிப்பாங்களோ?

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ஊஹூம்... அது ஆலு டிக்கி இல்லையாக்கும்:-)

உங்கூர்லே நடந்து போகும்போது தெருவோரக்கடையில் பார்த்தால் விசாரிச்சுச் சொல்லுங்க.

எப்படியோ இது வடக்கர்கள் தீனிதான்:-)

said...

வாங்க கோமதி அரசு.

எல்லாம் நீங்கள் போய் வந்த இடங்களே:-)

சரியாச் சொல்றேனான்னு பாருங்க. தகவல் பிழை இருந்தால் திருத்திக் கொள்வேன்.

நீங்கள் கங்கையில் முங்கிக் குளிச்சீங்க. எனக்கு அந்த தைரியம் இல்லை:(

said...

That is dhabeli.

said...

வாங்க சாந்தி.

ஆஹா.... நன்றீஸ் நன்றீஸ்.

இப்படித்தான் சொன்னாரோன்னு இன்னும் லேசா ஒரு யோசனை.

நானும் நீங்க வந்து சொல்வீங்கன்னுதான் இத்தனைநாள் எதிர்பார்த்துக்கிட்டே இருந்தேன்.

வெள்ளை மாவுக்குள்ளே ஃபில்லிங் போட்டு அடுக்கி வச்சுருப்பது இதுதானா?

தபெலி கொஞ்சம் பாவ்பாஜி மாதிரி இருக்காதா?

said...

காசிப் பகிர்வு.... பின்தொடர்வேன்.