Monday, March 30, 2015

ஓ மரியா ஓ மரியா...... ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 34)

செங்கண்ணூரில் இருந்து புலிக்குன்னு போகிறோம்.   என்ன விசேஷமாம்? புலிகள் வசிக்கும் குன்றா? ஆமாமாம்..... புலிகளை வச்சுக் காப்பாத்திட்டாலும்....    அங்கேதான் இன்றைக்கு ராத்தங்கல். முதலில் நம்ம திட்டத்தின்படி  ஆலப்புழாவில் படகு வீட்டில் ஒருநாள் என்று நினைத்திருந்ததை, மாத்திக்கும்படி ஆச்சு. ஏற்கெனவே எங்கேயுமே ஹொட்டேல் ஒன்னும் நியூஸியில் இருந்து புக் பண்ணிக்காமத்தான் இந்தப்பயணம் தொடங்கியது.

ஒவ்வொரு இடத்திலும் இரவு தங்கும்போது அடுத்த நாளுக்கான இடத்தை வலையில் தேடி செல்லில் கூப்பிட்டு புக் பண்ணிக்கிட்டே போறோம். அதன்படி பார்த்தால் படகு வீட்டுக்குப்போனால் அங்கேயே ஒருநாள் முழுக்கத் தண்ணீரில் இருக்கணும்தான். ஹொட்டேல் அறைபோல  நினைச்சபோது அக்கம்பக்கம் போய் கோவில்கள் பார்த்தெல்லாம் திரும்ப முடியாது.   'ரிலாக்ஸா உக்கார இப்போ நேரமில்லை.  பின்னே ஒருக்கில் ஆகட்டே'
ன்னு  ஹொட்டேல்களைத் தேடுனப்ப  கண்ணில் பட்டது மரியா!

வலையில் படங்களைக் காமிச்சார் கோபால். காதலில் விழுந்தேன்:-)

செங்கண்ணூரில் இருந்து வெறும் 32 கிமீ தூரம்தான்.  பகவத் கார்டனில்  இருந்து வண்டியைக் கிளப்பி மெயின் ரோடு வர்றோம். எதிரில்  கட்சி ஊர்வலம் ஒன்னு வருது.  ஆர் டி ஓ. ஆஃபீஸ் பிக்கெட்டிங், சி பி ஐ நடத்துதாம்.  நேதாவு சதாசிவன் எம் எல் ஏ  ஆரம்பிச்சு வைக்கிறார். அதானே... வந்து முழுசா ஒருநாளாச்சு. இதுவரை  கம்யூனிஸ்ட் பார்ட்டி  ஊர்வலம் கண்ணில் படலையே! கேரளாவில் முந்தியெல்லாம்  கொடிபிடிச்சுக்கிட்டுக் கட்சி ஊர்வலம் போகும்போது  ஒத்தையாளா வரிசையில் கடந்து போவாங்க. அனுமன் வால் போல் நீளமாப் போய்க்கிட்டு இருக்கும். இப்ப மக்கள் தொகை கூடிப்போச்சு. மேலும் கொஞ்சம் பெரிய ஊராவும் இருக்கே.

காலையில் நாம் திருவல்லா வரை போனோம் பாருங்க  அதே ரோடுதான். ப்றாவடியைத் தாண்டும்போதுதான்  இது மனஸிலாச்சு. அங்கேயும் ஒரு  கட்சி ஊர்வலம் ஆரம்பிக்க மக்கள் கூடிக்கிட்டு இருக்காங்க. இது எதுக்குன்னு தெரியலை. சில காவிக்கொடிகளும் செங்கொடிகளுமா இருக்கு.


திருவல்லா ஜங்ஷன்  கடக்கும் இடத்தில் கட்சி மீட்டிங் நடக்குது. பி எஸ் என் எல் கட்டிடத்துக்கு முன்னாலே!  நல்ல கூட்டம். மைக் பிடிச்சவர் ஆவேசமா வெல்லு விளிக்கிறார்.  22  நிமிசப் பயணத்துலே மூணு இடங்களில்  போராட்டம்.  ஆஃபீஸ்களில் வேலை நடந்த மாதிரிதான்:(






திருவல்லா- செங்கணாஞ்சேரி ரோடு. நாம் அதுவரை போகவேண்டியதில்லை. பெருந்துருத்தி கடந்து பெருந்நா என்ற இடத்தில் வந்து சேரும் ஆலப்புழை செங்கணாஞ்சேரி ஹைவேயில் (ஸ்ட்டேட் ஹைவே 11) லெஃப்ட் எடுத்துக்கணும்.  கூகுள் மேப் பார்த்து , சீனிவாசனுக்கு வழிசொல்லிக்கிட்டே வர்றார் கோபால்.

ஹைவே இடதுபக்கம் திரும்பியதும் கொஞ்சதூரத்தில்   எனக்கிடதுபக்கம் பெரிய ஆறு போல் அகலமா  இருக்கு. அடுத்த கரையில் வீடுகள். இங்கிருந்து அங்கு போக  உயர்த்திக் கட்டிய பாலங்கள்!  ஏன் இவ்ளோ உயரத்தில் பாலங்கள்? அடியிலே படகு (வீடு) போகணுமே!  ஏஸி கனால் (Aleppey Canal) என்ற இதுதான் கீழைநாட்டு வெனிஸ்! காயல்! The backwaters of Kerala.    ஆலப்புழையில்  படகுவீட்டில் தங்கினோமானால் இங்கெல்லாம்தான் கொண்டு வருவார்கள்.


இக்கரையில்  ஹைவே பயணிகளுக்காக  எல்லா மரங்களிலும் காய்க்காமல் தொங்கும்  இளநீர்க்குலைகள்:-)  நமக்கும் தாகசாந்தி ஆச்சு.  புளிக்குன்னு போர்டு பார்த்ததும் ஆஹா... இது புலி இல்லை. புளின்னு புரிஞ்சது.  இதுவரை சரியான வழிதான். இனி போகும் வழி விபரத்துக்கு, உடனே மரியாவுக்கு  செல்லடிச்சால் எங்கே இருக்கீங்கன்னு கேட்டாங்க. இப்ப  குருசடிகிட்டே  வந்தாச்சுன்னேன்.  ரொம்ப நல்லது. அதே இடம்தான். ரைட் எடுத்துக்கிட்டு நேரே வாங்க. ஒரு டெட் எண்ட் வரும். அங்கே இடது பக்கம் திரும்பிருங்கன்னு பதில்.


இந்தக் குருசடி என்பது என்னன்னா.... நம்மூர் சாலைகளில்  கிராமதேவதை, மாரியம்மன் , புள்ளையார்ன்னு  அங்கங்கே தெருவோரக் கோவில்கள் இருக்கும் பாருங்க. அதைப்போலத்தான்.  கொஞ்சம் பெருசா நவீனமாக் கட்டி அதன்மேல் யேசு, சிலுவை , மாதா  இப்படி சிலைகளை  வச்சுருப்பாங்க. இங்கே சிலுவையும்  இருக்கு, உள்ளே சிலைகளும்  இருக்கு. குரிசு = சிலுவை. குரிசடி  என்றுதான் சரியாச் சொல்லணும். ஆனா பேச்சு வழக்கில் குருசடி ஆகிப்போச்சு.

 ஆக்ஞை அனுசரிச்சு வலதுபக்கம் திரும்பிப்போறோம்.  குட்ட நாடு பகுதி இது.  அறுவடை முடிஞ்சு நீர் தேங்கி நிற்கும் நிலங்கள்,  அதுலே புழு பூச்சி, சின்ன மீன்கள் பிடிச்சுத்தின்னு பசியாற இறங்கி இருக்கும் நாரைகள், அழகழகான பங்களாக்கள், எங்கே பார்த்தாலும் பசுமையும் அதில் தெங்குகளுமா.....  ஜோரா இருக்கு! கிட்டத்த மூணு கிமீ தூரம் இந்த தெவிட்டாத அழகு!



இந்தத் தெரு போய் முடியும் இடத்தில் தண்ணீர்!  ஆறு பெருக்கெடுத்து ஓடுது. இடது பக்கம் திரும்பணுமேன்னு பார்த்தால்  எங்கே பார்த்தாலும் தண்ணீர்தான்.  எதிர்க்கரையில் இருந்து மக்கள் இங்கே வர படகு சர்வீஸ் வேற!  ஆட்களை இறக்க, ஆட்களை  ஏத்த கம்பி ஏணியைப் படகுக்கும்  கரைக்கும் பாலமா வச்சுருக்காங்க.

படகுலே வந்திறங்கும் மக்களை ஏத்திக்கிட்டுப்போக பஸ்  நிக்குது.
அங்கிருந்த ஆட்களிடம் மரியான்னதும் இடத்துன்னு தண்ணியிலே  கை காமிக்கறாங்க. இது என்னடா நமக்கு வந்த சோதனைன்னு  ஒருவேளை  பின்பக்கத்து வழி இருக்குமோன்னு  போன வழியிலே கொஞ்சூண்டு திரும்பி வந்து  பார்த்தால்  வழி ஒன்னும் இல்லை. அங்கே  பஸ்ஸுக்குப் பக்கம் நின்னவரிடம் கேட்டால்   '100 மீட்டர் இடத்துவசம்' என்றார்.

திரும்பிப்போய்  தண்ணீரைப் பார்த்து நிக்கும்போது , மரியாவில் இருந்து கூப்பிட்டு  என்ன ஆச்சுன்னாங்க.  வெறும் தண்ணீரா இருக்கு.  எப்படி வரன்னால்.... தண்ணீரிலேயே வாங்கன்னு பதில். போச்சுரா.... ஒருவேளை படகில் போகணுமோ?

அதுக்குள்ளே ஒரு  மோட்டர்சைக்கிள்காரர் இடதுபக்கம் தண்ணீரிலேயே  வண்டியை ஓட்டிக்கிட்டுப்போறார். 'ஙே'ன்னு பார்க்கிறோம்.  தெய்வம் வழி காட்டுவதைப்போல் ஒரு கார் இடத்துவசம் திரும்புச்சு.  கவனிச்சுப் பார்த்தால்.... காம்பவுண்டு சுவரை ஒட்டியே  கார் போகுது.  ஓஹோ... தண்ணியிலேயே  ஓட்டிப்போகணும் போல!  பெருமாளே காப்பாத்துன்னு நாமும் அந்தக் காரை பின் தொடர்ந்தோம்.  இடது பக்கம் இருக்கும் பெரிய பங்களாவுக்குள்ளே முன்னாலே போன கார் நுழைஞ்சது.  சின்னதா ஒருமேடு நமக்கு முன்னால். அதுலே ஏறி இறங்கினதும்  இடத்துவசம் நாம் தேடி வந்த மரியா!

உள்ளே போய் வண்டியை நிறுத்திட்டு இறங்கிபோனோம்.  ரெமா நமக்காகக் காத்திருந்தாங்க.

நமக்கான அறையைக் காமிச்சதும் அங்கே பெட்டிகளைக் கொண்டு வந்து வச்சார்  பணியாளர். இடத்தைச் சுத்திப் பார்க்க நினைக்கும்போது மகளிடமிருந்து ஒரு டெக்ஸ்ட் மெஸேஜ், கூப்பிடச் சொல்லி.  உடனே  கூப்பிட்டோம்.  போனில் ஒரே அழுகை. என்ன ஏதுன்னு விசாரிக்கிறோம். விக்கிவிக்கி வரும் அழுகையைத்தவிர வேறொன்னுமில்லை:(  நான் ரொம்பவே பயந்து போயிட்டேன். கோபால்  திகைச்சு நிக்கிறார்!

இன்றைக்கு கொஞ்ச நேரம் அழவிட்டுட்டு,(அப்பதான்   அவள் மனசுக்கு ஆறுதல் கிடைக்கும்)   என்ன ஆச்சுன்னு கேட்டேன். செத்துப்போயிட்டான்னு சொல்லி திரும்பவும் அழ ஆரம்பிச்சாள். ப்ச்.... எனக்கே அழுகை வந்து இந்தப் பக்கத்தில் இருந்து நான் அழறேன்:(

நாங்க நியூஸியிலிருந்து கிளம்பறதுக்கு மூணு நாளைக்கு முன்னால் அவளுடைய கடவுளரில் ஒன்னு காணாமப்போயிருச்சு.  அக்கம்பக்கம் போயிருக்கும் திரும்பி வந்துருமுன்னு சொன்னேன். அப்புறமும் காணோம் என்றதும் கொஞ்சம் கவலையாத்தான் இருந்துச்சு. எதுக்கும் RSPCA க்கு ஃபோன் செஞ்சு கேட்ருக்காள்.  யார் வீட்டுக்காவது போயிருந்தால் அவுங்க ரிப்போர்ட் செஞ்சுருப்பாங்கதானே?

இதுலே  என்னன்னா  Zeus  ரொம்பவே ஃப்ரண்டிலியானவன். நல்லா கம்பீரமாகவும் இருப்பான். அவன் வகை அப்படி. தெருவிலே போகும் யாராவது  'கேட்நாப்' பண்ணிருப்பாங்களோன்னும் ஒரு எண்ணம் எனக்குள். அவளும் அவன் படம் ,விவரம் எல்லாம் ப்ரிண்ட்  எடுத்து அக்கம்பக்கம்  அவுங்க பேட்டையில் எல்லா வீட்டு மெயில்பாக்ஸிலும்போட்டுட்டு வந்துருக்காள்.

நாங்கள் பயணத்திலும் தினமும்  அவளிடம் பேசும்போது கிடைச்சானான்னு கேட்டுக்கிட்டே இருந்தோம். இல்லை இல்லை என்பதே பதில். நானும் ஒவ்வொரு கோவிலிலும்  தரிசனம் செய்யும்போது இவனுக்காகவும் வேண்டிக்கிட்டே இருந்தேன்.


அவன் எதோ வண்டியில் அடிபட்டு, நாலாவது வீட்டுத் தோட்டத்தில் புதருக்குள் கிடந்துருக்கான்.  எத்தனை நாள் இருந்தானோ யாருக்குத் தெரியும்?  இப்பதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னால் அந்த வீட்டுவாசி வந்து , ' ப்ளையர் பார்த்தேன்.  உங்க பூனை காணாமப் போயிருச்சா' ன்னு கேட்டுருக்கார்.  ஆமான்னதும், எங்க தோட்டத்தில் ஒரு புதருக்குள்ளே ஒரு பூனை இருக்கு. வந்து பாருங்கன்னதும் இவள் ஓடி இருக்காள்.  அது நம்ம பையன்தான். கழுத்துலே காலர் இருக்குல்லே!

உடனே வீட்டுக்கு ஓடி வந்து நமக்கு டெக்ஸ்ட் செஞ்சுருக்காள்.  பூனை எங்கேன்னால்.... அங்கேதான் இருக்காம். 'ஒரு அட்டைப்பொட்டி கொண்டு போய் எடுத்துக்கிட்டு  வா'ன்னேன்.  ஐயோன்னு மீண்டும் அழுதாள். ப்ச்.....

அவனை என்ன செய்யணுமுன்னு கேட்டதுக்கு,  'பெட் க்ரெமேஷன்  சர்வீஸுக்கு போன் பண்ணி வரச்சொல்லு. அவுங்க  வந்து கொண்டு போய்  எரிச்சு சாம்பல் தருவாங்க. வாங்கி வை. நாம் திரும்பி வந்ததும் மேற்கொண்டு யோசிக்கலாம்' என்றேன். நம்ம பசங்க  அஸ்தியை கங்கையில் கரைச்சது நினைவுக்கு வந்து ஒரு பாட்டம் அழுது ஓய்ஞ்சேன்.

மனசே சரியில்லை. என்னடா பெருமாளே இப்படிப் பண்ணிட்டே?

 அடிபட்டவன் பேசாம நம்ம வீட்டுக்கே வந்துருந்தால் அவனை நம்ம வெட்னரி க்ளினிக் கொண்டுபோய் காப்பாத்தி இருக்கலாமுல்லெ?  பாவம்....குழந்தை. இப்படி ஒரு முடிவு வந்துச்சே:(

தொடரும்..........:-(




25 comments:

said...

மரியாவை கண்டுபிடிக்க என்னவொரு சுற்று....!

முடிவில் ரொம்பவே வருத்தம்...

said...

மரியா..... ஒருவழியா கண்டுபிடிச்சாச்சு.....

முடிவு - மனதைக் கலக்கியது.....

said...

மகிழ்ச்சியாக பயணித்துக் கொண்டிருந்தபோது இறுதியில் ஒரு சோகம்.

said...

ஐயோ, இப்படி ஒரு சோகமா?

said...

மரியாவை கண்டுபிடித்த மகிழ்ச்சி மனதுக்குள் நிறைவதற்குள், இப்படி ஒரு சோகமா..?

said...

செல்லப்பிராணின்னாலும் சட்டுன்னு இப்படி ஆகும் போது மனசு கஷ்டமாத்தான் இருக்கு. நாங்க ராஜான்னு ஒரு நாய் வெச்சிருந்தோம். தெருநாய்தான். குட்டியா இருந்தப்போ காம்பவுண்டுக்குள்ள எப்படியோ வந்துருச்சு. ஒரு கைப்பிடி சோறு போட்டதுதான் எங்க வேலை. அப்புறம் அதுக்கு எங்க வீடுதான் வீடுன்னு இருந்துச்சு. அதக் குளிப்பாட்டி சீராட்டி ஊசியெல்லாம் போட்டு வெச்சிருந்தோம். என்ன செஞ்சாலும் பேசாம இருக்கும். நான் அது மேல தண்ணிய ஊத்தி சோப்பைப் போட்டுக் குளிப்பாட்டுவேன். பேசாம இருக்கும். அதுக்கும் இது மாதிரிதான் ஆச்சு. யாரோ இடிச்சிட்டுப் போயிட்டாங்க. அது போச்சேன்னு பாமரேனியன் வாங்கினோம். ஆனா அது செல்லத்துலயும் செல்லமா வளந்துச்சு.

said...

மிக அழகான படங்கள் அருமையான பதிவு. சந்தோஷமாக படித்துக்கொண்டே வந்தேன். உங்க செல்லம் விஷயத்தை படித்ததும் சோகமாயிடுத்து. zeus- என் அனுதாபங்கள்.

said...

ஆஹா! மரியா ரொம்ப ப்யூட்டிஃபுல் ஸ்தலத்தில் !!!! ஆனா முடிவில் மனம் கொஞ்சம் வருத்தம்......

(கீதா: ம்ம் அந்தப் பூனை மிக அழகு சகோதரி! ச்சோ ஸ்வீட்ட்...உங்களைப் போல நானும் அழுது.....சாம்பல் நிறம் சாம்பலாகிவிட்டதே....னானும் எனது மகனும் நாலுகால் பிரியர்கள்...எனது மகன் வெட்!

said...

findout mariya is super and yr pet cat is so ,,,,, i feel sad akka

said...

நிறைய முறை இந்த இடங்கள் பார்த்திருக்கிறேன். உணல் அழகான புகைப் படங்கள் மூலம் மீண்டும் பயணித்த நிறைவு.

பூனையை இழந்ததிற்கு என் வருத்தங்கள். இருக்கும் போது செல்லப் பிராணிகள் கொடுக்கும் சந்தோஷத்தை, போகும்போது வேரடிமண்ணோடு அள்ளிச் சென்றுவிடுகின்றன.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

ஆமாங்க ...அன்னைக்கு ரொம்பவே மனசு சங்கடப்பட்டுப்போச்சு:( ப்ச்....

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

அவன் முடிவு இப்படி வந்துருக்க வேணாம்:(

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

சம்பவத்தை விட்டுட்டு எழுதி இருக்கலாம்தான். ஆனால் பயண அனுபவங்கள் உள்ளது உள்ளபடி ஒரு நினைவுக்காக வேணுமென்பதால் இப்படி சோகத்தையும் சொல்ல வேண்டியதாப்போச்சு:(

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

சோகமும் வாழ்க்கையில் ஒரு பகுதியாக ஆகித்தானே இருக்கு:(

said...

வாங்க செந்தில் குமார்.

அன்றைக்கு இன்பமும் துன்பமும் ஒருசேர வந்துருச்சு:(

said...

வாங்க ஜிரா.

சட்னு வந்த முடிவுதான் கலக்கத்தைக் கொடுத்துருச்சு.

செல்லங்களை வளர்ப்பவர்கள் அவர்களைப் பிரியும் சமயம் சீக்கிரமாகவே வரும் என்பதை மனதில் வச்சுக்க மறந்து போயிடறோம். அவுங்களுக்கும் மனிதர்களுக்கும் ஆயுட்காலம் வெவ்வேறுதானே!

said...

வாங்க ரமா ரவி.

சோகத்தில் பங்கெடுத்து சொன்ன ஆறுதல் சொற்களை மகளிடம் சேர்த்தேன்.

நன்றி சொல்லச் சொன்னாள்.

said...

வாங்க துளசிதரன் & கீதா.

நாற்காலிப் பிரியர்கள் என்பது மகிழ்ச்சியைத் தருகிறது.

மரியாவின் அழகை முழுசுமா ரசிக்க முடியாமல் மனசு தவிச்சது உண்மை.

ஒவ்வொரு செல்லத்தையும் பிரியும்போது இருக்கும் வலி இருக்கே.... சொல்லி மாளாது. அதைத்தான் என் செல்லச் செல்வங்கள் என்ற புத்தகத்தின் மூலம் சொல்லி இருக்கேன். என் முதல் புத்தகம் அது.

மகனுக்கு எங்கள் அன்பும் ஆசிகளும்.

said...

வாங்க மீரா.

அதுகள் கொடுக்கும் அன்பும், பிரியும்போது தரும் வலியும் அளவில்லாததே!

said...

வாங்க மோகன்ஜி.


சத்தியமான உண்மை. புரிதலுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

said...

செல்லப் பிராணிகளின் வயசு குறைவு. செல்லப் பிராணி வளர்க்கும் எல்லோருக்கும் தெரியும் இழப்பு இது. நாங்கள் செல்லி என்னும் பெண்நாயை வளர்த்துப் பறி கொடுத்தபோது என் இளைய மகன் இரண்டு நாள் அழுதிருக்கிறான் .

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

மனசுக்குள்ளே ஆறாத வடு உண்டாக்கிட்டுப் போயிருதுங்க இந்தச் செல்லங்கள்:(

விவாகரத்து கேட்டு பிரிஞ்சு போகும் மக்கள் கூட செல்லங்களை தாமே வச்சுக்கன்னு பெரிய சண்டையெல்லாம் போடுவதுண்டு.

said...

OH Zeus. why did you choose to go. so sad Thulasi. adhuvum kashtappattup poyirukkaan. makal manam ARanum.

said...

வாங்க வல்லி.

பாவம்.இத்தனைக் கஷ்டம் அதுக்கு வந்திருக்க வேணாம்:( ப்ச்....

said...

இப்போதான் பதிவுகளை படித்து வருகிறேன் . zeus குறித்து எங்கள் வருத்தமும் ஆறுதலும் மதுமிதாவிற்கும் உங்களுக்கும் . செல்ல பிராணிகள் நம்மோடு வெகு தூரம் பயணிப்பதில்லை அவற்றின் பிரிவை தாங்குவது கடினம் .zeus is a very cute pet .