Friday, October 30, 2015

எளக்கிய வியாதிகளின் ஒன்றுகூடல் ! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 91)

ரொம்பவே சம்பவங்கள் இல்லாமல் கடந்துபோன நாளா இதைச் சொல்லலாம். மரத்தடி மகளிர் ஒன்று கூடல் வச்சுக்கலாமுன்னு....   எல்லா இந்தியப் பயணங்களிலும்  ஒருநாளை இப்படி நேர்ந்துவிடுவது வழக்கம்தான். சரியான நாளா அமைவதுதான்  கொஞ்சம் கஷ்டமாப் போயிரும். ஆயிரத்தெட்டு வேலைகளுக்கு நடுவில் இலக்கியம் வாசிப்பதும், எழுத்தாளினிகளா இருப்பதும் சுலபமா என்ன?

இந்த ஒன்றுகூடலுக்கு  எனக்கு சப்போர்ட் வேணுமேன்னு  எப்பவும் நம்ம அண்ணனையும் அண்ணியையும் சேர்த்துக்குவேன்:-)  நம்ம அண்ணிக்கும் மற்ற தோழிகளுக்கும் பத்துப் பொருத்தம் என்பதால்  ஜமா சேர்ந்தால் ஜாலிதான்.
 தமிழ்குஷி எஃபெம் ரேடியோன்னு ஒரு இண்டர்நெட் ரேடியோ வருது தெரியுமோ?  அதுக்கான பேட்டி ஒன்னு எடுத்துக்கணுமுன்னு  கவிதாயினி மதுமிதா  கொஞ்சம் சீக்கிரமா வந்தாங்க.  ஆட்டோகிராஃப் என்னும் நிகழ்ச்சி.  அட! பேட்டி கொடுக்கும் அளவுக்குப் பெரிய ஆளா ஆகிட்டேனே!!!!!!
டிசம்பர் 19 அன்று ஒலிபரப்பினாங்க. அப்புறமும் எதோ ஒலிபரப்பில் குழப்பம் என்று  இன்னொருநாளும் வந்ததாம்:-)

ஒருமணி நேரம் இப்படி ஓடுனதும் மற்ற தோழிகளும் அண்ணன்,அண்ணியும் வந்தாங்க.  நம்ம லோட்டஸில்தான் சந்திப்பு.   ரெண்டு அறை இருப்பதால் மகளிர் அணியும் மகனர் அணியும் தனித்தனியான உரையாடல்களில்.

அன்பளிப்பு. எதோ சேதி சொல்லுதோ?
அரட்டைக் கச்சேரியைப் பாதியில் நிறுத்திட்டு கீழே இருக்கும் சென்னை 24 இல் சாப்பிடப்போனோம். அங்கேயும் அணிகள் தனித்தனியாகவே:-)


அவரவருக்கு  விருப்பமான சாப்பாடு. எனக்கு தென்னிந்திய தாலி:-)

ரெண்டு மணி ஆச்சு நாங்க சாப்பிட்டு முடிக்க. இன்னும் கொஞ்சநேரம் இருந்தால் கட்டிடமே இடிஞ்சு விழுந்திருக்கும் என்றார் நம்ம கோபால். மனைவி கொஞ்சம்கூடத் திரும்பிப் பார்க்காமல் பேச்சுகளில் மூழ்கிப்போனதைக் கவனிச்ச அண்ணனுக்கு வியப்பு!!!!
மாடித்தோட்ட மக்கள் என்னமோ சீரியஸா பேசிக்கிட்டு இருந்தாங்கதான்!
அறைக்குப்போய் இன்னும் கொஞ்சம் கதைகள்  பேசிகிட்டு இருந்தோம்.  கோபாலும் அண்ணனும் தையக்கடைக்குப்போனாங்க. தைக்கக் கொடுத்திருந்த துணிகளை வாங்கிக்கணும். பையைக் கொண்டு வந்து வச்சதும்  எண்ணிக்கை சரியா இருக்கான்னு பார்த்தப்ப, உஷா கேலி பண்ணறாங்க, எல்லாமே ஒரே பப்பளபளபளன்னு  இருக்குன்னு. என்னோடது நாலு செட் தாங்க. ஸில்க் காட்டன். அதிலும் போனபயணத்தில் எடுத்துப்போன அதே நிறத்தில் அதே ஸ்டைலில் இப்பவும் ஒன்னு எப்படியோ வாங்கி இருக்கேன். இன்றைக்குப் போட்டுக்கிட்டு இருப்பது அதுதான். இப்பல்லாம் கவனக்குறைவும்,ஞாபக மறதியும் அதிகமாப்போச்சு :-(


இங்கே நியூஸியில் விசேஷங்களுக்குப் போகும்போது நல்லா உடுத்துப் போனால்தானே மனசுக்கு திருப்தியா இருக்கும். அதுவுமில்லாமல் சென்னையா இது? எப்பப் பார்த்தாலும் வேர்த்து விறுவிறுத்து வேர்வையில் ஊறிப்போய்க் கிடக்க?

என்னால் அழுதுவடியும் நிறத்தில் உடுத்திக்க முடியாது? பளிச்ன்னு இருந்தால்தான் பிடிக்கும். அதிலும் பச்சைன்னா விடமுடியுதா சொல்லுங்க? அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டுமுன்னு விட்டுட்டேன்!

இன்னொன்னும் சொல்லணும். ஸில்க் காட்டன் சல்வார் கமீஸ் துணிகள் கிடைப்பது ரொம்பக் கஷ்டமா இருக்கு. அப்படியே கிடைச்சாலும்  நல்ல வண்ணங்கள்  கிடைப்பது குறைவு.  ஒரே டிஸைன்தான். சின்ன பார்டர். துப்பட்டா மட்டும் ரொம்ப சூப்பரா அமர்க்களமா இருக்கு.  அடுத்தமுறை காஞ்சீபுரத்தில்தான் தேடணும். நம்ம பாண்டவதூதனைப் பார்க்கப் போகணும்தானே?

மூணு மணிக்குத் தோழிகள் ஒவ்வொருத்தராக் கிளம்புனாங்க. ஆரம்பிச்சு வச்சது நம்ம லக்ஷ்மிதான்.  கனியை பள்ளிக்கூடத்தில் இருந்து பிக் பண்ணனும். பறவைக் கூட்டத்தில் சின்னக் கல் எறிஞ்ச எஃபெக்ட்லெ எல்லோரும் பறந்தே போயிட்டாங்க.

அண்ணன் சொல்றார்.....   'லேடீஸ் இப்படியெல்லாம் ஜாலியா என்னா சத்தம் போட்டு பேசறீங்க!'  இன்னும் நம்ம சுயரூபம் அவருக்குக் காமிக்கலை. அடுத்தமுறை வச்சுக்கலாம்:-)

தோள்வலின்னு  நம்ம லோட்டஸ்க்கு  ரெண்டு பில்டிங் தள்ளி ஒரு அக்கூப்ரெஷர் சிகிச்சைக்குப் போய் வந்தது பற்றி ஏற்கெனவே இந்தத் தொடரின் ஆரம்பத்தில் (பகுதி 17) சொல்லி இருந்தேன். ஊர்ப்பயணம் முடிச்சதும் ஊருக்குத் திரும்புமுன் ஒருமுறை வந்துட்டுப்போங்கன்னு சொல்லி இருந்தாங்க.

நம்ம அண்ணிக்கும் முழங்காலில் ஒரு பிரச்சனை ஆயிருச்சு. வட இந்தியப்பயணம் போன இடத்தில் ரயிலைப்பிடிக்க ஓடிப்போய் ஏறும்போது   கால் சட்னு மடங்கி இருக்கு. லிகமெண்ட் போயிருச்சுன்னு  மியாட்லே  சிகிச்சை எடுத்துக்கிட்டாங்க. இன்னும் லேசா வலி இருக்கேன்னு அவுங்களுக்கும் ஒரு அக்கூப்ரெஷர் சிகிச்சை எடுத்துக்கலாமேன்னு சொல்லி அவுங்களோடு டாக்டர் ஜெயலக்ஷ்மியைச் சந்திக்கப் போனோம். நாம்  பெற்ற இன்பம் அவுங்களும் பெறட்டுமேன்னு! (எங்க பாட்டி இருந்துருந்தா.... வேற பழமொழி சொல்லி இருப்பாங்க. 'தான் ச்செடின கோத்தி, வனமந்த்தா ச்செடிபிந்திண்ட்டா' !!!! )

அவுங்களுக்கு  தனியா சிகிச்சை. என்ன, எங்கெ  எத்தனை முறை  நரம்புகளில்  அழுத்தம் கொடுக்கணுமுன்னு  சொல்லித் தந்தாங்க.  நான் அங்கே இப்போ பழைய  பேஷிண்ட் :-)   அவுங்க சொன்னதைத் தொடர்ந்து பயணகாலத்தில் செஞ்சதால் உண்மையிலேயே பலன் கிடைச்சது என்பதும் உண்மை. தோள்வலி குறைஞ்சுருக்கு. எங்களுக்கு நாலைஞ்சு யோகா பயிற்சி செய்யச் சொல்லித் தந்தாங்க.

நாலரை மணி ஆச்சேன்னு  அண்ணனும் அண்ணியும் கிளம்புனாங்க. நேரம் ஆக ஆக ட்ராஃபிக் அதிகமாப் போயிருதே!

நாங்களும்  அடையாறு அநந்தபதுமனை ஸேவிச்சுக்கிட்டு,  மகளுக்காக சிலபொருட்களை வாங்கிக்கலாமுன்னு கிளம்புனோம். லோட்டஸுக்கு வெளியே வந்தால்  எதிரில் நின்னுக்கிட்டு இருந்த ஆட்டோக்காரர் ஓடிவந்து கோபாலிடம், 'ஸார் நிஜமாவே அவ்ளவுதான் சார்ஜ்'ன்னார். இவரும்  அம்பது ரூ எடுத்துக் கொடுத்துத்தார். நன்றி சொல்லி அதை வாங்கிக்கிட்டுப் போனார் ஆட்டோக்காரர்.

நாந்தான் 'ஙே'ன்னு முழிச்சேன். அப்புறம்தான் கதை  தெரியவந்தது:-)

காலையில் எங்கும் போகவேண்டி இருக்காதுன்னு நம்ம சீனிவாசனை மாலை நாலுமணிக்கு வரச்சொல்லி இருந்தாராம். மதியம் சாப்பாட்டுக்குப் பின் தையற்கடைக்குப் போனாங்க பாருங்க. அப்ப அண்ணன் வண்டியில் போகாம  இங்கே ஆட்டோ எடுத்துருக்காங்க. பார்க்கிங் பிரச்சனை. எப்படியும்  அங்கே ஒரு  கால் மணியாவது  ஆகும்தானே ?ஆட்டோக்காரருன்னா எப்படியாவது  எங்கியாவது பார்க் பண்ணிருவாரே. போகவரன்னு சொல்லி இருக்காங்க.

டெய்லருக்கும் வர்றதாத் தகவல் சொல்லிட்டதால் அவர் எல்லாத்தையும் எடுத்து ரெடியா வச்சுருந்தாராம்.( இதுவே ஒரு அதிசயம்தான் போங்க!) ராம்ஸ் பில்டிங் போனதும்  துணிகளுக்குக் கணக்கை செட்டில் செஞ்சுட்டு உடனே  வந்துட்டாங்க. ஆட்டோக்காரர் அம்பதுன்னு சொன்னதுக்கு  அண்ணன், அதெல்லாம் ரொம்பவே அதிகம். அதிகநேரம் வெயிட்டிங் கூட இல்லை. நாப்பதே அதிகமுன்னு எடுத்துக் கொடுத்துருக்கார்.  ஆட்டோக்காரர், அம்பதுதான்னு கேட்டுப்பார்த்துட்டு,  எனக்கு வேணாம் சார்ன்னு காசை வாங்கிக்கலையாம். நம்மை அடையாளம் வச்சுருந்துருக்கார் போல. அதான் இப்போ நாம் வெளியே  வந்ததும் கேட்டுருக்கார்! கிடைச்சுருச்சு. என்னைக்கேட்டால் அம்பது ஓக்கேன்னுதான் இருக்கு. ஒருநாள்  பாண்டிபஸார் சரவணபவன் போக நாப்பது கொடுத்தமே.  இப்ப போகவர அம்பது சரிதானே?

அண்ணன்  ஆட்டோவில் போயே பலவருசங்களாச்சு.  பூனாவில் ஒரு  காலத்தில் (ஒரு  நாப்பது நாப்பத்தியஞ்சு  வருசங்களுக்கு முன்) போயிருப்பார். அப்புறம் ராஜ்தூத்,  ஸ்டேண்டர்ட், மாருதி என்றானபின்  ஆட்டோ பிடிக்கச் சான்ஸே இல்லை.  அந்த ஸ்டேண்டர்ட் காரை ஓட்டிப் பழகுனபோது  தைரியமா அவர்கூட வண்டியில் போன வீரன் நம்ம ச்சிண்ட்டு என்பதையும் சொல்லத்தான் வேணும்:-)

 சென்னைக்கு வந்தபிறகு  மாருதி போய், ஹூண்டாய்  வந்தது. இப்படியாக  இருக்கும்போது செய்திகளில் ஆட்டோக்காரர்கள் ரொம்பவே மோசம் என்றதையெல்லாம் கேட்டுட்டார் போல!  ஒரு சிலர் நியாயமா இருக்கத்தான் செய்யறாங்க. அந்த சிலர் யாருன்னுதான் நமக்குத் தெரியமாட்டேங்குது!

தொடரும்............  :-)







Wednesday, October 28, 2015

முதல்முறையா தியேட்டருக்குள் போனேன்! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 90)

சரியா நாலுமணிக்குக் கிளம்பி தியேட்டர் வளாகத்துக்குள்  நுழைஞ்சபோது மணி சரியா நாலரை. போலீஸ் குமிஞ்சு கிடக்கு வளாகத்தின் வாசலில்.   அதுக்குள்ளே கீழே இறங்கிப்போன கோபால், என்னிடம் ஒரு போர்டைக் காமிச்சார். அப்பதான் தெரியும்  சிலபல விஐபிக்களின் வருகை! மொத்தம் அறுவர். இதில் மூவர் பேச்சை ஏற்கெனவே  வேறிடத்தில் கேட்டுருக்கேன்.


இன்னொரு போர்டில் இன்னும் ஒரு ஐவர் பெயர்கள் இருந்தன. யாரையும் எனக்குத் தெரியாது. அதனால் என்ன இனி தெரிஞ்சுக்கணும்,இல்லே!

நியூஸியில் இருந்து கிளம்பும்போதே அரசல்புரசலாக் காதில் விழுந்த சேதி வெறும் நூல் வெளியீடு மட்டுமே! முடிஞ்சாப் போகணுமுன்னு நினைச்சேன். ஆனால் நம்ம பயணத்திட்டம் எப்படிப் போகுமோன்னு லேசா ஒரு சம்ஸயம் இருந்துச்சு.  சரியா இன்றைக்கு கோவில் பயணம் முடிச்சு சென்னைக்கு வந்துட்டதால்  தோழிகளுக்கு செல்லடிச்சுக் கேட்டால் சிலர் வருகை தருவதாச் சொல்லி இருந்தாங்க.

வாசலிலேயே கூட்டம் அதிகமாத் தெரிஞ்சதால் உள்ளே போய்  உக்காரலாமுன்னு போனோம். வட்டமான அரங்கம் இது. ம்யூஸியம் தியேட்டர்.  வெள்ளைக்காரர் நாட்டை ஆண்ட காலக்கட்டத்தில் 1851 இல்  கட்டியது.

மேடைக்கு நேர் எதிரில் இருக்கும் இருக்கைகள் எல்லாம் நிரம்பி வழியும் வாசகர் கூட்டம். இடதுபக்கம் கொஞ்சதூரத்தில் கொஞ்சம் இடங்கள் இருந்தன. நம்மாட்கள் வருவதால் ஒரு  ஏழெட்டு கிடைச்சால் தேவலை. துண்டு போட்டு வைக்கலாமான்னு  தோணும் நேரம் கவிதாயினி மதுமிதா, மகளுடன் வந்தாங்க. போய்  உக்கார்ந்தோம். ஒரு அஞ்சாறு நிமிச இடைவெளியில் எழுத்தாளர் ராமச்சந்திரன் உஷாவும், மலர்வனம் லக்ஷ்மி பாலகிருஷ்ணனும், குழந்தை கனிவமுதனும் வந்தாங்க. தொடர்ந்து  ஒலிக்கும் கணங்கள் நிர்மலா நிவேதிதா வந்து சங்கமம் ஆனாங்க.

கனிவமுதன் எப்பவும் நம்ம கோபால் செல்லம். அவுங்க ரெண்டுபேரும் ஒன்னா உக்கார்ந்து பேச ஆரம்பிச்சாங்க.  திடீர்னு  ஒருத்தர்  வந்து வணக்கம் சொல்லிக் கை குலுக்கினார். நம்ம  வெயிலான் ரமேஷ்!  தொடர்ந்து வந்து அறிமுகம் செஞ்சுக்கிட்டவர் நம்ம வெண்பூ வெங்கட்.  கொஞ்சநேரம் எங்ககூட உக்கார்ந்து  பேசிட்டுப் போனார்.
நண்பர் பாலபாரதி கையில் கெமெராவைக் கொடுத்தேன். ஜஸ்ட் ஒரு க்ளிக்:-)
 தெரிஞ்ச முகங்கள் இருக்கான்னு  தேடுனபோது, நம்ம பத்ரியும், ஹரன் பிரஸன்னாவும், ஜடாயு, அதியமான் ஆகியோர் கண்ணில் பட்டாங்க. மேடைக்கு முன்  இருந்த  ஏழு வரிசைகளில் இருந்தாங்க.  நம்ம அருண்மொழி ஜெயமோகனும் அதே இடத்தில் உக்கார்ந்துருந்தது எனக்கு வியப்பா இருந்தது.  மேடையில் இருப்பாங்கன்னு எதிர்பார்த்தேன்!



ஒரு பத்திருபது மீடியா மக்கள்ஸ், நிகழ்ச்சியைப் பதிவுசெய்ய வீடியோ கெமாராக்களுடன் வரிசைகட்டி இருந்தாங்க.




மேடையில் போட்டுருந்த இருக்கைகளில் முக்கியஸ்த்தர்கள் வந்து  அமர்ந்தனர். நடுநாயகமாக நம்ம அசோகமித்ரன். அவருக்கு  வலது புறம் நம்ம கமல். இடது பக்கம் இளையராஜாவுக்கு.இளையராஜா, போக்குவரத்து நெருக்கடியில் மாட்டிக்கிட்டாராம். கொஞ்சம் தாமதம் ஆகுமுன்னு சேதி அனுப்பினாராம்.


கமலுக்கு வலதுபக்கம் நம்ம ஜெமோ. அவருக்கு அடுத்து பி ஏ. கிருஷ்ணன். இந்தப்பக்கம் நம்ம  பிரபஞ்சனும் நாஞ்சில் நாடனுமா இருந்தாங்க. நம்ம ஜெமோ மட்டும்  கொஞ்சம் நெர்வஸா இருந்தாமாதிரித் தோணுச்சு. ஒரு சமயம் கவனிச்சப்ப  தலையில் வேறு எண்ணங்கள் ஓடிக்கிட்டு இருந்துச்சோ?  அடுத்து எழுதப்போகும் பகுதியின் யோசனை?


விஷ்ணுபுரம்  வாசகர் வட்டம் ஏற்பாடு செய்திருக்கும் நிகழ்ச்சி இது!  அந்தக் குழுவினர் அப்பழுக்கு சொல்லமுடியாத அளவில் பரபரன்னு வேலைகளை இழுத்துப்போட்டு அருமையா ஏற்பாடுகளைச் செஞ்சுருக்காங்க.முதலில் அனைவரையும் வரவேற்றுப் பேசினவர் பெயர் தெரியலை.

இன்றைக்கு  ஜெமோவின் மகாபாரதத்தின் முதல் நான்கு நூல்களின் வெளியீடு. முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம் என்பவை. ஏற்கெனவே படங்களுடன் வலையில் வாசிச்சு இருந்தாலும், அங்கே  அச்சுப்பிரதிகளைப் பார்த்தப்ப ஆசையா இருந்துச்சு என்பதும் உண்மை.  எடைன்னு ஒரு  சமாச்சாரத்தை எனக்கு நினைவு படுத்திக்கிட்டே இருந்தார் நம்ம கோபால் :-(

கடவுள் வாழ்த்தாகக் காக்கைச்சிறகிலே பாட்டைப் பாடினார் ஒரு இளைஞி.  கடவுள் வாழ்த்துன்னு  சொல்லமுடியாது....தான்.  ஏன்னா  யாரும் எழுந்து நிற்கலை! நிகழ்ச்சி ஆரம்ப வாழ்த்துன்னு சொல்லிக்கலாம்.

கூட்டம் இன்னும் சேர்ந்துக்கிட்டேதான் இருந்துச்சு.  படிகளிலும், இறங்கி உள்ளெ வரும் பாதைகளும் நிரம்பி வழிய ஆரம்பிச்சது.  கொஞ்சநேரம் கழிச்சு ஒரு  சலசலப்பு. மனுஷ்யபுத்திரன் வந்தார். அவரை உள்ளே கொண்டு வரக் கொஞ்சம் சிரமமா ஆகிருச்சுன்னு தோணுச்சு.

நம்ம சிறில் அலெக்ஸ் வந்து, 'இது ஒரு விழாவே இல்லை. ஒரு கொண்டாட்டமு'ன்னு தொடங்கி, அன்றைய விழாவில் சிறப்பு விருந்தினராக வந்த (மேடை மக்கள்) ஒவ்வொருவரைப் பற்றியும் விவரங்கள் சொல்லி வாழ்த்திப் பேசினார்.




அப்புறம் பி ஏ கிருஷ்ணன். இப்படி எல்லோரும் நல்லா பேசினாங்க. முழுசுமா அவுங்க பேச்சில் ஒன்றமுடியாத வகையில் நம்ம மக்கள்ஸ் படுத்துனதையும் சொல்லத்தான் வேணும். பொது நிகழ்ச்சிக்கு வரும்போது செல்பேசியை அணைச்சு வச்சுக்கத் தெரியாதவங்களா... இருந்தால் எப்படி? நம்மைச் சுத்தி எல்லாத் திசைகளில் இருந்தும் கால் வர்றதும், எடுத்துப்பேசுவதுமா ஒரு நடவடிக்கை, இருக்கைகளில் கொஞ்ச நேரம் தொடர்ந்து உக்காராமல்  எழுந்து போறதும்  திரும்ப வந்து  உக்காருவதுமா பலர். நம்மைக் கடந்து கடந்து போகும்போது  நாம் காலைக் குறுக்கி இடம் பண்ணிக் கொடுத்துக்கிட்டே இருக்கோம். இடிச்சுக்கிட்டும், காலை மிதிச்சுக்கிட்டும்............   ப்ச்.






மகாபாரதப் பிரசங்கிகள்னு அஞ்சு பேரை மேடைக்குக் கூப்பிட்டுக் கௌரவம் செஞ்சாங்க. இதுலே ரெண்டுபேர் மகாபாரதக் கூத்து  நடத்தறாங்க. இந்தக் கலை  இன்னும் எத்தனை நாளைக்கு உயிர்ப்புடன் இருக்குமோ தெரியலை.....

எங்கூர்  ஃபிஜித் தமிழர்களின் தீபாவளிக் கொண்டாட்டத்தில் இந்த வருஷம் 'தெர்க்கூத் 'நடக்கப்போகுது. போயிட்டு வந்து சொல்றேன்.

ஜெமோவின் மகாபாரதத்துக்கு  உயிரோவியம் வரையும்  ஷண்முகவேல் அவர்களை மேடைக்கு அழைச்சு கௌரவித்தார்கள். ஜெமோ தளத்தில்  முதல் அஞ்சு நூல்களுக்குப் பிறகு இவருடைய ஓவியம்  வர்றதில்லை. என்ன காரணமுன்னு தெரிஞ்சவங்க சொல்லுங்க. அப்புறம் இணையத்தில் பாரத மொழிபெயர்ப்பைச் செய்துவரும் அருட்செல்வப்பேரரசனை மேடைக்கு அழைச்சுப் பாராட்டுனாங்க.  அடுத்து நம்முடைய பாராட்டுகளைப் பெற்ற முக்கியமானவர் திருமதி ஜெமோதான். இவுங்கதான் முதலில் கௌரவிக்கப்பட வேண்டியவங்க. ஜெமோ நிம்மதியா எழுத முடியுதுன்னா......  இவுங்க ஒத்துழைப்பு இல்லாமல்  நடக்குமா என்ன?


இன்னும் நிறைய விவரங்களை நிகழ்சி நடந்ததும் சுடச்சுட நிறையப்பேர் எழுதி, நீங்களும் வாசிச்சு இருப்பீங்க என்றதால் கூடுதலா விஸ்தரிக்கலை. ஆச்சே கிட்டத்தட்ட ஒரு வருசம், இல்லையோ? ரொம்பவே ஆறிப்போச்சி கஞ்சி !

வெண்முரசு  தளம் யூ ட்யூபில் போட்டு வச்சுருக்கும் நிகழ்ச்சியை விருப்பம் உள்ளவர்கள் பாருங்க. விஜய் டிவியில் வந்ததாம்

எட்டுமணி போல நிகழ்ச்சி முடிஞ்சது. கிளம்பி வெளியில் வந்துட்டோம். அப்பதான் கவிதாயினி மதுமிதா, 'உள்ளே போய் அருண்மொழியைச் சந்திச்சுட்டுப் போகலாம்' என்றதும் திரும்ப மேடைக்குப் பின்புறம் போனோம். சந்திப்பு இனிது.

ஜெமோவுக்கு என்னைப் பார்த்ததும் கண்களில் சின்ன வியப்பு (இப்படியெல்லாம் சொல்லிக்குவேன்ல!) எப்ப வந்தீங்கனார்? கெத்தை விட்டுக்க முடியுதா? இந்த விழாவுக்காகவே வந்தேன்னேன்:-)

க்ளிக்ஸ் முடிச்சு எட்டரை மணிக்கு  வெளியில் வந்தோம்.  அன்றைய நாள்  நிறைவாக முடிஞ்சது. விழாவைத் தவறவிடலைன்னு ஒரு  மனமகிழ்ச்சி!

அன்று எடுத்த 108 படங்களில் ஒருமாதிரி பரவாயில்லைன்னு சொல்வதை  ஃபேஸ்புக் ஆல்பத்தில் இப்போ போட்டு வச்சேன். அதன் சுட்டி இது.


தொடரும்.........:-)



Tuesday, October 27, 2015

தோளில் துண்டு போட்டாத் தமிழன். இல்லைன்னா.........

உங்க பக்கத்துக் கல்யாண மாப்பிள்ளை வேணுமுன்னு  வட இந்தியத்தோழி கேட்டாங்க. அதுக்கென்ன  ஏற்பாடு செஞ்சால் போச்சுன்னு  சொன்னேன். விவரம் கேட்டப்ப, நம்மூர் திவாலி (தீபாவளி)திருவிழாவுக்கு கல்யாணப்பொண்ணு மாப்பிள்ளை உடையலங்காரம் டிஸ்ப்ளே செய்யறாங்களாம். ஆளுக்கு ஒரு பொறுப்பு எடுத்து நடத்துவதுதான் இங்கே!  ஊர் கூடி தேர் இழுக்கத்தானே வேணும்?

ஆனால் எங்க பக்கங்களில் ஜாதி, குடும்ப வழக்கம் இப்படி பலவிதமான அலங்காரங்கள் இருக்கே!  அதுவுமில்லாமல் எங்க வீட்டுலே தாலி கட்டும் சமயம் பட்டு உடுத்திக்கமாட்டோம். வெள்ளைப் புடவையையும் வேஷ்டி அங்கவஸ்த்திரம் எல்லாம்  மஞ்சள் நீரில் முக்கிஎடுத்து  அதை உலர்த்திக் கட்டுவோம். அதுவும் கல்யாணத்துக்கு முதல் நாள் இரவு நலுங்கு முடிஞ்சதும் மஞ்சள் இடிக்கும் நிகழ்ச்சி உண்டு. அந்தப்பொடியைத்தான்  நீரில் கலக்கித் துணிகளை நனைச்சு எடுத்து அப்பவே கொடிகட்டிக் காயவைப்பதுதான். சில குடும்பங்களில் சின்னதா சிகப்புக் கட்டம் போட்ட புடவையைக் கட்டுவதுண்டு.

சரி பொதுவா ஒரு அலங்காரம் செஞ்சுக்கலாம். பொண்ணுக்குப் பட்டு கட்டி விடலாமுன்னு சொன்னதும், 'காஞ்சீபூரம்'தானே கட்டுவீங்க. என்னிடம் ஒரு 'காஞ்சீபூரம்' இருக்குன்னு சொல்லி என் வயிற்றில் பால் வார்த்தாங்க.

ரங்கோலி, கோலம் பிரிவுக்கு என்னிடம் கேட்டாங்க. ஏற்கெனவே நடத்துன அனுபவம் இருக்குதான்.  ஆனால் அப்ப (போனமாசம்) ஃப்ளூ அட்டாக்கில் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட  ஒரு மாசம் பேசமுடியாமல் கிடந்தேன். குணமாக எவ்ளோ நாள் ஆகுமுன்னு தெரியாததால்  முடியாதுன்னு 'தலையை ஆட்டினேன்' !

எங்க நாட்டுத் தொழிலாளர் தினம் ஊர் உலகத்துக்கு இருக்கும் மே மாசம் ஒன்றாம்தேதி இல்லையாக்கும். அக்டோபர் மாதம் நாலாம் திங்கட்கிழமைதான். நியூஸியில் எட்டுமணி நேர வேலை என்ற சட்டம் கொண்டுவந்த நாள் இது!

இது திங்கட்கிழமை என்பதால் இதுக்கு முன்னால்வரும் சனி ஞாயிறோடு சேர்த்து லாங்க் வீக் எண்ட் நமக்குக் கிடைக்கும். அந்த வார இறுதியின் சனிக்கிழமை தீபாவளி கொண்டாடிக்குவோம் அது நவராத்ரி காலமாக இருந்தாலும் சரி!  எங்கூர் சிட்டிக்கவுன்ஸில் இதுக்குக் கொஞ்சம் நிதி உதவி கொடுப்பாங்க. திருவிழா கொண்டாட்டம் நடத்துவது  உள்ளூர் இண்டியன் ஸோஸியல் அன்ட் கல்ச்சுரல் க்ளப். இதை ஆரம்பிச்சவர் நம்ம  கோபால். உங்களுக்கெல்லாம் நல்லாவே தெரிஞ்சவர்தான்.

இந்திய சுதந்திர தினம் பொன்விழா(1997) நடந்த சமயம்தான்  இங்கேயும் முதல் மேடை நிகழ்ச்சி நடத்தினோம். அப்புறம் அதே வருசம் தீபாவளிக் கொண்டாட்டம் உறுப்பினர்களுக்கு மட்டும் நடந்தது. கொஞ்சம் கொஞ்சமா இது பெருசா வளர்ந்து  இப்போ பத்தாயிரம் பேர் கலந்துகொள்ளும் விழாவா மாறி இருக்கு.

எங்க நாட்டுப் பாராளுமன்றத்திலும் கடந்த சில வருசங்களா  தீபாவளி கொண்டாட ஆரம்பிச்சுட்டாங்க. நம்ம இண்டியன்  கம்யூனிட்டிக்கு  இதுவே ஒரு வெற்றி (மாதிரி)தான். நாட்டின் பெரிய நகரங்களில்  தீவாலி கொண்டாடுவது ஒரே நாளில் கிடையாது.   எதுக்கெடுத்தாலும் வீக் எண்டுக்கு நேர்ந்துவிடும் வழக்கம் உள்ளதால்  அந்தந்த நகருக்கு ஒவ்வொருநாள்ன்னு ஒதுக்கியாச்சு.  நமக்கு எப்பவும்  லேபர்டே வீக் எண்ட் முதல்நாள், சனிக்கிழமை.  இதுக்கு முதல் சனியில் ஆக்லாந்தில் கொண்டாட்டம் இருக்கும். வெலிங்டன் நகரில் அக்டோபர் 26 (நேத்துதான்), டனேடின் நகரில் வரும் நவம்பர் 15 இப்படி .  அசல் தீபாவளின்னு ஒன்னு இருக்கு பாருங்க அதை நம்ம வீட்டில் கொண்டாடிக்குவோம். சொல்ல மறந்துட்டேனே....   பட்டாஸ் வெடிப்பது  தீபாவளி  ஐட்டத்தில் ஒரு முக்கிய அங்கம் என்பதால் திருவிழாக் கொண்டாடத்தின் இறுதியில் கொஞ்சம் சின்ன அளவில் நடத்தவும் அனுமதி கிடைச்சிருக்கு.

இதையெல்லாம் அரசு அங்கீகரிக்காத  காலத்தில்  கை ஃபாக்ஸ் டே சமயத்தில் மட்டுமே அஞ்சு நாட்களுக்கு பட்டாஸ் விற்பனை இருக்கும். அது நவம்பர் அஞ்சாம் தேதி. கை ஃபாக்ஸ் தான் இங்கிலாந்தின் நரகாசூரன்!
இதைப்பற்றி எழுதியது இங்கே.

நமக்கோ தீபாவளி(அக்டோபர்-நவம்பர்)ஐப்பசி மாசத்தில் எப்போ வருதுன்னு தெரியாததால்  பட்டாஸ் விற்பனை நடக்கும் அந்த அஞ்சு நாட்களில் கொஞ்சம் வாங்கி ஸ்டாக் பண்ணிக்குவோம். வீட்டு தீபாவளிக்குக் கொஞ்சம் கொளுத்திக்கறதுதான்.

போன செவ்வாய்க்கிழமை 'அரை ஆளை' வீட்டுக்குக் கொண்டுவந்து கொடுத்தாங்க தோழி. கோபால் வந்ததும் சமாச்சாரம் சொல்லி உடைகளைக் கடன் கேட்டேன். அப்புறம் அலங்காரம் ஆரம்பிச்சது.  பொது இடத்தில் வேட்டி நழுவி விட்டால்..... உடுக்கை இழந்தான் ஆகிருவானோன்னு  இறுக்கமா இடுப்பில் கயிறு கட்டி கெட்டிப்படுத்தினோம். முழுக்கை சட்டை ஒன்னு போட்டுவிட்டதும் அண்டை மாநில மாப்பிள்ளையாத் தெரிஞ்சார்.  போடு ஒரு துண்டை தோளிலே!  இப்பத் தமிழ்நாட்டு மாப்பிள்ளையா ஆனார்(என்று நினைக்கிறேன்!)

வியாழனன்று வந்து கொண்டுபோறேன்னு சொன்ன தோழி வந்து பார்த்துட்டு, ரொம்ப நல்லா இருக்குன்னாங்க. நாங்க நல்ல உயரத்தில் உயர்த்தி வச்சதால் அவுங்க வண்டிக்குள்  அடங்கமாட்டார் என்பதால் மறுநாள் பெரிய வண்டி கொண்டு வந்து நேரா ஹாலுக்கே கொண்டு போறேன்னு சொல்லிப்போனாங்க.

மறுநாள்  மாப்பிள்ளை அழைப்பு:-) கொண்டு வந்த வண்டி நேத்து  வந்த அதே கார்! மாப்பிள்ளையை அபூர்வசகோதரர்கள் கமல் போல் குள்ளமாக்கிக் கூட்டிப்போனாங்க.  சட்டை மடிப்பு கலைஞ்சுருமேன்னால்.... நாங்கள் அங்கே அயர்ன் பண்ணிப் போடுவோம் என்றதும் ஓக்கேன்னுட்டேன்.

மறுநாள் விழா.  மூணு முதல் அஞ்சு வரை க்ராஃப்ட் ஷோ, கோலம் வரைதல், இத்தியாதிகள். அதே மணி மூணுமுதல் இரவு பத்துவரை சாப்பாடு வகைகளுக்கான ஸ்டால்கள். அஞ்சு மணிக்கு மேடை நிகழ்ச்சிகள் ஆரம்பம். நாங்க ஒரு மூணேமுக்காலுக்குப் போய்ச் சேர்ந்தோம்.  போன முறைகளைப்போல கார்பார்க்கிங் காசு வசூல் செய்யலை. நல்லதாப்போச்சு.  ஆனால் கடந்து போனவருசங்களில் நுழைவுக்கட்டணம் அஞ்சு டாலர்தான். இந்த வருசம் அது ரெட்டிப்பு! நல்ல லாபம்தான். பதினைஞ்சுக்குப் பதிலா இப்ப இருபது  கிடைக்கும்படி செஞ்சுட்டாங்க! கில்லாடிங்கப்பா!

உள்ளே நுழையும்போதே இப்போதைய துணைத்தலைவர்  வாங்கன்னார்.
 அனைவரையும் வரவேற்க பூமுகத்தில் புள்ளையார். அவரைச் சுத்திப் புடவைகளோ புடவைகள். வண்ணமயம்தான்!

அப்புறம்  கடைகள். முக்கியமா மெஹெந்தி, ஆடை , அலங்காரம் வகைகள்.
குளுகுளான்னு ஒரு  பதார்த்தம். இது ஃபிஜி இந்தியர்களின் பலகாரவகை. இதைப் பற்றிய மேல்விவரம் இங்கே.


நமக்கான ஸ்பெஷலா ஒன்னு கிடைச்சது.  ஆனால் ஒரே எண்ணெய். என்னம்மா இப்படிப் பண்ணிட்டீங்களேம்மான்னு அந்த ஃபிஜித் தோழியிடம் சொன்னேன்.
 நியூஸி காவல்துறை, நம்ம சமூகத்தில் குற்றங்களைக் குறைக்க என்னென்ன செய்யலாமுன்னு சொல்ல ஒரு கடை போட்டுருந்தாங்க! 'இக்கடச்சூடு'ன்னேன்:-)
அப்புறம் கடைகளை வேடிக்கை பார்த்துட்டுக்கிட்டுக் கண்ணில் பட்ட தோழியருடன் படங்களைக் கிளிக்கிக்கிட்டுப் போறோம்.




நம்ம ஜன்னுவுக்கு ஒரு நெக்லேஸ் வாங்கினோம். கோபால் செலக்‌ஷன்.  எனெக்கென்னமோ சுமாரா இருந்துச்சு. அதை இப்போ நம்ம க்ருஷ்ணாப் பாப்பா போட்டுக்கிட்டு இருக்கான்:-)


கல்யாண அலங்காரத்திற்காக  ஒரு மேசையில் நிறைய தலைப்பாகைகள்  வச்சுருந்தாங்க. அப்பவாவது நான்  கொஞ்சம்  கவனமா மாப்பிள்ளை  அங்கே நிற்பதைப் பார்த்து இருந்துருக்கலாம். ஒரு வெள்ளைக்காரம்மா, என்ன விலைன்னு கேட்டாங்க. இது சும்மா டிஸ்ப்ளேதான்னு சொல்லி,  இங்கே புதுசா ஆரம்பிச்சு இருக்கும் ஆடை அலங்காரக்கடை 'ஜல்ஸா' பற்றிச் சொன்னேன்.
புதுக் கல்யாண ஜோடி அலங்காரத்தை ஒரு இளம்ஜோடிக்குச் செஞ்சுவிட்டாங்க ஜல்ஸா கடைக்காரம்மா.  நல்லத்தேன் இருக்கு!   பொதுவா க்ளிக்கினதோடு சரி. இன்னும் கொஞ்சம் அங்கே இங்கேன்னு வேடிக்கை பார்த்துட்டு அரங்கத்துக்குள் நுழைஞ்சோம்.



இந்தமுறை அரங்கத்தில் அமைப்பு  ரொம்பநல்லா இருந்துச்சு.  முந்தியெல்லாம்  நடுவில் தடுப்பு வச்சதுபோல் ரெண்டாப்பிரிச்சு ஒரு பக்கம் மேடை நிகழ்ச்சிகளுக்கும், இன்னொரு பக்கம் ஸ்டால்ஸ், சாப்பாட்டுக் கடைகள்னு வச்சுருப்பாங்க. நாங்கெல்லாம் ஸ்டால்ஸைடில் மாட்டிக்கிட்டு அங்கே என்ன நடக்குதுன்னு தெரியாமல் முழிப்போம்.  இந்த முறை எல்லா க்ராஃப்ட் கடைகளையும்  வெளிப்புறம் சுத்திவர இருக்கும்  முன்பகுதியில் வச்சுருந்தாங்க.  உள்ளே நுழைஞ்சதும் மேடைக்கு எதிர்ப்புறமா  அரைவட்ட வடிவில் உணவுக்கடைகள். தடுப்புகள் ஒன்னும் இல்லை.  எல்லா இடத்தில் இருந்தும் மேடை தெரியும்படியா இருந்தது எனக்கு ரொம்பவே பிடிச்சுருந்தது!

 இதுக்கு இடையில் ஒரு தாற்காலிக மேடை அமைப்பில் ரெண்டு 'லேடீஸ் இன் ரெட்'  ஆடிக்கிட்டு இருந்தாங்க.  பாவாடையில் ஓரத்தில் கம்பி வச்ச  உடுப்பானதால்  அதைப் பிடிச்சுக்கிட்டே  வெறும் அசைவுகள்!  பார்க்க ஏதோ ஷோ கேஸ் பொம்மைகள்  ஆடுவதைப்போலத்தான்!

இது நடக்குமிடம் எங்கூர்  ஹார்ன்காஸில் ஸ்டேடியம்.  பாஸ்கெட் பால் ஆட்டத்துக்கான இண்டோர் அமைப்பு.  விளையாட்டுகள்தவிர, ஹோம் ஷோ, இசை நிகழ்ச்சிகள், இன்னும் சிலபல கண்காட்சிகள் இங்கேதான் நடத்துவாங்க. ரொம்ப விசாலமான இடம்.  கட்டி முடிச்சு  இப்போ பதினேழு வருசங்களாச்சு. (1998)

நெட்பால் நடக்கும் சமயம் 7200 பேர்  உக்காரும் வசதியும், இசை நிகழ்ச்சி நடக்கும்போது 8888 பேருக்கான இருக்கை வசதிகளும் உண்டு! இதுக்குப் பக்கத்துலேயே  ரக்பி ஆட்டத்துக்கான புது ஸ்டேடியமும் (2012) கட்டிட்டாங்க. இதுலே 18,000 பேர்  உக்காரும் வசதி இருக்கு.  இப்படி  ரெண்டு பெரிய விளையாட்டு அரங்கங்கள் ஒரே வளாகத்தில்   இருப்பதால் பார்க்கிங் ஏரியாவும் ரொம்பவே பெருசுதான்! எங்க பழைய ஸ்டேடியம் நிலநடுக்கத்தில் பாழாப்போச்சு:-(

உணவுக்கடைகளில் முதலா இருந்தது நம்ம  தமிழ்ச்சங்கத்தின் கடைதான். எதுக்கும் இருக்கட்டுமுன்னு ஒரு மசால்வடையும், ஒரு உளுந்துவடையும் வாங்கிப் பையில் போட்டோம்!
அடுத்த ஸ்டாலில் தண்ணி விக்கறாங்க. திவாலின்னு பெயர் போட்டது.  விலை  மூணு டாலர்!

கடைகளையும் நண்பர்களையும் பார்த்துக்கிட்டே போனதில் ஒரு பஞ்சாபி கடையில் (முக்கால்வாசி பஞ்சாபிகள் கடைகளே என்பது வேற விஷயம்!) 'ஜலேபி' சுடச்சுட ரொம்பநல்லா இருக்கு. சமோஸா சூப்பர்'ன்னு சொல்லி ஒரு பஞ்சாபி தோழி கடைவரைக்கும் இழுத்துக்கிட்டுப்போய், பஞ்சாபியில் பேசி நம்மைக் கவனிக்கச் சொல்லிட்டாங்க. பேய்முழி முழிச்சுக்கிட்டு நிற்கும் விநாடியில்  சுடச்சுட சமோஸா ரெண்டு நம்மை நோக்கி  நீட்டப்பட்டன. அடுத்து 'ஜலேபி'.

வேற வழியில்லாமல்  வாங்கி முழுங்க வேண்டியதாப் போச்சு.  இனிமேல் தாங்காதுன்னு நாங்க மாடிக்குப்போய் இடம் பார்த்து உட்காந்தோம்.

நிகழ்ச்சி ஆரம்பிக்க  இன்னும் நாலு சொச்ச நிமிசம்தானாம்!

பதிவின் நீளம் கருதி பாக்கி......

தொடரும்.........:-)