Monday, August 21, 2017

எங்கெங்கு காணினும்..... (இந்திய மண்ணில் பயணம் 46)

நூத்தி ஏழு ஏக்கர் நிலத்தில்  தரை முழுசும்  பளபளன்னு மின்னும் சலவைக்கல்!  அலங்காரமா உசந்து நிக்கும்  பளிங்குத் தூண்கள்.  புத்தர் நினைவிடங்கள்,  கோவில்களில் இருக்கறதைப்போல   பெரிய ஸ்தூபா  இப்படி  என்னென்னவோ இருந்தாலும்,  கண்ணைக் கட்டி இழுத்து நிறுத்துவது  நம்ம யானைகள்தான்!

ஒவ்வொன்னும் லைஃப் சைஸ் என்ற வகையில் உண்மை யானைகள் அளவில்தான்.  ஹைய்யோ..... வரிசை கட்டி நிக்குதுகள்!     அதுவும் மேடையில்  ஏறி!  எத்தனை இருக்குமுன்னு  எண்ண முடியாது.....
அறுவது ன்னு கணக்கு சொல்றாங்க. ராஜஸ்தான் கற்களாம்.  இப்படி ஒரு யானைப்ரேமி  நம்ம 'மாயாவதி பெஹன்'னு எனக்கு முதலில் தெரியவே தெரியாது.

அப்பப்பப் பத்திரிகை சேதிகளில் யானைச்சிலை யானைச்சிலைன்னு வாசிச்சதுதான்!

பரா இமாம்பாராவில் இருந்து கிளம்புன நாங்கள் நேரா வந்து சேர்ந்த  இடம்   பீம்ராவ் அம்பேட்கர் மெமோரியல் பார்க். கிட்டத்தட்ட ஒரு எட்டேமுக்கால் கிமீ தூரம்.   அட்டகாசமான சாலை!  இருவது நிமிட்ஸ்லே வந்தாச்சுன்னா பாருங்க!

ஒரு பாலம் போல இருக்கும்  பைபாஸ் சாலையின்  ஒரு இடத்தில் வண்டியை நிறுத்துன வினோத் இங்கெருந்து  பார்த்தால் முழுசாத் தெரியுமுன்னு சொன்னார்!
கீழே   கொஞ்ச தூரத்தில் புத்த ஸ்தூபா மாதிரி இருந்துச்சு.  வலது பக்கம் ரொம்ப தூரத்தில் யானை வரிசையோ?   கெமெராக் கண்ணை அனுப்பிக் கிட்டக்கக் கொண்டு வந்தேன்.....ஹைய்யோ!!!!
இங்கே கொஞ்சம் க்ளிக்ஸ் முடிச்சுக்கிட்டு  அங்கே வாசலுக்குப் போகலாமுன்னு  சொன்னதால்   அப்படியே ஆச்சு.
சாலையின் அழகும், அகலமும், தரமும் எந்த ஒரு வெளிநாட்டு  அழகுக்கும்   குறைஞ்சதில்லை!   இந்தியாவா இது?  ஹா.....
சாலையின் நடுவில்   அலங்கார மேடை அமைப்பின் நடுவில்   நாலு திசையிலும் நாலு புத்தர்கள்.  நின்ற திருக்கோலம்!
கீழே இறங்கும் சாலையில்  சமாஜிக் பரிவர்த்தன் ப்ரதீக் ஸ்தல் என்ற பெயருடன் ஒரு கட்டடம். அதில்  ரெண்டு சிலைகள்.  ஒன்னு  டாக்டர் அம்பேட்கர், இன்னொன்னு பெஹன் மாயாவதி.

நினைவு மண்டபம் (?) வாசலில் போய் இறங்கினோம்.  முகப்புக் கட்டடத்துக்கே  ரொம்ப தூரம் நடக்கணும். பளிங்குத் தரையும், செயற்கை நீரூற்றும், அதில் இருக்கும் யானைகளுமா ஒரு வரவேற்பு.   டிக்கெட் உண்டு உள்ளே போய்ப் பார்க்க. ஆளுக்குப் பத்து ரூ!



தோட்டமும் செடிகளுமா  அருமை!  இன்னும் கொஞ்சதூரம் நடந்து போனால் உள்ளே போகும் மெயின் கேட்!  வாசலில் ரெண்டு பக்கமும் யானைகள்.   15 ஜனவரி, 2003 ஆம் வருசம் பொதுமக்களுக்காகத் திறந்து வச்சுருக்காங்க  பெஹன்.  அப்போ அவுங்கதான் உத்தரப்ரதேஷின் முதல்வர்.     நாலு முறை முதல்வரா இருந்துருக்காங்க.
அவுங்க அரசியல் வாழ்க்கை, ஆட்சி இதெல்லாம் எனக்கு சரியாத் தெரியாதுன்னாலும் அவுங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.  காரணம்....  அவுங்களும் யானைப்ரேமி  :-)

இந்த லக்நோவுக்குள் நுழைஞ்சதுலே இருந்து   'கேள்விப்பட்ட' யானைகளைக் கண் தேடிக்கிட்டே இருந்துச்சு. ஆனால் இதெல்லாம் தனியா ஒரு இடத்தில் இருக்குமுன்னு நினைச்சுப் பார்க்கலை.  ஊர் முழுசும் அங்கங்கே இருக்கும் என்ற எண்ணம்தான்....ஹிஹி...

ஆமாம்.... அது என்ன ஜனவரி 15க்குத் திறந்து வச்சுருக்காங்க?

 அன்றைக்குத்தானே அவுங்க பொறந்தநாள் :-)

கல்வெட்டைக் க்ளிக்கினதும், கேமெரா பேட்டரி உயிரை விட்டுச்சு.  காலையில் இருந்து  நைமிசாரண்யம், பரா இமாம்பரான்னு  ஏகப்பட்ட படங்கள் எடுத்ததில்  ரெண்டு பேட்டரியும்  தீர்ந்தே போச்சு.   இனி செல் கேமெராவே சரணம்  :-(
சமயம் பார்த்து இப்படிக் கழுத்தறுத்துருச்சேன்னு கொஞ்சம் சோகம்தான்.
முப்பது நாப்பதடி உயரம் இருக்கும்  பளிங்குத் தூண்கள்   ஏராளமா அங்கங்கே நிக்குது.  அதன் உச்சியில் திசைக்கொன்னாப் பார்க்கும் நாலு யானைகள்.
இது மெயின் கேட்டின் உட்புறம்.  ரெண்டு பக்கங்களிலும்  ஆண்கள், பெண்களுக்கான கழிவறைகள் இங்கே (மட்டும்)தான் இருக்கு.
மொத்த இடத்தையும் சுத்தி வந்தோமுன்னா கிட்டத்தட்ட  நாலரை லட்சம்  சதுர மீட்டர்களா இருக்கும்.  கால்கள் அசந்துதான் போகுது.   சில இடங்களில் பளிங்கு இருக்கைகள் போட்டுருக்காங்க.  வெயில் நேரத்துலே போனா....   பளிங்குத் தரைக்கும் அதுக்கும் சூடு பொங்கி  வரும். தாங்க முடியாது. நல்ல வேளையா  காலணியைக் கழட்டச் சொல்லலை என்றது ஆறுதல்.

(தாஜ்மஹல் தரையில் வெறுங்காலோடு ஓடுனது  இன்னும் மனசில் ஒட்டிக்கிட்டுத்தான் இருக்கு.  அன்றைக்கு 51 டிகிரி.  ஜூன் மாசம் 1994.  நேரம்  மட்ட மத்யானம். )

கொஞ்சம் சின்னச் செடிகளாத்தான் இருக்கு, நிழலுக்கு மரம்   ஏதும் இல்லைன்னு  சிலர் சொல்லிக்கிட்டு இருக்காங்கதான். இதுலே இன்னொரு விஷயமும் இருக்கு.  மரங்களை வச்சால் பறவைகள் வந்து கூடும்.  சும்மா உக்காருமோ?  எச்சமிட்டு எச்சமிட்டுக் கீழே பளிங்குத்தரை முழுக்க  அழுக்கு .... கழுவிவிட ஆட்கள் வைச்சு அது நதநதன்னு   அசிங்கமா இருக்காது?   என்னவோ போங்க.... எதுக்கெடுத்தாலும் குற்றம் கண்டுபிடிச்சுக்கிட்டுக் குறை சொல்லிக்கிட்டு இருந்தா நல்லாவா இருக்கு?

இங்கே பார்வையாளர் நேரம் காலை 11 முதல்  மாலை 9 வரை  என்பதால் கொஞ்சம் வெயில்தாழப் போனால் நிம்மதியாச் சுத்தி வரலாம்.  நாமும் போனது  மாலை  நாலே முக்காலுக்கு என்பதால்  வெயில் சமாளிக்க முடிஞ்சது. இத்தனைக்கும்  இது கோடை காலம் கூட இல்லை.
நினைவகக் கட்டடத்துக்குள்  நாங்க போகலை. உள்ளே பெரிய பெரிய சிலைகள் (மனிதர்கள்) இருக்குன்னாலும்.... நின்னு பார்க்க நேரம் இல்லை. காலையில் இருந்து சுத்திக்கிட்டு இருக்கோமா.... களைப்புதான்.
நமக்கு வேண்டிய யானைஸ் எல்லாம் வெளியிலேயே இருக்கறதால் நல்லதாப் போச்சு.  விளக்கு அலங்காரங்கள் கூட ரொம்ப நல்லா இருக்குமாம். இருட்டும்வரை காத்திருக்காம திரும்பிட்டோம்.
வரிசைக்கு முப்பதுன்னு எதிரும் புதிருமா  அறுபது யானைகளைப் பார்த்து வாயடைச்சு நின்னேன்தான்.  எப்படி க்ளிக்கினாலும் மொத்த  யானைகளையும்  ஒரே ப்ரேமில் அடக்க முடியாது.  இந்த அழகில் கையில் இருக்கறது செல்ஃபோன் கெமெரா மட்டுமே.....ப்ச்.
அரசியல் சார்ந்த குழு ஒன்னு  எதிர்ப்பு காமிக்கிறோமுன்னு ஒரு நாள் இங்கே புகுந்து யானைகளை சிதைக்க ஆரம்பிச்சுருக்காங்க..... (பாவம்.... அதுகள் என்ன செஞ்சது?) நல்லவேளையா அதைத் தடுத்து நிறுத்துன கையோடு  ராத்திரியோட ராத்திரியா  பழுதான யானையைச் சரிப்படுத்திட்டாங்கன்னு சேதி.
அது ஒருவேளை இந்த யானையோ?
யானைகளுக்குப்பின்னாலே ஏகப்பட்ட அரசியல் இருக்கு பாருங்க.....
அரசாங்க கஜானாவைக் காலி பண்ணிட்டாங்க, பொது மக்கள் பணம் எல்லாம் போச்சுன்னு  ஏகப்பட்ட  குற்றச்சாட்டுகளும் குழப்பங்களும்  ஒரு பக்கம் இருக்க...
நம்ம  மாதிரியே இன்னொரு ஜோடியும்  யானை பார்க்க வந்துருக்கு !!!

பொதுவா எல்லா பெரிய   கட்டடங்களும்  ஒருவித வேலை வாய்ப்பைக் கொடுத்துருக்கு, இல்லையோ?  கொஞ்ச நேரத்துக்கு  முன்னே நாம் பார்த்த அந்த பரா இமாம்பாராவும்  சனம்  பஞ்சம் பொழைக்கக் கட்டுனதாகத்தானே சொன்னாங்க.

இங்கேயும் எத்தனை பேருக்கு  வேலை கிடைச்சுருக்கும் கட்டுமானத்தின் சமயம்....!

கட்டுன வீட்டுக்குப் பழுது சொல்ல நம்ம சனம் எப்பவும் ரெடி  :-(

இங்கேயாச்சும் தனியா ஒரு இடத்துலே  நினைவகம் கட்டி இருக்காங்க. நம்ம சிங்காரச் சென்னையில் பாருங்க....     உலகின் நீளமான கடற்கரை என்ற  பெத்த பெயர்  வச்சுருக்கும் மெரினாவை சமாதிகள் வச்சு இடுகாடா ஆக்கி வச்சுருக்காங்க.... ப்ச்.....   என்னமோ போங்க.....
கொஞ்சம் நின்னு நிதானமாப் பார்க்க வேண்டிய இடம், என்னைப் பொருத்தவரையில்....
இதுக்காகவே இன்னொரு முறை இந்த ஊருக்கு  வந்து ஒரு வாரம் தங்கத்தான் வேணும்.

கிளம்பி ஹொட்டேலுக்கு  வந்துட்டோம். களைப்பா இருக்குன்னு ஒரு காஃபி குடிக்க  கீழேஇருக்கும் ரெஸ்ட்டாரண்ட் போனால் பக்கோரா   கிடைச்சது!      நம்ம பஜ்ஜிதான்:-)
கெமெரா பேட்டரிகளை எல்லாம் சார்ஜரில் போட்டுட்டு  வலை மேயும் கடமைகள் முடிச்சு, இன்னொருக்கா பெட்டிகளையெல்லாம் பேக் பண்ணி......

    நம்மவர் கிட்டே  இது ஒரு ....   பழக்கம். அதுவும் பொட்டி அடுக்கணுமுன்னா.... ரொம்பவே  சந்தோஷப்படுவார்.  நான் எப்பவும் சின்னதா ஒரு கேபின் பேக்லே  தினப்படிக்கானதை வச்சுக்குவேன்.  ரொம்பத் தேவைன்னா மாத்திரமே பெரிய பெட்டியைத் திறப்பேன்.  நம்மவரும் அப்படித்தான்.... என்ன ஒன்னு  தினமும்  ரெண்டுமுறை சில சமயம் மூணு முறை தேவை வந்துரும்  அவருக்குன்னே   :-)


ராச்சாப்பாட்டுக்கு   ரூம் சர்வீஸில் ஒரு தாலி மீல்ஸ். ரெண்டு பேருக்கு   இதுவே தாராளம்.
நாளைக்குக் காலை ஊரைவிட்டுக் கிளம்பணும். நல்லாத் தூங்கி  எழுந்தால் நீண்ட பயணத்தை சமாளிக்கலாம்:-)

தொடரும்........ :-)

PINகுறிப்பு :  படம் பார்க்க விருப்பம் இருந்தால்....  ஆல்பம் இங்கே :-)



18 comments:

said...

பிரம்மாண்டம், அழகு.

said...

யானைப் பிரேமி மாயாவதி - தில்லியை அடுத்த நோய்டாவிலும் இப்படி ஒரு பார்க் கட்டி இருக்கிறார். அங்கேயும் நிறைய யானைச் சிலைகள்.

அரசியல் எதிர்ப்பு என்றாலும், பல பேரின் உழைப்பை உடைப்பது எந்தவிதத்திலும் சரியல்ல. நம் ஊரில் பேருந்துகளையும், பொது சொத்தையும் எரிப்பதும், அழிப்பதும் கைவந்த கலையாயிற்றே....

தொடர்கிறேன்.

said...

//யானைப் பிரேமி மாயாவதி//
அவுங்க யானை பிரேமில்லாம் இல்லே. அவிங்க கட்சி சின்னம் அது.
நாளைக்கே வேற சின்னம் (புலி) தந்தாங்கன்னா, இவிங்களே எல்லா யானை சிலையையும் எடுத்துட்டு (உடைச்சிட்டு), எதிர்க்கட்சி மேல பலி போட்டுட்டு, புலி சிலையை எல்லா இடத்திலும் வச்சிருவாங்க. மக்களின் பொதுப்பணம் தானே. who cares ?

said...

ஹூம்! இவ்வளவு பெரிய இடம்...எனக்கென்னவோ அவ்வளவும் வேஸ்டாகத்தான் தெரிகிறது.இதிலிருந்து வருமானம் கிடையாது செலவு மட்டுமே. வெட்டவெளி நடைபாதையில் கிரானைட் இது ஒன்று போதும் இது விரயம் என்ற முடிவுக்கு வர.நேரிடையாக போய் பார்த்தால் இன்னும் கொஞ்சம் புரியும்.

said...

வாங்க ஸ்ரீராம்.

யானைகளைப் பார்த்து ஆ....னு வாய் பிளந்து நின்னேன்!!!!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

நொய்டா சமாச்சாரம் கூட கேள்விப் பட்டுருக்கேன். பார்க்கலாம்.... போக சந்தர்ப்பம் அமையுதான்னு.....

வரவர தில்லி வர்றதுக்கே யோசனையா இருக்கு.......

நம்ம சனத்துக்குப் பொது சொத்தை நாசம் செய்ய ரொம்பப்பிடிக்கும் :-(

said...

வாங்க விஸ்வநாத்.


புலி வராமல் இருக்கட்டுமுன்னு புள்ளையாரை வேண்டிக்கறேன்.

யானையைக் கட்சிச் சின்னமா வைக்கத் தோணுச்சு பாருங்க !!!!!

said...

வாங்க குமார்.

உலகின் பல இடங்களில் இப்படி நீங்க சொல்லும் 'விரயம்' இருக்கே! எல்லாத்துலேயும்
வருமானம் வேணுமுன்னா எப்படி?

said...

மாயாவதிஒரு ஆச்சரியப்படுத்தும் பிரமுகி. அவரை யானைப் பிரேமி என்கிறீர்கள் அதெல்லாம் இருக்க சான்ஸ் இல்லை யனை அவர்கள் கட்சி சின்னம்

said...

பீம்ராவ் அம்பேட்கர் மெமோரியல் பார்க்...ரொம்ப பிரமாண்டம்..


யானைகளும் கொள்ளை அழகு,.....

said...

ப்ரம்மாண்டமாத்தான் இருக்கு. என்ன இருந்தாலும் கட்சிச் சின்னத்தைப் ப்ராபல்யப் படுத்துவதில் இந்த அரசியல் கட்சிகளுக்குச் சொல்லியா தரணும்.

தப்பித் தவறி நட்ட நடு மத்யானத்துல அந்தப் பார்க்ல மாட்டிக்கிட்டா அவ்வளவுதான். சூட்டுல முழங்கால் வரை உருகினாலும் ஆச்சர்யப்படறதுக்கு இல்லை.

said...

பாராட்டப்படவேண்டிய பிரம்மாண்டம். அதே சமயம் மாயாவதி தன் அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்துவதற்காக இவ்வாறு கட்டினாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

said...

பிரமாண்டம்.கண்ணைக் கட்டுதே.

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

நல்லவேளை.... கட்சிச் சின்னம் கழுதையாக இல்லை !!!

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

ரசித்தமைக்கு நன்றி!

said...

வாங்க நெல்லைத் தமிழன்,

அதானே.... அரசியல் வியாதிகளுக்குச் சொல்லியா தரணும் :-)

நானும் மதியச் சூட்டை நினைச்சேன். தப்பிச்சோம்!

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

எல்லாத்துக்கும் பின்னணியில் அரசியல் இருக்கத்தான் செய்யுது!!

said...

வாங்க மாதேவி.

நநானும் வாய் பிளந்து பிரமிச்சு நின்னது உண்மை!!!