Monday, October 30, 2017

அழகு நடை போட்டு வரும் ஆண்டாள் செல்லம் ......(இந்திய மண்ணில் பயணம் 69)

"காலையில் நாலு மணிக்கு எழுப்பி விடுங்க!"

"எதுக்கு? அவ்ளோ சீக்கிரம்?" 

"வேலை இருக்கு..... அஞ்சு மணிக்கெல்லாம் ரெடியாகி கீழே போயிடணும்."

"அதான் எதுக்கு?"

"ஆண்டாள் கூடவே அம்மா மண்டபம் போய் வரப்போறேன்..."

சரி சரின்னு தலையாட்டிட்டு, எழுப்பி விடும்போது காலை  மணிஅஞ்சு :-(

ஐயோன்னு அரக்கப்பரக்கக் குளிச்சுட்டுக் கீழே ஓடிப்போய் பார்த்தால் தெருவே விரிச் !  பக்கத்துக் கட்டிட வாசலில் நின்ன  ஹயக்ரீவா வாட்ச்மேன் தாத்தா....  என்னம்மான்னு கேட்டுக்கிட்டு ஓடிவந்தார்.

"ஆண்டாள்  போயாச்சா? "

"போயாச்சு"

"எந்தப் பக்கம்?"

  ஒரு நிமிசம் யோசனை பண்ணிட்டுப் போயாச்சு....ன்னு இழுக்கறார். தினப்படி பார்க்கும் சமாச்சாரம் என்பதால்....  அதுலே மனசு பதியலை போல....

திடுதிடுன்னு  ஓடிவந்து  சேர்ந்துக்கிட்ட நம்மவர்,  மேளசத்தம் கேட்டே ரொம்ப நேரமாச்சுன்றார்.....

ப்ச்....  கொடுத்து வைக்கலை.    ஆனாலும் இன்றைய சண்டைக்கு அடி எடுத்துக் கொடுத்துட்டாள் ஆண்டாள் :-)

கோவிலுக்குப் போறமாதிரிதான் சத்தம் கேட்டுச்சாம்....

நல்லவேளையா இன்னும்  அவ்வளவா   ட்ராஃபிக் ஆரம்பிக்கலைன்னு  கோவிலைப் பார்த்து  நடக்கறோம்.  வழியில் முரளிக்கடையில் நல்ல கூட்டம்!  விடமுடியுதா?  நமக்கும் ஆச்சு.
குடிச்சு முடிக்கிற  நேரம்   லேசா   மேள சத்தம்  காதுலே விழ சுத்தும் முத்தும் பார்த்தால்.....

ஹைய்யோடா...... 

தங்கக்குடையும், தங்கக்குடமுமா.....

துலா மாசம் முழுசும் தங்கக்குடமாம்!
எங்கிருந்து வருதோன்னு  அப்படி ஒரு ட்ராஃபிக்!  சட்னு எப்போ ஆரம்பிச்சது?  ஆண்டாளுக்காகவே காத்திருந்தாங்களோ?  அந்த பஸ் ஏன் இப்படி அவளை இடிச்சுத் தள்ளறதுபோல் வருது? ஒரு நிமிட் நின்னு  வந்தால் என்ன?
இவள்தான் காலையும்  வாலையும்  வீசிப்போட்டு நடக்கறாளே....

கூட்டத்துக்குப் பழக்கப்பட்டதால்  அவளால் எதையும் சட்டை செய்யாம வர முடியுது!  நாந்தான் இங்கே ஓரமா நின்னு புலம்பிக்கிட்டு இருக்கேன்:-)
உள்ளூர் சனம்.... அவளைப் பார்த்த நொடியில் நின்னு கைகூப்புறது அருமை!  சின்னதா ஒரு வீடியோ எடுத்தேன்!



ராஜகோபுர வாசலுக்குள் நுழைஞ்சு போகும் ஆண்டாளைப் பின்தொடர்வதே  இனி என் கடமை!

குறுக்கே போகும் வீதிகளையும்,  அந்தந்த  வீதிகளுக்கான கோபுர வாசல்களையும் ஒவ்வொன்னாக் கடந்து போறாள் செல்லக்குட்டி!
மண்டபங்களையும்  கோபுர வாசல்களையும் இத்தனை அகலமாவும், உயரமாவும்  முன்யோசனையோடு  கட்டுனவர்களுக்கு  என் பணிவான வணக்கத்தை மனசுக்குள் சொல்லிக்கறேன்....
'பெருமாளே   என்ன கோலாகலம்.... அடுத்த ஜென்மத்தில்  எனக்கந்த  பாக்கியம் கிடைக்காதா'ன்னு  ஏக்கப் பார்வை பார்த்ததோ...... இந்த நாய் ஜென்மம்!
இதோ... ரங்கா கோபுரம் வந்தாச்சு. தடுப்பையெல்லாம்  விலக்கி வச்சுருக்காங்க.


திருவந்திக்காப்பு மண்டபம், ரங்கவிலாஸ் மண்டபம், கார்த்திகை கோபுர வாசல்  கடந்து  ஆர்யபடாள் வாசலுக்கு வந்தாச்சு.  இது மட்டும் கொஞ்சம் உயரம் குறைவோ...... லேசாக் குனிஞ்ச தலையுடன் உள்ளே காலடி வைக்கிறாள்.


சட்னு பெரிய கூட்டமா  சனம் சேர்ந்ததும்....   இனி அவள் வேலையை அவள் பார்க்கட்டுமுன்னு  விட்டுட்டேன்..     பொதுவா இந்த வாசலைத் தாண்டிப் படம் எடுக்க அனுமதி இல்லையே.....  விஸ்வரூப தரிசனத்துக்கு சனவரிசையில் மக்கள் நிக்கறாங்க!  காலை மணி ஆறு பன்னென்டு இப்போ!

நாங்க அப்படியே பிரகாரத்தில் வலம் போறோம். ஆலிநாடன் தெருதானே?

இந்த சந்நிதின்னு குறிப்பா ஏதும் இல்லை.....  ச்சும்மாக் கோவிலுக்குள் நடப்பதே போதுமுன்னு மனசுக்கு நிறைவா இருக்கு!  எல்லா சந்நிதிகளும் மூடித்தான் இருக்கும் இந்த நேரத்தில் என்பதும்  ஒரு காரணம் :-)

மொதல்லே பெருமாள் கண் முழிக்கட்டும்.  இவர் காலை ஆறுமணிக்கும், தாயார் காலை ஆறரைக்குமா (விஸ்வரூப) தரிசனம் கொடுக்கறாங்க.!
 (   ஹாஹா....  நம்ம  தாயார் முன்தூங்கி பின்னெழும் பாவையா இருக்காங்க போல!  எனக்கு ரொம்பப் பிடிச்சுருக்கு, பிடிச்சுருக்கு !) அடுத்ததாக  கண் முழிப்பவர் நம்ம சக்கரம். காலை ஏழு மணி!

தன்வந்திரி சந்நிதி, சொர்கவாசல், சந்த்ரபுஷ்கரணி பார்த்த கையோடு தாயார் சந்நிதிக்கு வந்துருந்தோம்.  காலை இலவச தரிசனத்துக்கு ஒரு வரிசை நிக்குது.  நீளம் குறைவுன்னதும் வாலில் சேர்ந்தோம். அருமையான தரிசனம்!  அம்மா எப்பவுமே  அருமைதான். பிகு ஒன்னும் அவ்வளவா பண்ணிக்கறதில்லை!

வலம் வரும்போது துளசி மாடமும், அதைத் தொட்டடுத்து நிக்கும் வில்வமரமும் மனசுக்கு சாந்தமான உணர்வைக் கொடுத்தது உண்மை!


அஞ்சுகுழி மூணுவாசல் முன்னாடி லக்ஷ்மிநாராயணர் ஸேவை சாதித்தார்!  சின்னதா ஒரு சந்நிதி!

கோவில் பூனைகள்  ப்ரேக்ஃபாஸ்ட்டுக்காக அங்கங்கே காத்திருக்குதுகள்.  என்னம்மான்னு கேட்டதும்... செப்பு வாய் திறந்து சின்னக்குரலில்  என்னமோ சொன்னது ஒன்னு!  பால் எங்கேன்னு   கேட்டுருக்குமோ?  இங்கே கோவில் பூனைகளுக்கு  காலையில் ஒருவேளை சாப்பாடு கொடுக்கும் கைங்கரியம் நடப்பதை போனமுறையே கவனிச்சேன்.  பெடிக்ரீ கொடுக்கறாங்க!


ஆயிரங்கால் மண்டபத்துப் பக்கம்  இருக்கும் யானை, எதிரில் சேஷராய மண்டபம், வெள்ளைக்கோபுரம் எல்லாம் தரிசனம் ஆச்சு.   ஆயிரங்கால் மண்டபத்தில் நம்ம ஸ்ரீ ராமானுஜர் ஆயிரத்தை முன்னிட்டு  மயிலை கலைக்குழுவினரின் நிகழ்ச்சி நடக்குதாம். எத்தனை மணிக்குன்னு விசாரிச்சுக்கணும்!
ராமானுஜர் சந்நிதி வழியாப்போய் கும்பிட்டதும்,  கால் லேசா கெஞ்ச ஆரம்பிச்சது!  அநேகமா ஒரு ரெண்டு மூணு கிமீ  இதுவரை  நடந்துருப்போமோ?  திரும்பிப்போக ஒரு கிமீ தூரம் இருக்கு.  எப்படியும்  ஒரு நாலு கிமீ, காலை நடையை சாதிச்சாச்சு இன்றைக்கு :-)

பெரிய பெரிய கோவில்களில் ப்ரகாரம் சுற்றியே ஆரோக்கியமா உடம்பை வச்சுக்க முடியும்! புண்ணியம் சேர்க்கறதும் அதுக்கான போனஸுமா டு இன் ஒன் :-)

என் கையில் கேமெரா பார்த்துட்டு, டிக்கெட் இருக்கான்னு  கொஞ்சம் மிரட்டும் குரலில் ஒரு ஆள் கேட்டதும்,  இன்னும் டிக்கெட் கவுன்ட்டர் திறக்கலைன்னு  சொன்னேன். படம் எடுக்கக்கூடாதுன்னுன்னு கையை ஆட்டிக்கிட்டே இருந்ததும் எரிச்சலா வந்தது. ஆளாளுக்கு நாட்டாமை....   'போய் கவுன்ட்டரைத் திற. டிக்கெட் வாங்கலாமு'ன்னதும்  முணுமுணுத்துக்கிட்டே போனார்.  கோவில் ஊழியர் இல்லை போல.....  சும்மா அடிச்சு விட்டால் எதாவது தேறுமான்னு பார்க்கும் ஆட்களில் ஒன்னு....

ரங்கவிலாஸ் மண்டபத்து முற்றத்துலே இருக்கும் கோவில்கடைகளில் ஒன்னு  திறக்கும் ஆயுத்தத்தில்!

ரங்கா கோபுரம், கட்டை கோபுரம், ராஜ கோபுரம்னு  ஒவ்வொன்னாக் கடந்து  போன வழியிலேயே திரும்பி வர்றோம்.    வெளியே நடைபாதை கொஞ்சம் பரவாயில்லை.  அம்மா உணவகம் பார்த்ததும்,  இதுவரை உள்ளே போய் பார்த்ததே இல்லையேன்னு உள்ளே போனால்  இட்லி தயாரா இருக்கு.  சட்னி கிடையாது. சாம்பார் மட்டும்தான்!

இடம் நல்ல சுத்தமா இருக்கு.  ஒருநாள் வந்து சாப்பிட்டுப் பார்க்கணும்.


ஹயக்ரீவாவுக்கு வந்து சேர்ந்தப்ப ,  நம்ம சீனிவாசன்  கார்பார்க்கில் வண்டியைத் துடைச்சுக்கிட்டு இருந்தார்.  ரூமுக்குப் போயிட்டு  வந்ததும்  இங்கே பாலாஜி பவனில் சாப்பிடலாமுன்னு  சொன்னதுக்கு, அவர் அம்மா கடையில் இட்லி  சாப்பிட்டாச்சாம்! 

பரவாயில்லை. எங்களோடு ஒரு காஃபியாச்சும் குடியுங்கன்னார் நம்மவர்.
நாமும்  இட்லி காஃபியை முடிச்சுட்டு, கொஞ்சநேரம்  வலை  மேய்ஞ்சு, மெயில் அனுப்பின்னு இருந்தோம். ஹயக்ரீவாவில் வைஃபை நல்லாவே இருக்கு!

கொஞ்ச நேரத்தில் கிளம்பலாம். ரெடியா இருங்க.


தொடரும்....:-)


Friday, October 27, 2017

துள்ஸி, உன் ஆசைக்காக......(இந்திய மண்ணில் பயணம் 68)

கண்ணுக்கு முன்னால் தெரியும் ராஜகோபுரம் வழியா நேராப்போய் கோவிலுக்குள் நுழையலாம்தான்....  இவ்ளோ போக்குவரத்து இல்லாமல் இருந்தால்.......  காலைத் தெருவுலே வைக்க இடமில்லையே.....  கோவிலையே வலம் வந்து  அங்கே இங்கேன்னு  போய் ரங்கா கோபுரத்தாண்டை இருக்கும் பார்க்கிங் பகுதியில் வண்டியைக் கொண்டுபோய் நிறுத்தியதும்,சகுனம் ரொம்பவே சரியா அமைஞ்சு போச்சு!
ஆனால் இவள், அவள் இல்லையாக்கும்...... !!!

புதுசா  காலணி பாதுகாப்புக்கு ஒரு கட்டடம்  கோபுரத்துக்கு அந்தாண்டைப்பக்கம்  கட்டியிருக்காங்க.   ரொம்ப நல்லது.  நிதானமா, நிம்மதியா  சாமி தரிசனம்  செஞ்சுக்கலாம் :-)
ரங்கா கோபுரவாசலுக்குள் போய்  ரெங்கவிலாஸ் மண்டபத்துக்குள் போறோம்.  நல்ல  கூட்டம் இருக்கேன்னு பார்த்தால்.... நம்ம ராமானுஜரின் ஆயிரம்  ஆண்டு விழாவின் அங்கமா சிறப்பு சொற்பொழிவு நடக்கறது.  தினமும் நடக்குதாமே!  இன்றைக்கு  சென்னை திரு வேங்கட கிருஷ்ணன்!  மாலை அஞ்சு முதல் ஆறுவரை. நாம் சரியா  அஞ்சு நாப்பத்தியெட்டுக்குப் போயிருக்கோம்.....  :-(  ப்ச்...
பத்து நிமிட் கேட்டுட்டு, கவுன்ட்டரில் போய் கெமெரா டிக்கெட் ஒன்னு வாங்கினேன். செல்ஃபோன் கேமெராதான் கையில் இருக்கு.  போகட்டும்....
ஆர்யபடாள் வாசலுக்குள் போய்  பெரிய திருவடியைக் கும்பிட்டுத் திரும்பினா ஊஞ்சல் மண்டபத்தாண்டை கூட்டம். என்னன்னு போய்ப் பார்த்தா....  ஹைய்யோ!!!!
பலமுறை ஸ்ரீரங்கம் போயிருந்தாலும், நம்பெருமாளை  இங்கே ஊஞ்சலில் பார்ப்பது இது முதல்முறை! ரொம்ப வருசத்துக்கு முந்தி,  கருவறையில் இருந்து நடையழகைக் காமிச்சுக்கிட்டே வெளிவரும் நம்பெருமாளை தரிசனம் செஞ்சோம்.  பயங்கர கூட்ட நெரிசல், நாங்க வேற  கைடு  காளிமுத்து கூட  வாசலுக்கு  நேரெதிரா  திண்ணையில்   மன்னர் விஜயரங்க சொக்கநாதர் குடும்பத்தோடு நிக்கறாரே  அவர் பக்கத்துலே நின்னுருந்தோம். நின்ன இடத்துலேயே நின்னு பார்த்ததுதான்.
இந்த நம்பெருமாள் இருக்காரே...  ஊர் சுத்தணுமுன்னா முதல் ஆளா ரெடியா நிப்பார்.  எப்போ கிளம்பச் சொன்னாலும் ரெடின்னு காமிக்கக் காலில் இருக்கும் செருப்பைக்கூடக் கழட்டறதில்லை!  கருவறைக்குள் போய் நிக்கும்போதும் காலில் செருப்பு!   பார்த்தீங்களா... அநியாயத்தை.... தங்கச் செருப்புன்னு பரவாயில்லையாக்கும்.....
வருசம் முன்னூத்தி அறுபத்தியஞ்சு நாளில்  கிட்டத்தட்ட முன்னூறுநாட்கள்  புறப்பாடுன்னு கிளம்பிடறார்.

வீதி உலா மட்டும்தான் போறாரோன்னு பார்த்தால் அதுவும் இல்லை.  ச்சும்மாவாச்சும்  கோவிலுக்குள்ளேயே இந்த மண்டபம், அந்த மண்டபமுன்னு போய்  ஸேவை சாதிச்சுட்டுச் சாயங்காலமா  கிடப்பில் இருக்கும் பெரியவரோடு போய் சேர்ந்துக்கறார்.

இதுலே பாருங்க..... எப்படித்தான் நாம் போற தினங்கள் தெரியுதோ.... அன்றைக்கு மட்டும் ரொம்ப நல்ல பிள்ளை வேஷம் போட்டுக்கிட்டு  வெளியே தலை காமிக்கிறதில்லை :-)

உள்ளூர்க்காரர்கள் எப்பவும்  'அங்கெ பார்த்தோம், இங்கே  பார்த்தோமு'ன்னு  சொல்றதைக் கேக்கும்போது....  ஐய்யோடா..... நாம் எப்போ பார்ப்போமுன்னு ஏக்கம் வந்துரும் எனக்கு.

அதனால்தான் ஒரு வருஷம் ஸ்ரீரங்கத்தில் தங்கி எல்லா ஸேவைகளையும் பார்த்து ரசிக்கணுமுன்னு  நம்மவரை நச்சரிச்சுக்கிட்டே இருப்பேன்.

அதெல்லாம் நடக்கற காரியமா?  ஒரு ஆறு, இல்லே மூணு.... ?  சரி யாருக்கும் வேணாம் ஒரே ஒரு மாசம்?

ஹூம்... ஒரு வாரம் சேர்ந்தாப்போல தங்குனாப்போதும் என்று ரொம்பவே இறங்கி வந்துருந்தேன்.....

இப்போ.... 'பார்க்கலைன்னு  குறை சொல்லிக்கிட்டே இருந்தியே...  இப்ப நல்லாப் பார்த்துக்கோ'ன்னு  ஊஞ்சல் ஸேவையில் மெள்ள ஆடிக்கிட்டே  சொல்றானோ!


டோலோத்ஸவம் நடக்கறது இப்போ. இன்றைக்கு நாலாம் நாளாம். மொத்தம் ஒன்பதுநாள் உற்சவம், ஏகாதசிக்கு முடியுமாம்.  1489 வது வருஷம், ஸ்ரீ கந்தாடை ராமானுஜரால் ஆரம்பிச்சு வைக்கப்பட்ட விழா! ஐப்பசி மாசம்   தீபாவளிப் பண்டிகைக்கு முன்னே இதெல்லாம். விழா முடிஞ்ச  மூணாம்/நாலாம் நாள்  தீபாவளி வந்தே வந்துரும் :-)

இந்த ஒன்பதுநாளும்   வந்தவுடனே  திருமஞ்சனம், அலங்காரம், ஆரத்தி, அரையர் ஸேவைன்னு கொண்டாட்டம்தான். முதல்நாளும் ஏழாம்நாளும் கூடவே தாயார் வந்து சேர்ந்துப்பாங்க.  மற்ற நாட்களில்  தனிக்கோவில் ராஜா!


படங்களை எடுக்கலாமுன்னா  கூட்டத்தில்  தலைகளாத்தான் தெரியறது....  சுத்தும் முத்தும் பார்த்தப்ப.... வாசக் கதவோரம் இருந்த படிக்கட்டு வாகா இருக்குமோன்னு அதுலே ஏறிப்போனா  தூண்கள் இடையில்  மறைக்கிறது. மெள்ள மேலே மண்டபத்துக்குப் போனால், இந்தாண்டை ஊஞ்சல் வியூ அட்டகாசம்.    பால்கனி ரெய்லிங் போலத்  தடுப்பு வேற!  சட்னு அங்கேயே உக்கார்ந்துட்டோம்.

கொஞ்ச நேரத்தில்  திரை போட்டாச்சு.   அரைமணி போல ஆகுமாம். கூட்டம் எல்லாம் இங்கே இருக்கு. நாம் போய் பெருமாளைப் பார்த்துட்டு வரலாமான்னார் நம்மவர்.  சரின்னு கீழே இறங்கிப் போனோம்.  அம்பது ரூ  டிக்கெட் இல்லையாம்.  விழாக்காலம்  வரவுக்கு என்ன  குறைச்சல்?  இருநூத்தியம்பது கிடைச்சது. 

பெரிய திருவடிக்கான நகை(நாக)நட்டு லிஸ்ட் இப்பதான் பார்த்தேன்!  ஓ....
அதெல்லாம் கூட்டம் இல்லாமல் இல்லை.  வரிசையில் முணுமுணுக்காமல் நின்னேன்.  பாத தரிசனமும்,  முகமண்டல தரிசனமும் ஆச்சு! தூண்களைப் பார்க்கணுமுன்னு நினைச்சுக்கிட்டே இருந்து இந்தமுறையும் கோட்டை விட்டேன். மறக்கடிச்சுடறான்.......

தரிசனம் முடிஞ்சதும் அந்தாண்டை  போகும் வழியில் போய் திரும்பக் கொடிமரத்தாண்டை வந்து சேரும்போது....   பிரஸாதங்களை ஒரு கூடையில் வச்சு பட்டர் ஒருத்தர் கொடுக்கறார்.  காசுக்குத்தான்.  நம்ம கீதாவும் ஒரு முறை சொல்லி இருந்தாங்க....    பிரஸாத ஸ்டாலில் விற்பது உண்மையில் அரங்கன் பிரஸாதமே கிடையாது. ஒப்பந்தக்காரர் செஞ்சு விற்கறது.  உண்மையில் அரங்கனுக்கு நைவேத்யமா  காண்பிப்பதை   சிலசமயம் பட்டர்கள், அவர்களுக்கான பங்கை   வெளியே  கொண்டுவந்து விற்பது உண்டுன்னு!

ஆஹா.....ன்னு பாய்ஞ்சு போய்  மூணு தோசைகளும், ரெண்டு  வடையுமா வாங்கிக்கிட்டேன்.  அப்புறம் சாப்பிட்டுக்கலாமுன்னு ஒரு பையில் போட்டு வச்சோம்.
'எதுக்கும்மா இவ்ளோ வாங்கிட்டே'ன்னார் இவர்.  'இருக்கட்டும்....    கிடைச்ச சான்ஸை விடமுடியலை'ன்னேன்.  சீனிவாசனும் இருக்காரே....

இதுக்குத்தான் அன்னமூர்த்திப்பெருமாளை அடிக்கடி  போய்த்  தொந்திரவு பண்ணப்டாதுங்கறது!  ஒரு முறை கும்பிட்டாலே  இந்த  உயிர் உள்ளவரை சாப்பாட்டுக்குக் கேரண்டியா இருப்பவரை...   போறப்பெல்லாம் போய்க் கும்பிட்டா? இந்தா இந்தான்னு கொடுத்துக்கிட்டே இருக்கார். தின்னத்தான் இன்னொரு வாயும் வயிறும் நமக்கில்லை....

திரும்ப 'நம்ம இடத்துக்கே' போய்  நம்பெருமாளைப் பார்த்துக்கிட்டே  உக்காந்தாச்சு.
நாதஸ்வரமும் தவிலுமா  முழங்கறது!  நல்லாவே வாசிக்கிறாங்க!
வாத்யம், ப்ரபந்தம், சாமரமுன்னு  எல்லாமே   அட்டகாசம் போங்க!


தொரக்குனா.... இட்டுவன்ட்டி ஸேவா........


எட்டே முக்கால் போல திரும்பத்   திரை போட்டுட்டாங்க.  ஐயா டான்னு ஒன்பதுக்குக் கிளம்பிப் போயிருவாராம்!  (அதானே  ஆத்தா  வையுமுல்லே! )
  அவர் அப்படிப்போனதும்  நாங்களும் கிளம்பி இப்படி வெளியே வந்து  காலணி பாதுகாப்பகம் போனால்....

அங்கே நீளமா இருக்கும் படிக்கட்டில் உக்கார்ந்துருந்த  வயசான அம்மா, கை நீட்டுனாங்க. பசியாம்!  நம்மவர் சொல்றார், 'பிரஸாதம் வச்சுருக்கேயே, கொஞ்சம் கொடேன். '

சாமி ப்ரஸாதம்  வேணுமான்னு கேட்டேன்.  வேணாமாம். காசுதான் வேணுமாம்!

தானே  தானே பர் லிக்கா ஹை.... கானே வாலாக்கா நாம்!

ரூம் சர்வீஸில் பால் வரவழைச்சு, பிரஸாத டின்னர் ஆச்சு !

தொடரும்........  :-)